தமிழ் மொழியின் சிறப்புகள்
1) தமிழ் மொழி இனிமையானது ஏன் ?
மனத்திற்கு இன்பம் தருவது , செவிக்கு இன்பம் தருவது , பேசுவதால் வாய்க்கு இன்பம் தருவது. அனைத்துப் புலன்களுக்கும் இன்பம் தருகின்ற சொற்களைக் கொண்ட மொழியாக இருப்பதால் தமிழ் மொழி இனிமையானது.
2 ) தமிழ் மொழியை ஏன் அமுதத் தமிழ் என்கிறோம் ?
தேவாமிர்தம் உண்ட தேவர்கள் என்றும் இறவாநிலை பெறுவர் என்பது புராண மரபுச்செய்தி. இத்தேவர்களைப் போலவே தமிழ் மொழியைக் கற்றறிந்த அறிஞர்கள் என்றும் நிலைத்த புகழைப் பெறுவர். அதனால் தமிழ்மொழியை அமுதத் தமிழ் என்கிறோம்.
3 ) தமிழ் மொழியைப் பைந்தமிழ் என்று ஏன் கூறுகிறோம் ?
பசுமை + தமிழ் = பைந்தமிழ். பசுமை என்பது செழிப்பின் அடையாளம். தமிழ் , உலக மொழிகளில் செழுமையான மொழி. அதனால் பைந்தமிழ் என்கிறோம்.
4 ) தமிழின் தொன்மைக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக .
* தமிழ் மொழி இயற்கையாகத் தோன்றிய மொழி. தோற்றுவித்தவர் யாரும் இல்லை.
* மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இலக்கிய , இலக்கணங்களைக் கொண்டது.
5 ) தமிழ் மொழியை வளர்க்க ஏதேனும் இரண்டு வழிமுறைகளைக் கூறுக .
* தமிழ் மொழியில் உள்ள நூல்களை உலக மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும்.
* பிற நூல்களைத் தமிழ் மொழியில் மொழிபெயர்க்க வேண்டும்.
*பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி அவர்கள்*
0 Comments