ஆறாம் வகுப்பு - தமிழ்
இரண்டாம் பருவம்
கவிதைப்பேழை - இயல் ஒன்று
மூதுரை
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1 ) மாணவர்கள் நூல்களை ----- கற்க வேண்டும்
அ ) மேலோட்டமாக ஆ ) மாசுற
இ ) மாசற ஈ )மயக்கமுற
விடை : இ ) மாசற
2 ) இடமெல்லாம் என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது ------
அ ) இடம் + மெல்லாம் ஆ ) இடம் + எல்லாம்
இ ) இட + எல்லாம் ஈ ) இட + மெல்லாம்
விடை : ஆ ) இடம் + எல்லாம்
3 ) மாசற என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது -------
அ ) மாச + அற ஆ ) மாசு + அற
இ ) மாச + உற ஈ ) மாசு + உற
விடை : ஆ ) மாசு + அற
4 ) குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் -------
அ ) குற்றமில்லாதவர்
ஆ ) குற்றம் இல்லாதவர்
இ ) குற்றமல்லாதவர்
ஈ ) குற்றம் அல்லாதவர்
விடை : அ ) குற்றமில்லாதவர்
5 ) சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் --------
அ ) சிறப்புஉடையார்
ஆ ) சிறப்புடையார்
இ ) சிறப்படையார்
ஈ ) சிறப்பிடையார்
விடை : ஆ ) சிறப்புடையார்
குறுவினா
1 ) கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன யாவை ?
மன்னனையும் குற்றம் இல்லாமல் கற்றவரையும் ஒப்பீட்டு ஆராய்ந்து பார்த்தால் மன்னனைவிடக் கற்றவரே சிறந்தவர். மன்னனுக்குத் தன்நாட்டில் மட்டுமே சிறப்பு . கல்வி கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு.
*************** ************ **************
மனப்பாடப்பாடல்
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு
************* ************* *************
சொல்லும் பொருளும்
மாசற - குற்றம் இல்லாமல்
சீர்தூக்கின் - ஒப்பிட்டு ஆராய்ந்தால்
தேசம் - நாடு
******************* ************ **********
0 Comments