சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரதானடா ! - பாடல் - மு.மகேந்திர பாபு

 

எங்க மண்ணும் மனசும் ஒன்னுதான்
கருணை தெரியும் கண்ணுதான்
ஆதித்தமிழன் நாங்கதான் - உலகம்
ஆளும் தமிழன் நாங்கதான்

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரதானடா !
தங்கம் போல ஜொலிஜொலிக்கும் மனசுதானடா !
எங்கும் எதிலும் இருக்குதடா எங்க பேரு !
சிங்கம் போல நடையைத் தினமும் நீயும் பாரு !

முத்தமிழும் இருக்குதடா மொத்தமாக !
முழங்கிடுவோம் பறையிசைத்துச் சத்தமாக !
வைகை ஆத்து வெள்ளம் போல உள்ளம் தானடா !
மகிழ்ச்சியோடு வாழும் எங்க இல்லம் தானடா !

மலை இருக்கும் இடமெல்லாம் கலை இருக்குமே !
சினம் இருக்கும் இடத்திலும் குணம் இருக்குமே !
நட்புக்காகக் கொடுத்திடுவோம் உயிரைக் கூடத்தான் !
கூடச் சேர்ந்து கரம் பிடித்து நீயும் ஆடத்தான் !

மாதங்களால் அழகு பெறும் வீதிதானடா !
மனம் நிறையச் சொல்லுமே சேதிதானடா !
பட்டிமன்றம் பாட்டுமன்றம் நாங்க தானடா !
சிரிக்க வைக்கும் சினிமாவிலும் நாங்க தானடா !

தலைகளாலே நிறைந்திருக்கும் தமுக்கம் பாரு
தரணியிலே மதுர போல இருக்குதா ஊரு ?
மல்லிப் பூவின் வாசம் அது மதுரக்காரன் பாசம்
ஜிகர்தண்டா குடிடா ! பறக்குது மீன் கொடிடா !

Post a Comment

0 Comments