ரோஜாத் தோட்டம - மு.மகேந்திர பாபு ஆசிரியர்,

 

ரோஜாத் தோட்டம

அழகழகாய்ப் பூத்திருக்கு ரோஜாத் தோட்டத்தில்
அனுதினமும் மூழ்கலாமே மகிழ்ச்சி வெள்ளத்தில்
சிவப்பு மஞ்சள் வெள்ளையென எல்லா வண்ணத்தில்
இதழ் விரித்துச் சிரிக்குதே எங்கள் தோட்டத்தில் !

நேருமாமா என்னைத்தானே நெஞ்சில் வச்சாரு
பெண்கள் எல்லாம் தலையிலே சூடிக்கொண்டார்கள்
ஒற்றை மலராய் இருந்தாலும் உயர்ந்தவள் நானே
மாலையாகக் கோர்த்தாலும் மணப்பவள் நானே !

மனிதன் பிறப்பு முதல் இறப்புவரையிலும்
எங்கள் வாசம் மணந்திடுமே எல்லார் வீட்டிலும் !
வெற்றிபெற்ற மனிதர் என்னைச் சூடும்போதிலே
முகமெல்லாம் மலர்ந்திருப்பார் என்னைப் போலவே !

பருவப் பெண்ணின் வாழ்க்கை தொடங்கவே
பக்குவமாய்ச் சொல்லிடுவார் என்னைத் தந்துதான்
இறந்துபட்ட மனிதர் வீட்டில் அவரைப் போலவே
இதழ் உதிர்த்து வருந்திடுவேன் இரங்கல்கூறவே !

சின்னக்குழந்தை சிரிக்கும்போது என்னைப் போலவே
இருக்குதுபார் என்றுசொல்லி தினமும் போற்றுவார்
ரோஜாவைத்தான் சூடிக்கொண்டு ராஜா ஆகுங்கள்
எப்பொழுதும் மகிழ்ச்சியிலே பள்ளுப் பாடுங்கள் !

மு.மகேந்திர பாபு ஆசிரியர்,

Post a Comment

0 Comments