கவிதை - இயற்கை

 




கவிதை - இயற்கை 


( வெற்றிக்கொடி நாளிதழுக்கு )


மலர்ந்ததும் 

சில மணிநேரங்களில் மரணம் என்று தெரிந்த பூக்கள்

பூக்காமல் இருப்பதில்லை.

மனிதனைக் கண்டு இயற்கை

அஞ்சி ஓடுவதில்லை.


கனி தரும் மரத்தை மறந்து

கணினி முன் மனிதன் என்று அமர்ந்தானோ ,

அன்றே குறைந்தது மனிதனின் மகிழ்ச்சி.


பச்சைக் கம்பளி போர்த்திய

மரங்களை அழித்து , 

என்று தொழிற்சாலைகள் 

உருவாக்கினானோ 

அன்றே தெரிந்தது

மனிதனின் அரக்ககுணம்.


சேவை செய்யும் இயற்கையை

தன் தேவைக்காக 

என்று அழித்தானோ , 

அன்றே புரிந்தது மனிதனின்

சுயநலம்.


இயற்கையின் அருமையை

அறியாத மனிதனே !

நீ அழிப்பது இயற்கை அல்ல.

உன்னில் பாதியை !


ம.சஹானா , 

ஒன்பதாம் வகுப்பு , 

TVS பதின்ம மேல்நிலைப் பள்ளி , வீரபாஞ்சான் , மதுரை.







Post a Comment

0 Comments