அம்மான் மகள்

 



ஓடும்நீரில்

ஒதுங்கும்

சரளையாய்

உன்

நினைவு!

உன்

நினைவுக்காற்றில்

இலைகளாய்

என்

இதயம்!

அம்மான்மகன்

உன் 

வரவையெண்ணி

இம்மான்

காத்திருக்கு;

பெண்மானும்

துணையிருக்கு!

அக்கரைக்குப்

போனமச்சான்

எக்கணமும்

திரும்புவேன்னு

இக்கரையில்

நானிருக்கேன்-

ஏக்கத்திலே

இளைச்சிருக்கேன்!

அந்தி

சாயஅந்த

சந்திரனும்

வந்தாச்சு;

அல்லிமலர்

பூத்திருச்சு!

மயில்தேடி

ஓடிவரும்

மஞ்சனத்தி

ஆனாய்-உன்

குயில்பாட்டு

இங்கிருக்க

கூவும்குரல்

எங்கேநீ...?


மு.மகேந்திர பாபு.


படம் - முகநூல்.

Post a Comment

0 Comments