தண்ணீர்

 


நெடு நேரம்

நெடுந்தூர பயணம்.

கண்ணுக்கெட்டிய இடமெங்கும்

கானல் நீர்.


கண்மாய்கள் கல்லூரிகளாயின.

குளங்கள் வீடுகளாகின

நதிகள் சுருங்கி விட்டன.


தண்ணீர் தேசத்தில் இனி

கண்ணீரே அறுவடையாகலாம்.


மரங்களோடு மனிதமும்

மரித்து விட்டதோ ?


இதோ ஒரு நீர்க்குழாய்.

கண்ணுக்கு குளிர்ச்சி.

காணும்  இடமெங்கும்

தண்ணீர் வேண்டுமே !

என் வேண்டலும் இதுவே !


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments