10 ஆம் வகுப்பு - தமிழ்
இயல் 7 - விரிவானம்
மங்கையராய்ப் பிறப்பதற்கே ...
வினா உருவாக்கம் -
' பைந்தமிழ்' மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
*************** ********* *************
1 ) இசைப்பேரரசி என நேருவால் பாராட்டப் பட்டவர் யார் ?
அ) எம்.எஸ்.சுப்புலட்சுமி
ஆ) ஜானகி
இ) லதா மங்கேஷ்கர்
ஈ) சுசிலா
விடை : அ) எம்.எஸ்.சுப்புலட்சுமி
2) எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்த திரைப்படம் எது?
அ) பராசக்தி
ஆ) இராஜகுமாரி
இ) மீரா
ஈ) சாவித்திரி
விடை : இ) மீரா
3) ' வேருக்கு நீர்' எனும் புதினத்தை எழுதியவர் யார் ?
அ) சோ.தர்மன்
ஆ) பூமணி
இ) லட்சுமி
ஈ) இராஜம் கிருஷ்ணன்
விடை : ஈ) இராஜம் கிருஷ்ணன்
4 ) சாகித்திய அகாதமி விருது பெற்ற இராஜம் கிருஷ்ணன்
நூல் -------
அ) குறிஞ்சி தேன்
ஆ) கரிப்பு மண்
இ) வேருக்கு நீர்
ஈ ) அலைவாய்க்கரையில்
விடை : இ) வேருக்கு நீர்
5 ) சுப்புலட்சுமியைத் தொட்டுத் தடவிப் பாராட்டியவர் யார் ?
அ) காந்தியடிகள்
ஆ) சரோஜினி நாயுடு
இ) ஹெலன் கெல்லர்
ஈ) அன்னை தெரசா
விடை : இ) ஹெலன் கெல்லர்
6 ) சுப்புலட்சுமி' தாமரையணி' விருது பெற்ற ஆண்டு ------
அ) 1974
ஆ) 1963
இ) 1954
ஈ) 1975
விடை : இ) 1954
7 ) திருப்பதியில் சுப்புலட்சுமி
குரலில் வெங்கடேச சுப்ரபாதம்
ஒலிக்கத் தொடங்கிய ஆண்டு ------
அ) 1963
ஆ) 1966
இ ) 1974
ஈ) 1978
விடை : ஆ) 1966
8 ) தமிழகத்தின் பெருமைக்குரிய கலைகளில் ஒன்றாகச் செவ்வியல் நடனம் திகழக்காரணமானவர் -----
அ) வளர்மதி
ஆ) பாலசரஸ்வதி
இ) சுப்புலட்சுமி
ஈ) சுந்தரம்பாள்
விடை : ஆ) பாலசரஸ்வதி
9 ) சாகித்திய அகாதமி விருதுபெற்ற முதல் பெண் எழுத்தாளர் ------
அ) கிருஷ்ணம்மாள்
ஆ) சிவசங்கரி
இ) இராஜம் கிருஷ்ணன்
ஈ) சுஜாதா
விடை : இ) இராஜம் கிருஷ்ணன்
10 ) நீலகிரி , படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்களைக்கூறும் புதினம் -----
அ) கரிப்பு மணிகள்
ஆ) குறிஞ்சித்தேன்
இ) பொன்விலங்கு
ஈ) அஞ்ஞாடி
விடை : ஆ) குறிஞ்சித்தேன்
11 ) உழுபவருக்கே நில உரிமை இயக்கம் தொடங்கியவர் -------
அ) கிருஷ்ணம்மாள்
ஆ) இராஜம் கிருஷ்ணன்
இ) சின்னப்பிள்ளை
ஈ) பாலசரஸ்வதி
விடை : அ) கிருஷ்ணம்மாள்
12 ) காந்தி அமைதி விருதை
கிருஷ்ணம்மாளுக்கு வழங்கிய நாடு -----
அ ) இந்தியா
ஆ) சுவிட்சர்லாந்து
இ) சுவீடன்
ஈ) பாரீஸ்
விடை : ஆ) சுவிட்சர்லாந்து
13 ) இராஜம் கிருஷ்ணன் இயற்றிய ----- வரலாற்றுப் புதினம் அனைவராலும்
பாராட்டப்பட்டது.
அ) குறிஞ்சித்தேன்
ஆ) கரிப்பு மணிகள்
இ) சேற்றில் மனிதர்கள்
ஈ) பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி
விடை : ஈ) பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி
14 ) சின்னப்பிள்ளைக்கு விருது
வழங்கிய பாரதப் பிரதமர் யார் ?
அ) வாஜ்பாய்
ஆ) குஜ்ரால்
இ) மன்மோகன்சிங்
ஈ) நரசிம்மராவ்
விடை : அ) வாஜ்பாய்
15 ) களஞ்சியம் குழுவை ஆரம்பித்தவர் யார் ?
அ) கிருஷ்ணம்மாள்
ஆ) இராஜம் கிருஷ்ணன்
இ) சின்னப்பிள்ளை
ஈ) பாலசரஸ்வதி
விடை : இ) சின்னப்பிள்ளை
16 ) மதுரையின் முதல் பட்டதாரிப் பெண் யார் ?
அ) சின்னப்பிள்ளை
ஆ) முத்துப்பிள்ளை
இ) கிருஷ்ணம்மாள்
ஈ) ராஜம் கிருஷ்ணம்மாள்
விடை : கிருஷ்ணம்மாள்
17 ) பெண்கள் என்றால் குடும்பக்கதை எழுதவேண்டும் என்ற படிமத்தை உடைத்தவர் -----
அ) தாமரை
ஆ) லட்சுமி
இ) திலகவதி
ஈ) இராஜம் கிருஷ்ணன்
விடை : ஈ) இராஜம் கிருஷ்ணன்
18 ) பாலசரஸ்வதி ஏழுவயதில் முதன்முதலில் பரதநாட்டிய
அரங்கேற்றம் செய்த ஊர் -----
அ ) மதுரை
ஆ) சென்னை
இ) காஞ்சிபுரம்
ஈ ) எட்டயபுரம்
விடை : இ) காஞ்சிபுரம்
19 ) கூட்டுக்குஞ்சுகள் என்ற புதினத்தின் ஆசிரியர் யார் ?
அ) பார்த்தசாரதி
ஆ) வெண்ணிலா
இ) ஆண்டாள் பிரியதர்ஷினி
ஈ) இராஜம் கிருஷ்ணன்
விடை : ஈ) இராஜம் கிருஷ்ணன்
20 ) நோபல் பரிசுக்கு இணையான ------- விருதைப் பெற்றவர் சுப்புலட்சுமி.
அ) தாமரைத்திரு
ஆ) தாமரை அணி
இ) பாரதரத்னா
ஈ) மகசேசே
விடை : ஈ) மகசேசே
*************** ************* ************
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிட Greentamil.in இணையதளம் மாணவர்களை அன்புடன் வாழ்த்துகிறது.
' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை.
தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும் இயங்கலைத்தேர்வில் ( Online Test ) பங்கேற்று சான்றிதழ் பெற்றிட தங்கள் பெயர் , படிக்கும் வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பவும்.
*************** **************** *******
1 Comments
D.Dharshini
ReplyDelete