பொங்குது பொங்கல் - தைத்திருநாள்
புத்தம்புதுப் பொங்கப் பானை பொங்குது
தமிழ்ப் பூமிதனில் மகிழ்ச்சிதானே தங்குது
புத்தம் புதுப் பச்சரி வேகுது
நித்தம் அது வேளாண்மையைக் கூறுது
அப்போது எப்போதும் முப்போகம் தானே !
தப்பாது தரணியிலே மாமழை தானே !
ஏருதூக்கிப் போகுதையா வீறுகொண்ட கூட்டம்
ஏற்றமுடன் தொடங்கிடுமே தைத்திருநாள் ஆட்டம்
மண்ணும் விண்ணும் மக்களுக்குக் கண்ணாகும் !
எண்ணம் எங்கும் உயர்வினாலே பொன்னாகும் !
அமிழ்தான தமிழாலே அகம் மகிழும்
அன்பான உறவாலே அகிலம் புகழும்
வண்ணக் கோலம் வாசலிலே பூத்திருக்குதே !
கட்டிக் கரும்பு வாசலிலே காத்திருக்குதே !
மஞ்சள் செடி மங்களத்தைக் காட்டுதே !
எங்கள் வீட்டில் இன்பந்தனைக் கூட்டுதே !
உழவருக்குத் திருநாளாய் உள்ளத்திலே பெருநாளாய்
உன்னதத்தைத் தந்திடுமே வள்ளுவர் தினமே !
காணுகின்ற பொங்கலால் மாட்டிற்குப் பொங்கலால்
காட்டாற்று வெள்ளமாய் மாறுது மனமே !
ஊருசனம் சொக்குதையா ஒலிபெருக்கி ஓசையிலே !
உறவு வந்து நிக்குதையா தோள்கொடுக்கும் ஆசையிலே !
கொட்டுச் சத்தம் குலவைச் சத்தம் கேட்டிட
தமிழராய் மகிழ்ந்திட தைத்திருநாள் மலர்ந்ததே !
மு.மகேந்திர பாபு.
0 Comments