10 ஆம் வகுப்பு - சமூக அறிவியல் - வரலாறு - சரியான விடை - அலகு 1 முதல் 6 வரை / 10th SOCIAL SCIENCE - HISTORY - ONLINE TEST UNIT 1 - 6

 

10 ஆம் வகுப்பு - சமூக அறிவியல் 

குறைக்கப்பட்ட பாடங்கள்

வினாக்களும் விடைகளும்

வரலாறு - அலகு - 1 - 6

சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

அலகு - 1

1. முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?

அ ) ஜெர்மனி, ஆஸ்திரிய- ஹங்கேரி, உதுமானியா 

ஆ) ஜெர்மனி, ஆஸ்திரிய- ஹங்கேரி, ரஷ்யா

இ) ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி

ஈ) ஜெர்மனி, ஆஸ்திரி.ப- ஹங்கேரி. இத்தாலி

விடை : அ ) ஜெர்மனி, ஆஸ்திரிய- ஹங்கேரி, உதுமானியா 

2. பத்தொன்பதாம் நூற்றாண்டு முடியுந்தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது?

அ )  சீனா

ஆ) ஜப்பான் 

இ) கொரியா

ஈ) மங்கோலியா

விடை : ஆ ) ஜப்பான் 

3. மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?

அ ) ஆகாயப் போர் முறை

ஆ) பதுங்குக் குழிப் போர் முறை

இ) நீர்மூழ்கிக் கப்பல் போர் முறை

ஈ) கடற்படைப் போர் முறை

விடை : ஆ ) பதுங்குக் குழிப் போர் முறை

4. பள்ளாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

அ )  பிரிட்டன் ஆ) பிரான்ஸ்

 இ) டச்சு ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

விடை : அ )  பிரிட்டன் 

5. பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?

அ ) ஜெர்மனி ஆ) ரஷ்யா 

இ) இத்தாலி ஈ) பிரான்ஸ்

விடை : ஆ )  ரஷ்யா 

அலகு 2 - இல்லை

அலகு 3

1. ஜப்பான் சரணடைவதாக எப்போது முறைப்படி கையெழுத்திட்டது?

அ )  செப்டம்பர் 2 , 1945 

ஆ) அக்டோபர் 2, 1945 

இ) ஆகஸ்டு 15, 1945

 ஈ) அக்டோபர் 12, 1945

விடை : அ ) செப்டம்பர் 2 , 1945 

2. பன்னாட்டு சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார்?

அ ) ரூஸ்வெல்ட்

ஆ) சேம்பெர்லின் 

இ) உட்ரோ வில்சன் 

ஈ) பால்டுவின்

விடை : இ )  உட்ரோ வில்சன் 

3. ஜப்பானியக் கப்பற்படை அமெரிக்க கப்பற்படையால் எங்கே தோற்கடிக்கப்பட்டது?

அ )  க்லாடல்கெனால் போர்

ஆ) மிட்வே போர்

இ ) லெனின் கிரேடு போர்

ஈ) எல் அலாமெய்ன் போர்

விடை : ஆ )  மிட்வே போர்

4. அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?

அ )  கவாசாகி

ஆ) இன்னோசிமா 

இ) ஹிரோஷிமா

ஈ) நாகாசாகி

விடை : இ ) ஹிரோஷிமா

5. ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப் படுத்தினார்?

அ )  ரஷ்டர்கள்

ஆ) அரேபியர்கள் 

இ) துருக்கியர்கள் 

ஈ) யூதர்கள்

விடை : ஈ ) யூதர்கள்

6. ஜெர்மனியோடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார்?

அ ) சேம்பர்லின்

ஆ) வின்ஸ்டன் சர்ச்சில்

இ) லாயிட் ஜார்ஜ்

ஈ) ஸ்டேன்லி பாண்டுவின்

விடை : அ ) சேம்பர்லின்

7. எப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய சாசனம் கையெழுத்தானது?

அ) ஜூன் 26, 1942 

ஆ) ஜூன் 26, 1945 

இ) ஜனவரி 1, 1942

ஈ) ஜனவரி 1, 1945

விடை : ஆ )  ஜூன் 26, 1945 

அலகு 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - இல்லை

அலகு 5

1. எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?

