கோடை விடுமுறையும் , குடும்ப விவாதமும்.
கோடை விடுமுறைக்கு
குற்றாலம் செல்வோம் என்கிறாள் மகள் .
கொடைக்கானல், ஊட்டி
செல்வோம் என்கிறான் மகன் .
திருசெந்தூர் , பழனி
செல்வோம் என்கிறாள் மனைவி .
புன்னகையோடு கேட்டுக் கொண்டிருக்கிறான்
கணவன் .
ஹாய்...டாட் ...
சம்மர் வெகேசனுக்கு
சிங்கப்பூர் ,மலேசியா வேண்டாம்
பாரிஸ் போகலாம் என்கிறாள் மகள் .
லண்டன் போலாம் என்கிறான் மகன் .
ஆஸ்திரேலியாவில் உள்ள தன்
அக்கா வீட்டிற்குப் போகலாம்
என்கிறாள் அம்மா .
எனி ஒன் ஒ.கே என்கிறார் அப்பா .
லீவுக்கு விறகு பொறுக்கப் போ
என்கிறாள் அம்மா .
செங்கல் சூளைக்குப் போ
என்கிறார் அப்பா .
வெயிலுக்குள்ள படிக்கிற புள்ள
எதுக்கு ?
தீப்பெட்டி ஆபிஸ் போ
என்கிறான் அண்ணன் .
இப்படியாக விவாதம்
நடக்கிறது
அவரவர் வீட்டில் .
மு.மகேந்திர பாபு , மதுரை.
செல் - 96861 41410.
நன்றி - தமிழ்நாடு இபேப்பர்.காம் - 02-05-2024
0 Comments