குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள் ஜூன் 12 - சிறப்புக் கவிதை / June 12 - World Day Against Child Labour - Kavithai


குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள் - சிறப்புக் கவிதை ( ஜூன் 12 )

*குழந்தைத் தொழிலாளி* 

பட்டுப்பூச்சியாய்ப்🦋 பறக்காமல்
கூட்டுப்புழுவாய்🐛 குறுகிப் போனாய்
குட்டிக் கையில் பேனா பிடிக்காமல் 
கூனிக்குறுகி கூலி வாங்குகிறாய் 

புத்தகப்பை🎒 சுமக்காமல் 
குடும்ப பாரம் சுமக்கிறாய் !
கிளியாய்ப் பேசி🦜 
குயிலாய்ப் பாடி🐦‍⬛
மானாய்த் துள்ளாமல் 🦌
மாநகரெங்கும் உழைத்துத் தேய்கிறாய்.
 
உன் இரவு எப்படிக் கழியும் எண்ணிப்பார்க்கிறேன் நான் 🤔
நீயோ,
எண்ணி எண்ணிப் பார்க்ககிறாய் 
பகல் உழைப்பின் 
மிச்சக் காசுகளை !

பிஞ்சு விரல்கள் 
பஞ்சம் பிழைக்கக் கல்லுடைத்துக் காய்ச்சுப் போகிறது🥺 
நேருமாமா இன்றிருந்தால் 
நெஞ்சுருகிப் போவார்😢.

உன் கனவுகள் 
பட்டாசுத் தொழிற் சாலையிலும் 
தீப்பெட்டித் தொழிற்சாலையிலும் கருகிப்போகின்றன😔

அறிந்துகொள் 
உன் வயிற்றுப் பசிக்கும் 
அறிவுப் பசிக்கும் உணவூட்ட அன்னையாய் அரசுப் பள்ளிகள் உண்டு.

உன் கனவுப் பூக்களின் பூங்காவாய் அரசுப் பள்ளிகள் உண்டு🌳🌴🌲🎄🌿
பூங்காவின் தோட்டக்காரராய் 
ஆசிரிய அம்மாக்களும் 
அன்புகாட்டும் அப்பாக்களும் காத்திருக்கிறோம் உனக்காக !

நலத்திட்டங்கள் ஏராளமாய் 
பயன்பெறலாம் நீ தாராளமாய்📚📖📐📏🖋️🖊️📝✏️👩🏻‍🎓🧑🏻‍🎓
இன்றே மாணவ அவதாரமெடு !

   கவிஞர்.ம.தன்சியா ,
   முதுகலைத் தமிழாசிரியர்,
   நகரவை(பெ)மேல்நிலைப்பள்ளி,
   பொள்ளாச்சி.

Post a Comment

0 Comments