கவிதை - வெக்கை

 

கவிதை    -    வெக்கை

சுழலும் மின்விசிறி
வீடெங்கும் நிரப்புகிறது
வெப்பக் காற்றினை.
உச்சி முதல் பாதம் வரை
உடலெங்கும் ஓடுகிறது
வியர்வை ஆறு.

ஈரம் சொட்டியபடி
போர்வைகளைப் போர்த்தியிருக்கின்றன
அறை நடுவே சில
நெகிழி இருக்கைகள்
வெப்பம் தணிக்க.

என்னென்னவோ பிரயத்தனங்கள்
செய்தும் ,
கான்க்ரீட் காடுகளின்
வெப்பம் குறைவதாய்  இல்லை.
மனிதனின் மடமையை நினைத்து
எங்கேனும்
பேசிக் கொண்டிருக்கலாம்
உயிரோடிருக்கும் இருமரங்கள்.

மு.மகேந்திர பாபு

சுழலும் மின்விசிறி
வீடெங்கும் நிரப்புகிறது
வெப்பக் காற்றினை.
உச்சி முதல் பாதம் வரை
உடலெங்கும் ஓடுகிறது
வியர்வை ஆறு.

ஈரம் சொட்டியபடி
போர்வைகளைப் போர்த்தியிருக்கின்றன
அறை நடுவே சில
நெகிழி இருக்கைகள்
வெப்பம் தணிக்க.

என்னென்னவோ பிரயத்தனங்கள்
செய்தும் ,
கான்க்ரீட் காடுகளின்
வெப்பம் குறைவதாய்  இல்லை.
மனிதனின் மடமையை நினைத்து
எங்கேனும்
பேசிக் கொண்டிருக்கலாம்
உயிரோடிருக்கும் இருமரங்கள்.

மு.மகேந்திர பாபு

Post a Comment

0 Comments