எங்க ஊரு பள்ளிக்கூடம் - பாடல் - மு .மகேந்திர பாபு.

 


பள்ளிக்கூடம் - பாடல் - மு .மகேந்திர பாபு.

எங்க ஊரு பள்ளிக்கூடம்
கண்கள் ரெண்டும் தினமும் தேடும்
நட்பினாலே நாட்கள் ஓடும்
நினைக்கும் போதே நெஞ்சம் ஆடும்

ஜோல்னாப் பையைத் தோளில் போட்டு
ஜோராகத்தான் நாங்க போவோம் !
பள்ளிப் படிப்ப முடிச்சு  நாங்க
பட்டப் படிப்பு படிச்சு நாங்க  கலெக்டராக  ஆவோம் நாங்க !

காக்கி டவுசர் வெள்ளைச் சட்டை
தூக்கிப் போட்டு நடக்கும் போது
மிடுக்கு கொஞ்சம்      தெரியும்  !
இளம் துடிப்பு அதில் விரியும் !
எங்க ஏக்கங்களும் புரியும் !

மொத மணிதான் அடிச்சதுமே
மூச்சிரைக்க நடப்போம் !
ரெண்டாம் மணி அடிக்கும் போது
வகுப்புக்குள்ளே இருப்போம்
நாங்க வகுப்புக்குள்ளே  இருப்போம் !

வாத்தியாரக் கண்டதுமே
வணக்கம் சொல்லி மகிழ்வோம் !
ஆடல் பாடல் செயல்களாலே
உண்மையிலே நெகிழ்வோம் !
உள்ளத்தாலே புகழ்வோம் !

ஒன்னுக்கா மணி அடிக்கும் போது
உற்சாகம்தான் பிறக்கும் !
நண்பனோடு சேர்ந்து வாங்கும்
கமர்கெட்டு வாசத்தில  மனம்
கவலைதனை மறக்கும் !

மத்தியான மணியடிக்க
மனசு பிடிக்கும் ஓட்டம் !
மணியடிச்சதுமே வந்து நிக்கும்
சத்துணவு கூடத்தில
சின்னதொரு கூட்டம் !

நெட்டசாரு குட்ட சாரு
குண்டு டீச்சர் , குச்சி டீச்சர்
விதவிதமா வச்சிடுவோம் பட்டப்பேரு
மாட்டிக்கிட்டு முழிக்கும் போது
நமக்குத்தானே கெட்ட  பேரு

எங்க வாத்தியாரு சாமியாக
வகுப்பறையே கோவிலாகும்
வாய்ப்பாட்டும்  தமிழ்ப்பாட்டும்
வகுப்பறையில் வேதமாகும்.
வாழ்க்கைக்கான  கீதமாகும்

சட்டப் பட்டனத்தான் மாட்டிவிட்டு
முடிய மெல்ல கோதிவிட்டு
கைகொடுத்து தூக்கிவிடும் வாத்தியாராலே
கண்கள்ரெண்டும் நீரில் முங்கும் பள்ளி நினைவுதானே நெஞ்சில் தங்கும்

வீட்டுச் சண்ட வீதிவர
வீட்டுக்குள்ளே நாம் கெடக்க
சாருங்க வண்டி வந்து நிக்கும்
நம்ம எதிர்காலம் பேசி பெத்தவங்க
மனச மெல்லத் தைக்கும்

வீட்டுமணி அடிச்ச பின்னே
கூட்டுச் சேர்ந்து வருவோம்
சின்னச் சின்னக் கதைகள் பேசி
சிரிப்பை மட்டும் தந்ததே
பள்ளிக் காலப் பருவம்

பாடல்

மு.மகேந்திர பாபு , ஆசிரியர் ,
பேச- 97861 41410.

Post a Comment

0 Comments