சங்கம் வச்சுத் தமிழ் வளர்த்த மதுரதானடா ! பாடல் - மு.மகேந்திர பாபு / SANGAM VACHU TAMIL VALARTHA MADURAI

 

மு.மகேந்திர பாபுவின் பாடல்.

எங்க மண்ணும் மனசும் ஒன்னுதான்
கருணை தெரியும் கண்ணுதான்
ஆதித்தமிழன் நாங்கதான் - உலகம்
ஆளும் தமிழன் நாங்கதான்

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரதானடா !
தங்கம் போல ஜொலிஜொலிக்கும் மனசுதானடா !
எங்கும் எதிலும் இருக்குதடா எங்க பேரு !
சிங்கம் போல நடையைத் தினமும் நீயும் பாரு !

முத்தமிழும் இருக்குதடா மொத்தமாக !
முழங்கிடுவோம் பறையிசைத்துச் சத்தமாக !
வைகை ஆத்து வெள்ளம் போல உள்ளம் தானடா !
மகிழ்ச்சியோடு வாழும் எங்க இல்லம் தானடா !

மலை இருக்கும் இடமெல்லாம் கலை இருக்குமே !
சினம் இருக்கும் இடத்திலும் குணம் இருக்குமே !
நட்புக்காகக் கொடுத்திடுவோம் உயிரைக் கூடத்தான் !
கூடச் சேர்ந்து கரம் பிடித்து நீயும் ஆடத்தான் !

மாதங்களால் அழகு பெறும் வீதிதானடா !
மனம் நிறையச் சொல்லுமே சேதிதானடா !
பட்டிமன்றம் பாட்டுமன்றம் நாங்க தானடா !
சிரிக்க வைக்கும் சினிமாவிலும் நாங்க தானடா !

தலைகளாலே நிறைந்திருக்கும் தமுக்கம் பாரு
தரணியிலே மதுர போல இருக்குதா ஊரு ?
மல்லிப் பூவின் வாசம் அது மதுரக்காரன் பாசம்
ஜிகர்தண்டா குடிடா ! பறக்குது மீன் கொடிடா !

Show quoted text

மு.மகேந்திர பாபு வின் பாடல்

புதிய உலகம் படைக்கப் பிறந்தோம் நாங்கள்
இனி பூக்கள் போல உதிர்வதில்லை நாங்கள்
பூமிப் பந்தைப் புரட்டிப் போடுவோம் நாங்கள்
புதுமை செய்து புரட்சி செய்வோம் நாங்கள்

கல்விதானே எங்களுக்கு இரு கண்கள்
கவலை அழித்து சாதிப்போம் நாம் புதுமைப் பெண்கள்
அடுப்படியில் இடுப்பொடிய இருந்ததெல்லாம் அன்று
அகிலம் போற்ற உயர்கின்றோம் புதுமைப் பெண்கள் இன்று

அச்சம் மடம் நாணம் எல்லாம் உள்ளுக்குள்ளதான்
அடிமை விலங்கு அடிமையாகும் சொல்லுக்குள்ளதான்
தலை குனிந்து நடக்க மாட்டோம் எங்கள் வாழ்விலே
தலை குனிவைத் தரவும் மாட்டோம் எங்கள் வாழ்விலே

சாதனைகள் எழுதிச் செல்வோம் ஏடு தன்னிலே
வேதனைகள் நீங்கச் செய்வோம் வீடு தன்னிலே
போதனைகள் நித்தம் சொல்வோம் நாடு தன்னிலே
சோதனைகள் தூக்கிக் கொல்வோம் தோள்கள் தன்னிலே !

மனித நேயம் காத்துதானே மாற்றம் செய்குவோம்
மரங்கள் வளர்த்து பசுமை காக்க ஏற்றம் செய்குவோம்
சாதி மதம் தூக்கி எறிவோம் மனதை விட்டுத்தான்
சாதனைகள் தொடர்ந்து செய்வோம் அச்சம்  விட்டுத்தான்

Show quoted text

Post a Comment

0 Comments