வா நண்பா தோள் கொடு ! - பாடல் - மு.மகேந்திர பாபு

 


மு.மகேந்திர பாபுவின் பாடல்

வா நண்பா தோள் கொடு !
பசுமை காண மரம் நடு !
நட்பில் இணைந்து விண் தொடு !
நாளை உலகம் நமதென கைகொடு !

மதுரை மண்ணின் பெருமை சொல்லும் இளைஞர் படை
எங்கள் எழுச்சியின் முன் இருப்பதில்லை வேகத்தடை
ஏற்றம் காண மாற்றம் தருமே எங்கள் நடை
முயற்சி உண்டு பயிற்சி உண்டு வளர்ச்சிக்காகத்தானே !

விதை விதைப்போம் மரம் நடுவோம் எங்கள் கையாலே !
வெற்றி எனும் கனி பறிப்போம் எங்கள் கையாலே !
புதுமைக்குள்ளே புதைவதில்லை எங்கள் எண்ணம்
வளமை கண்டு வாழ்த்துப் பெறுவோம் இதுதான் திண்ணம் .

சாதனைகள் படைத்திடுவோம் ! சரித்திரத்தில் இடம் பிடிப்போம் !
வேதனைகள் துடைத்திடுவோம் ! வெற்றியினைத் தடம் பதிப்போம் !
காலம் எங்கள் கையில்தானே ! கலாமின் பெருமை செயலில்தானே !
காளையர் நாம் எழுந்து விட்டோம் ! கடமையினால் உயர்ந்து விட்டோம் !

மகிழ்ச்சியுடன் கரம் கொடுப்போம் ! கடைசி வரை தோள் கொடுப்போம் !
மதுரை மண்ணின் பெருமை சொல்வோம் ! மனங்களை நாம் தினம் வெல்வோம் !
கதவுகள்தான் திறந்திருக்கு ! கண்களுக்குள் சக்தி பிறந்திருக்கு !
இந்த நாளும் இனி எந்த நாளும் தமிழுக்காக எங்கள் உயிர் வாழும் !

பாடல்
மு.மகேந்திர பாபு ,
பேச - 97861 41410.

Post a Comment

0 Comments