அகிம்சை வீரரைப் போற்றுவோம் ! ( அக்.2 காந்தி ஜெயந்தி ) - மு.மகேந்திர பாபு

 

அகிம்சை வீரரைப் போற்றுவோம் ! ( அக்.2 காந்தி ஜெயந்தி )

அகிம்சை கொள்கை கொண்டவராம்
அகிலம் போற்ற வாழ்ந்தவராம்
பொய்யே பேசா வாழ்க்கையினை
அரிச்சந்திர நாடகத்தால் கற்றவராம் !

அடிமையில் இருந்த தேசத்தை
அன்பு நெறியில் மீட்டவராம் !
துப்பாக்கி பீரங்கி ஆயுதங்களை
கைத்தடி கொண்டு வென்றவராம் !

உழைக்கும் வர்க்கத்தின் அரையாடை
உடுத்த வைத்தது கதராடை !
மதுரை மண்தான் மகாத்மாவின்
மனதை மாற்றிய மாநகராம் !

ஓங்கி மிதித்த வெள்ளையனும்
உள்ளம் நெகிழ்ந்து திருந்தவே
காலணி ஒன்றைத் தன்கையாலே
சிறைக் காவலனுக்குத் தந்தாராம் !

குழந்தைகள்  மகிழ்ந்து அன்பாலே
தாத்தா என்று அழைத்தனரே !
உலகம் என்றும் தழைக்கவே
அகிம்சை வழியில் செல்வோமே !

மு.மகேந்திர பாபு ,

Post a Comment

0 Comments