சீமைக்கருவேல மரம் ஒழிப்புப் பாடல்.

 

சீமைக்கருவேல மரம் ஒழிப்புப் பாடல்.

புது மாற்றம் ஒன்னு வந்திருக்கு நம்ம நாட்டுல
இனி செல்வம் வந்து குவியுமிங்க
நம்ம வீட்டுல
கருதெல்லாம் வெளஞ்சு தொங்கும் நம்ம காட்டுல
இந்த நெலமயத்தான் எடுத்துச் சொல்றேன் ஏன் பாட்டுல

சீமைக் கருவேல மரம் அழியுது - மண்ண
சீர்படுத்த நிதியும் இப்போ குவியுது
- முன்ன
காடு வீடு அத்தனையும் வேலிதான் - இப்ப
அரசோட திட்டத்தினால் காலிதான் - வேலி காலிதான்.

மூனு போகம் வெளஞ்ச நம்ம வயலுதான் வேலி வந்து நெறஞ்சதால தரிசுதான்
பசுமை போர்த்திக் கெடந்ததையா அன்றுதான்
வயல பாழாக்கிவிட்டதே சீமைக்கருவ இன்றுதான்

நிலத்தடி நீர் மண்ணுக்குள்ள இல்லயே
வானம் இடிஇடிச்சு மழய நமக்குத் தல்லயே
ஆறு குளத்தில் தண்ணீரைத்தான் காணோமே !
கடும் வறட்சியினால் கவலையாகிப் போனேமே !

சீமைக்கரு வேல மரம் காரணம்
மண்ண சீர்திருத்தம் செய்து நாம மாறணும்
நாட்டு மரத்த நட்டு நாம வளக்கனும்
நம்ம பிள்ளைகள மரம் நடத்தான் பழக்கனும்

பாக்கும் இடம் அத்தனையும் பசுமைதான்
மழையாலே நம்ம வாழ்க்கை வளமைதான்
வேலியில்லா தமிழகமா மாறுது நம்ம
வாழ்க்கை நிலை படிப்படியா ஏறுது

சீமைக் கருவேல மரம் இல்லங்க
சீர்படுத்த இளைஞர் கூட்டம் இருக்குங்க
சுற்றுச் சூழல் காக்க நாம வேணும்ங்க
சுத்தம் ஒன்றே சுகம் கொடுக்கும் பாருங்க

மு.மகேந்திர பாபு ,
97861 41410

Post a Comment

0 Comments