நிகழ்வுகள் குறும்படத்திற்கு - மு.மகேந்திர பாபு

 

நிகழ்வுகள் குறும்படத்திற்கு - (
மாற்றம் செய்தது. )

உறவை விட்டுப் போகின்றேன்
உள்ளம் ஏனோ நோகின்றேன்
கண்கள் திறந்து பார்க்கின்றேன்
காணும் தூரம் இருள்தானே !
அன்பைத் தேடி வாழ்க்கையில்
அடிமை யானது உள்ளமே !

சொந்தம்  விட்டுப் போகுதே !
கண்கள் ரெண்டும் வறண்டதே !
வாழும் நாளும் பாலையே !
வந்திடுமோ மீண்டும் சோலையே !
வலிகள் தூக்கி நடக்கின்றேன்
வசந்தம் மறந்து கடக்கின்றேன்.

காதல் சொல்லி வந்தாளே !
கவலை ஏனோ தந்தாளே !
கை பிடித்து நடந்தவளே !
கை விரித்துச் சென்றாளே !
என்னுள் பாதி இருந்தவளே !
என்னைக் கொன்று சென்றாளே !

மாற்றம் வருமென நினைத்தேன்
ஏமாற்றத்தாலே கண்கள் நனைத்தேன்
உள்ளம் மனைவியைத் தேடுதே !
அருகில் இல்லாமல் வாடுதே !
உறவும் என்னைப் புரியல
போகும் பாதை தெரியல ...

பாடலாக்கம்

மு.மகேந்திர பாபு

Post a Comment

0 Comments