எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 , தமிழ் மொழி வாழ்த்து - இயங்கலைத் தேர்வு / 8th TAMIL - EYAL 1 - TAMIL MOZHI VAAZHTHU - ONLINE TEST

 


எட்டாம் வகுப்பு - தமிழ் 

இயல் 1 , கவிதைப் பேழை 

தமிழ் மொழி வாழ்த்து - மகாகவி பாரதியார்.

 இயங்கலை தேர்வு வினாக்களும் விடைகளும்


1) மகாகவி பாரதியார் பிறந்த ஊர் ------

அ ) எட்டயபுரம்

ஆ ) பொன்னையாபுரம்

இ ) தூத்துக்குடி

ஈ ) திருநெல்வேலி

விடை : அ ) எட்டயபுரம்

2 ) சிந்துக்குத் தந்தை என்று பாரதியாரைப் புகழ்ந்தவர் -----

அ ) சுரதா

ஆ ) கண்ணதாசன்

இ ) பாரதிதாசன்

ஈ ) வாணிதாசன்

விடை : இ ) பாரதிதாசன்

3 ) தமிழ் மொழி வாழ்த்து ------- என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

அ ) பாப்பா பாட்டு

ஆ ) கண்ணன் பாட்டு

இ ) குயில் பாட்டு

ஈ ) பாரதியார் கவிதைகள்

விடை : ஈ ) பாரதியார் கவிதைகள்

4 ) மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் --------

அ ) வைப்பு

ஆ ) கடல்

இ ) பரவை

ஈ ) ஆழி 

விடை : அ ) வைப்பு 

5 ) வானம் + அறிந்த என்ற சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ------

அ ) வானம்  அறிந்து

ஆ ) வான் அறிந்த

இ ) வானமறிந்த

ஈ ) வான் மறிந்த

விடை : இ ) வானமறிந்த

6 ) ' வானமளந்தது ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------

அ ) வான + மளந்தது

ஆ ) வான் + அளந்தது

இ ) வானம் + அளந்தது

ஈ ) வான் + மளந்தது

விடை : இ ) வானம் + அளந்தது

7 ) ------ கருத்தை அறிவிக்கும் கருவி

அ ) நாடு

ஆ ) மாநிலம்

இ ) மொழி

ஈ ) மதம்

விடை : இ ) மொழி 

8 ) தமிழர்கள் தம் தாய்மொழியாகிய தமிழை ------- எனக் கருதிப் போற்றி வந்துள்ளனர்.

அ ) அறிவு

ஆ ) செல்வம்

இ ) வீரம்

ஈ ) உயிர்

விடை : ஈ ) உயிர்


9 ) ------ அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே !

அ ) கடல்

ஆ ) பூமி 

இ ) நாடு

ஈ ) வானம் 

விடை : ஈ ) வானம்


10 ) ' இசை ' என்பதன் பொருள்-----

அ ) நிழல்

ஆ ) புகழ்

இ ) பொறுமை

ஈ ) சிறுமை

விடை : ஆ ) புகழ்


11 ) ------  வைப்பினும் தன்மணம் வீசி இசைகொண்டு வாழியவே

அ ) ஐநிலம்

ஆ ) ஏழ்மலை

இ ) ஏழ்நதி

ஈ ) ஏழ்கடல்

விடை : ஈ ) ஏழ்கடல்


12 ) ----- நீங்கத் தமிழ் மொழி ஓங்கத் துலங்குக வையகமே

அ ) சூழ்கடல்

ஆ )  ஆர்கழி

இ ) சூழ்கலி

ஈ ) விரிகடல்

விடை : இ ) சூழ்கலி


13 ) வானமளந்த தனைத்தும் அளந்திடு ------ வாழியவே.

அ ) வண்மொழி

ஆ ) தென்மொழி

இ ) பண்மொழி

ஈ ) செம்மொழி 

விடை : அ ) வண்மொழி


14 ) தொல்லை வினைதரு தொல்லை அகன்று சுடர்க ------

அ ) தெலுங்கு நாடு

ஆ ) கர்நாடகா

இ ) கேரளம்

ஈ ) தமிழ்நாடு

விடை : ஈ ) தமிழ்நாடு 


15 ) ஜெயா என்ற இதழை நடத்தியவர் ------

அ ) பாரதிதாசன்

ஆ ) பாரதியார்

இ ) சுரதா

ஈ ) கண்ணதாசன்

விடை : ஆ ) பாரதியார்


16 ) வண்மொழி என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------

அ ) வண் + மொழி 

ஆ ) வண்மை + மொழி

இ ) வளமை + மொழி 

ஈ ) வாண் + மொழி 

விடை : ஆ ) வண்மை + மொழி 


17 ) சீட்டு + கவி என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ------

அ ) சீட்டுகவி

ஆ ) சீட்டுக்கவி

இ ) சீடைக்கவி

ஈ ) சீட்கவி

விடை : ஆ ) சீட்டுக்கவி


18 ) பாரதி வாழ்ந்த ஆண்டுகள் ------

அ ) 29

ஆ ) 39

இ )  49

ஈ  ) 59

விடை : 39


19 ) பழமை மற்றும் துன்பம் என்ற சொல்லின் பொருள் ------

அ ) புகழ்

ஆ ) வைப்பு

இ ) பரவை

ஈ ) தொல்லை 

விடை : ஈ ) தொல்லை 


20 ) பாரதியார் தமிழாசிரியராகப் பணிபுரிந்த ஊர் ------

அ ) திருநெல்வேலி

ஆ ) தூத்துக்குடி

இ ) பாண்டிச்சேரி 

ஈ ) மதுரை 

விடை : ஈ ) மதுரை 


****************    ***********   ***********

வினா உருவாக்கம்

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410


*****************   ************   **********

Post a Comment

0 Comments