அடி குழாய்

 


அடி குழாய்
அடி குழாயின்
அடியில் அமிழ்ந்து கிடக்கின்றன
பெண்களின் ஆயிரமாயிரம்
கனவுகளும் ,கவலைகளும் ,
சில சந்தோசங்களும் .
அவை யாருமற்ற
நள்ளிரவு நேரத்தில்
நடமாடத் தொடங்கி ,
தங்களுக்குள் விவாதித்து ,
அதி காலையில்
மூர்ச்சித்து விழுகின்றன
பெண்களின் கவலை சொல்லி .
பெண்களின் கண்ணீர்த் துளியாய்
அடிகுழாயில்
ஒழுகிறது தண்ணீர்த் துளி .
ஒவ்வொரு
காலிக் குடங்களிலும்
தண்ணீரோடு
நிரப்பப் படுகின்றன
பெண்களின் கவலை களும் .

Post a Comment

0 Comments