ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
இயல் 1 - கற்கண்டு - தொடர் இலக்கணம்
நிகழ்நிலை சான்றிதழ்த் தேர்வு - 3
வினா உருவாக்கம்
புலவர்.ரெ.துவாரகன் , தமிழாசிரியர் ,
காட்டூர் பாப்பாக்குறிச்சி , திருச்சி.
பசுமைக்கவிஞர். மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர், மதுரை - 97861 41410
தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும் தினம் ஒரு சான்றிதழ்த்தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர் , படிக்கும் வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற எண்ணிற்கு வாட்சாப்பில் அனுப்பி ஆன்லைன் தேர்வு இணைப்பினைப் பெறலாம்.
****************** ********* **************
1) ஒரு சொற்றொடரில் அமையும் வினைச்சொல் ------ ஆகும்.
அ) பயனிலை
ஆ) பெயர்
இ) பண்பு
ஈ) ஏதுமில்லை
விடை : அ ) பயனிலை
2) செய்பவரை முதன்மைப் படுத்தும் வினை ------
அ) உடன்பாட்டுவினை
ஆ) பிறவினை
இ) தன்வினை
ஈ ) செய்வினை
விடை : ஈ ) செய்வினை
3) செயப்படுபொருளை முதன்மைப் படுத்தும் வினை -----
அ) தன்வினை
ஆ) செய்வினை
இ) செயப்பாட்டுவினை
ஈ) பிறவினை
விடை : இ ) செயப்பாட்டு வினை
4) படித்த மாணவன் - இலக்கணக் குறிப்பு
அ) பெயரெச்சம்
ஆ) வினையெச்சம்
இ) வியங்கோள் வினைமுற்று
ஈ) பண்புத்தொகை
விடை : அ ) பெயரெச்சம்
5 ) கீழ்க்கண்டவற்றுள் எது
வினையாலணையும் பெயர்?
அ) அணையா விளக்கு
ஆ) படித்த மாணவன்
இ) வாழ்க வாழ்க
ஈ) அனுப்புநர்
விடை : ஈ ) அனுப்புநர்
6) சொன்னவள் கலா - இது ------- பயனிலை ஆகும்.
அ) வினைப்பயனிலை
ஆ) பெயர்ப்பயனிலை
இ) வினாப்பயனிலை
ஈ.) வேற்றுமைத்தொகை
விடை : ஆ ) பெயர்ப்பயனிலை
7) ஒரு தொடரில் பயன் நிலைத்து இருக்கும் இடம் ------ ஆகும்.
அ) எழுவாய்
ஆ) செயப்படுபொருள்
இ) பயனிலை
ஈ ) உவம உருபு
விடை : இ ) பயனிலை
8 ) ஒரு தொடரில் ------ இருக்க வேண்டும்
என்ற கட்டாயம் இல்லை.
அ) செயப்படுபொருள்
ஆ) எழுவாய்
இ) பயனிலை
ஈ ) வினை
விடை : அ ) செயப்படுபொருள்
9) பந்து உருண்டது என்பது ----- வினை
அ ) செய்வினை
ஆ ) செயப்பாட்டு வினை
இ) தன்வினை
ஈ ) பிறவினை
விடை : இ ) தன்வினை
10) நல்ல நூல் ஒன்று படித்தேன்
இத்தொடரில் நல்ல என்னும் சொல் -----
அ) வினையடை
ஆ) பெயரடை
இ) ஆகுபெயர்
ஈ) உரிச்சொல்
விடை : ஆ ) பெயரடை
11) மகிழ்நன் மெல்ல வந்தான் - இத்தொடரில் மெல்ல என்னும் சொல் ------
அ) பெயரடை
ஆ) வினையடை
இ) அடுக்குத்தொடர்
ஈ) பெயரெச்சம்
விடை : ஆ ) வினையடை
12) ' படு' என்னும் துணைவினைச்சொல்
------- தொடரில் சேர்ந்துவரும்.
அ) தன்வினை
ஆ) பிறவினை
இ) செய்வினை
ஈ) செயப்பாட்டுவினை
விடை : ஈ ) செயப்பாட்டு வினை
13) பதம் ----- வகைப்படும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ )ஐந்து
விடை : அ ) இரண்டு
14) பகுபத உறுப்புகள் ----- வகைப்படும்.
அ) 4
ஆ) 6
இ) 8
ஈ) 10
விடை : ஆ ) 6
15) பகுதி என்பதன் மற்றொரு பெயர் -----
அ) இடைநிலை
ஆ) இறுதிநிலை
இ) முதனிலை
ஈ) பயனிலை
விடை : இ ) முதனிலை
16) பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டும் உறுப்பு ------
அ) இடைநிலை
ஆ) சந்தி
இ) சாரியை
ஈ) எழுத்துப்பேறு
விடை : அ) இடைநிலை
17) சொல்லின் இறுதியில் நின்று திணை, பால் , எண் , இடம் காட்டுவது ----- ஆகும்.
அ) பகுதி
ஆ) விகுதி
இ) இடைநிலை
ஈ) சந்தி
விடை : ஆ ) விகுதி
18 ) தமிழமுதன் நேற்று வந்தான் ------
தொடர்.
அ) தன்வினை
ஆ) பிறவினை
இ) செய்வினை
ஈ) செயப்பாட்டுவினை
விடை : அ ) தன்வினை
19 ) பூக்களைப் பறிக்காதீர் ----- தொடர்.
அ) உணர்ச்சித்தொடர்
ஆ) வினாத்தொடர்
இ) கட்டளைத்தொடர்
ஈ) தன்வினைத்தொடர்
விடை : இ ) கட்டளைத்தொடர்
20) பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து ------ ஆகும்.
அ) சந்தி
ஆ) சாரியை
இ ) விகாரம்
ஈ ) எழுத்துப்பேறு
விடை : ஈ ) எழுத்துப்பேறு
*************** ************** **************
4 Comments
Good
ReplyDeleteA
ReplyDelete18th qn?
ReplyDeletegood
Delete