உலக காற்று தினம்!
15 • 06 • 2022
புவியைச் சூழ்ந்த பெருவளி
உயிர்கள் வாழ இவையே வழி
புவியின் சுழற்சியில் உருவாகி
தருவாய் உயிர்களைக் கருவாக்கி
அசையும் வாயுக்களின் இயக்கமே !
விவசாயிகளுக்கு நீதான் விலாசமே!
வெப்பமும் வேகமும் வன்மையுயும் மென்மையும்
கொண்டு வீசுவதால்
வாடையும் கோடையும் கொண்டலும் தென்றலுமாய்
வையம் செழிக்க வைக்கின்றாய் !
வழி தேடிய வணிகனுக்கு
வாழ்வளித்தாய் திசை காட்டி !
காற்றாலை தரும் ஒரு வளி - அது
தமிழ் நாட்டை முதன்மையாக்கிய ஆரல்வாய்மொழி!
வட தென் கிழக்கு பருவ காற்றுகள் சிந்தும் மழைத்துளி ....
அது காற்று தந்த பெரும்நிதி.!!
உலகம் காக்கும்
காற்றே நீ என்றென்றும் வாழியவே!
0 Comments