அ ) 1827  ஆ ) 1829

இ ) 1826    ஈ) 1927

விடை : ஆ ) 1829

2. தயானந்த சரஸ்வதியால்நிறுவப்பெற்ற சமாஜத்தின் பெயர் யாது?

அ) ஆரிய சமாஜம் 

ஆ)  பிரம்ம சமாஜம் 

இ) பிரார்த்தளை சமாஜம் 

ஈ) ஆதி பிரம்ம சமாஜம்

விடை : அ ) ஆரிய சமாஜம் 

3. யாருடைய பணியும் இயக்கமும் 1856 ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது?

அ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் 

ஆ) ராஜா ராம் மோகன் ராய் 

இ) அன்னிபெசன்ட் 

ஈ) ஜோதிபா பூலே

விடை : அ )  ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் 

4. “ ராஸ்ட் கோப்தார்" யாருடைய முழக்கம்?

அ) பார்சி இயக்கம் 

ஆ) அலிகார் இயக்கம் 

இ ) ராமகிருஷ்ணர் 

ஈ) திராவிட மகாஜல்

விடை : அ ) பார்சி இயக்கம் 

5. நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார் ?

அ பாபா தயாள் தாஸ் 

ஆ) பாபாராம்சிங் 

இ) குருநானக் 

ஈ) ஜோதிபா பூலே

விடை : ஆ )   பாபாராம்சிங் 

6 ) விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார் ?

அ) M.G.ரானடே 

ஆ ) தேவேந்திர நாத் தாகூர்

இ ) ஜோதிபா பூலே

ஈ ) அய்யன்காளி

விடை : அ ) M.G.ரானடே

7. “சத்யார்த்த பிரகாஷ்” எனும் நூலின் ஆசிரியர் யார்?

அ) தயானந்த சரஸ்வதி 

ஆ) வைகுண்ட சாமி 

இ) அன்னிபெசன்ட் 

ஈ) சுவாமி சாரதாநந்தா

விடை : அ )  தயானந்த சரஸ்வதி 

                          அலகு 6

1. கிழக்கிந்திய கம்பெனியின் நாடு பிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்?

அ) மருது சகோதரர்கள் 

ஆ) பூலித்தேவர் 

இ) வேலு நாச்சியார் 

ஈ) வீர பாண்டியகட்டபொம்மன்

விடை : ஆ ) பூலித்தேவர் 

2. சந்தா சாகிப்பின் மூன்று முகவர்களோடும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்?

அ) வேலு நாச்சியார் 

ஆ) கட்டபொம்மன் 

இ) பூலித்தேவர் 

ஈ) ஊமைத்துரை

விடை : இ ) பூலித்தேவர்

3. சிவசுப்ரமணியனார் எங்கு துாக்கிலிடப்பட்டார்?

அ) கயத்தாறு 

ஆ) நாகலாபுரம் 

இ) விருப்பாட்சி 

ஈ) பாஞ்சாலங்குறிச்சி

விடை : ஆ ) நாகலாபுரம்

4. திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார் ?

அ) மருது சகோதரர்கள்

ஆ) பூலித்தேவர்

இ) வீரபாண்டிய கட்டபொம்மன்

ஈ) கோபால நாயக்கர்

விடை : அ ) மருது சகோதரர்கள்

5. வேலூர் புரட்சி எப்போது வெடித்தது?

அ) 1805 மே 24

ஆ) 1805 ஜூலை 10 

இ) 1806 ஜுலை 10 

ஈ) 1806 செப்டம்பர் 10

விடை : இ ) 1806 ஜுலை 10 

6. வேலூர் கோட்டையில் இராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்த காரணமாயிருந்த தலைமை தளபதி யார்?

அ) கர்னல் பேன்கோர்ட் 

ஆ) மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங் 

இ) சர் ஜான் கிரடாக் 

ஈ) கர்னல் அக்னியூ

விடை : இ ) சர் ஜான் கிரடாக் 

Post a Comment

0 Comments