10 ஆம் வகுப்பு - சமூக அறிவியல் - புவியியல் - முதன்மையான 2 மதிப்பெண் வினா & விடை - பகுதி -1 / 10th SOCIAL SCIENCE - GEOGRAPHY - IMPORTANT 2 MARK - QUESTION & ANSWER - PART - 1

 

பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல்

பொதுத்தேர்வில் முழு மதிப்பெண் பெற

 உதவும் வினாக்களும் விடைகளும் .

2 மதிப்பெண் வினாக்களும் விடைகளும்

              புவியியல்  - பகுதி - 1

                              அலகு 1

1 இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக. 

1. பாகிஸ்தான் 

2. ஆப்கானிஸ்தான் 

3. நேபாளம்

4. சீனா

5. பூடான்

6. பங்களாதேஷ்

7. இலங்கை

2. இந்திய திட்ட நேரத்தின் முக்கியத்துவம் பற்றி கூறுக.

* 82° 20' கிழக்கு தீர்க்க ரேகையின் தல நேரம் இந்திய திட்ட நேரம்.

* இது கிரீன்வீச் சராசரி நேரத்தை விட 5 மணி 30 நிமிடம் முன்னதாக இருக்கிறது.

3. தக்காண பீடபூமி - குறிப்பு வரைக. 

* தீபகற்ப பீடபூமியின் மிகப் பெரிய இயற்கை அமைப்பு,

* முக்கோண வடிவம் கொண்டது.

* சுமார் 7 லட்சம் ச.கி.மீ பரப்பளவு கொண்டது.

* கடல் மட்டத்திலிருந்து 500 முதல் 100 மீ வரை உயரம் கொண்டது.


4. இலட்சத்தீவுக் கூட்டங்கள் பற்றி விவரி. 

* இந்தியாவில் மேற்கு பகுதி அரபிக்கடலில் அமைந்துள்ளது.

* முருகைப் பாறைகளால் ஆனது.

* தலைநகரம் கவரத்தி,

* 32 ச.கி.மீ பரப்பளவு கொண்டது.

                            அலகு 2

1 காலநிலையை பாதிக்கும் காரணிகளை பட்டியலிடுக. 

* அட்சங்கள்

- உயரம்

• கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு

* நிலத்தோற்றம்

* ஜெட் காற்றோட்டங்கள்

2 “ வெப்ப குறைவு விகிதம் ” என்றால் என்ன?

• புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீ உயரத்திற்கும் 6.5 °C என்ற அளவில் வெப்பநிலை குறையும். இது “ வெப்ப குறைவு விகிதம் " எனப்படும்.

3. “ ஜெட் காற்றோட்டங்கள் என்றால் என்ன?

* வளி மண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகளே “ ஜெட் காற்றோட்டங்கள் " எனப்படும்.

4. பருவக்காற்று குறித்து ஒரு சிறு குறிப்பு எழுதுக.

• மான்கள் என்ற சொல் “ மௌசிம் ” என்ற அரபு சொல்லில் இருந்து வந்தது.

* இதன் பொருள் பருவகாலம் என்பது ஆகும்.

5. இந்தியாவின் நான்கு பருவக்காலங்களைக் குறிப்பிடுக.

1. குளிர்காலம்

2. கோடைக்காலம்

3. தென்மேற்கு பருவக்காற்றுக் காலம்

4. வடகிழக்கு பருவக்காற்று காலம்

6. “ பருவ மழை வெடிப்பு ” என்றால் என்ன?

* தென் மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வட இந்தியாவின் வெப்பநிலை 46 *Cஆக உயருகின்றது,

* இப்பருவக்காற்று இடி மின்ளலுடன் கன மழையை அளிக்கிறது,

* இதுவே “ பருவ மழை வெடிப்பு ” எனப்படும்.

7. அதிக மழைப்பெறும் பகுதிகளைக் குறிப்பிடுக. 

1. மேற்கு கடற்கரை பகுதிகள்

 2. அஸ்ஸாம்

3. திரிபுரா

4. மேகாலயாவின் தென்பகுதி (மௌசின்ராம் - சிரபுஞ்சி )

5. நாகாலாந்து

6. அருணாச்சல பிரதேசம்

                      அலகு 3

1 * மண்” வரையறு.

* புவியின் மேற்பரப்பில் காணப்படும் நுண்ணிய துகள்களே மண் ஆகும்.

* கனிமங்களின் கூட்டுப்பொருள்கள்,

* மக்கிய தாவரங்கள்,

* விலங்கினப் பொருட்கள்,

* காற்று மற்றும் நீர் ஆகியவை மண்ணில் உள்ளது.


2 இந்தியாவில் காணப்படும் மண்வகைகளின் பெயர்களைப் பட்டியலிடு

1. வண்டல் மண்

2. செம்மண்

3. கரிசல் மண்

4 . சரளை மண்

5 . காடு மற்றும் மலைமண்

6. களிமண் மற்றும் சதுப்பு நில மண்

7. வறண்ட பாலை மண்

8. உப்பு கார மண்

3. கரிசல் மண்ணில் ஏதேனும் இரண்டு பண்புகளை எழுதுக. 

* டைட்டானியம் மற்றும் இரும்பு தாதுக்கள் கொண்டது.

* இலை மட்கு குறைவு.

4. “வேளாண்மை” வரையறு.

* வேளாண்மை என்பது குறிப்பிட்ட பயிர்களை உற்பத்தி செய்வது ஆகும்.

* கால்நடை வளர்த்தல் - மக்களுக்கான உணவு - கால்நடை தீவனம்

5. இந்திய வேளாண்மை முறைகளை குறிப்பிடுக.

1. தன்னிறைவ வேளாண்மை

2. இடப்பெயர்வு வேளாண்மை

3. வறண்ட நில வேளாண்மை

4. கலப்பு வேளாண்மை

5. படிக்கட்டு முறை வேளாண்மை

6. தீவிர வேளாண்மை



Post a Comment

2 Comments