10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 7 , கவிதைப்பேழை - மெய்க்கீர்த்தி - வினா & விடை / 10th TAMIL - EYAL 7 , MEIKKEERTHI - ONLINE TEST - QUESTION & ANSWER

 

10 ஆம் வகுப்பு - தமிழ் -

இயல் 7, 

கவிதைப்பேழை - மெய்க்கீர்த்தி -

இயங்கலைத்தேர்வு

வினா உருவாக்கம் - 

' பைந்தமிழ்' மு.மகேந்திர பாபு ,

 தமிழாசிரியர் , இளமனூர் , 

மதுரை - 97861 41410

***********   ***************  ***********



1 ) தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க   விரும்பியவர்கள் யார் ?

அ ) அரசர்கள்

ஆ) புலவர்கள்

இ) மக்கள்

ஈ) வள்ளல்கள்

விடை : அ ) அரசர்கள்

2 ) கோப்பரகேசரி , திருபுவனச்
சக்கரவர்த்தி என்ற பட்டங்கள் கொண்ட அரசன் யார் ?

அ ) முதலாம் இராசேந்திரன்

ஆ) மகேந்திரவர்மன்

இ) பாண்டியன் நெடுஞ்செழியன்

ஈ) இரண்டாம் இராசராசசோழன்

விடை : ஈ) இரண்டாம் இராசராசசோழன்


3) இரண்டாம் இராசராச சோழனுக்கு உள்ள மெய்க்கீர்த்திகளின் எண்ணிக்கை

அ) ஒன்று

ஆ) இரண்டு

இ) மூன்று

ஈ) நான்கு

விடை : ஆ) இரண்டு

4 ) மெய்க்கீர்த்தி யார் காலந்தொட்டு கல்லில் வடிக்கப்பட்டது?

அ) மகேந்திர பல்லவன்

ஆ) நரசிம்ம பல்லவன்

இ) முதலாம் இராசராசன்

ஈ) இரண்டாம் இராசராசன்

விடை : இ) முதலாம் இராசராசன்

5) மெய்க்கீர்த்திகளை எழுதுபவர்கள் -----

அ) புலவர்கள்

ஆ) அரசர்கள்

இ) வள்ளல்கள்

ஈ) வீரர்கள்

விடை : அ) புலவர்கள்

6) மெய்க்கீர்த்திகளை கல்லில்
பொறிப்பவர்கள் யார் ?

அ ) புலவர்கள்

ஆ) வீரர்கள்

இ) புரவலர்கள்

ஈ) கல்தச்சர்கள்

விடை : ஈ) கல்தச்சர்கள்

7 ) இந்திரன் முதலாகத் திசைபாலர்கள் மொத்தம் ------- பேர்கள்

அ)ஆறு

ஆ) எட்டு

இ) ஒன்பது

ஈ) பத்து

விடை : ஆ) எட்டு

8) சோழன் நாட்டில் பிணிக்கப் படுவன -----

அ) பூனை

ஆ) புலி

இ) மக்கள்

ஈ) யானை

விடை : ஈ) யானை

9 ) சோழன் நாட்டில் புலம்புவன ------

அ) மக்கள்

ஆ) சிலம்புகள்

இ) வளையல்கள்

ஈ) கவசங்கள்

விடை : ஆ) சிலம்புகள்

10 ) மெய்க்கீர்த்திக்கு முன்னோடியாகத் திகழும் இலக்கியம் ------

அ) பதிற்றுப்பத்து

ஆ) பரிபாடல்

இ) கலித்தொகை

ஈ) புறநானூறு

விடை : அ) பதிற்றுப்பத்து

11 ) இராசராசன் ---- நீதி தவறாது ஆட்சி செய்தான்.

அ) அரச

ஆ) மக்கள்

இ) தெய்வ

ஈ) மனு

விடை : ஈ) மனு

12 ) சோழன் ஆட்சியில் வடுப்படுவன ------

அ ) மாங்காய்கள்

ஆ) தேங்காய்கள்

இ) மக்கள்

ஈ) விலங்குகள்

விடை : அ ) மாங்காய்கள்

13 ) சோழன் ஆட்சியில் கொடியனவாய் இருப்பவை ------

அ ) காடுகள்

ஆ) வீடுகள்

இ) விலங்குகள்

ஈ) வீரர்கள்

விடை : அ ) காடுகள்

14 ) சோழன் ஆட்சியில் நெறிபிறழ்ந்து செல்பவை -------

அ) மான்கள்

ஆ) மீன்கள்

இ) ஆண்கள்

ஈ) பெண்கள்

விடை : ஆ) மீன்கள்

15 ) சோழன் ஆட்சியில் பறிக்கப்படுவன

அ) உரிமைகள்

ஆ) மலர்கள்

இ) உடமைகள்

ஈ) கடமைகள்

விடை : ஆ) மலர்கள்

16 ) தஞ்சை பெரிய கோவிலில் ------
நூற்றாண்டைச் சேர்ந்த இராசராச சோழன் கல்வெட்டு உள்ளது.

அ) ஆறாம்

ஆ) ஏழாம்

இ) எட்டாம்

ஈ) பதினொன்றாம்

விடை : ஈ) பதினொன்றாம்

17 ) இராசராச சோழன் மெய்க்கீர்த்தியில் நமக்குப் பாடமாக அமைந்த வரிகள் -------

அ) 1 - 16

ஆ) 16 - 33

இ) 33 - 52

ஈ) 53 - 75

விடை : ஆ) 16 - 33

18 ) வருபுனல் - இலக்கணக் குறிப்பு எழுதுக.

அ) பண்புத்தொகை

ஆ) உம்மைத்தொகை

இ) வினைத்தொகை

ஈ) பெயரெச்சம்

விடை : இ) வினைத்தொகை

19 ) மாமலர் - இலக்கணக் குறிப்பு எழுதுக.

அ) உரிச்சொல்தொடர்

ஆ) வினைத்தொகை

இ) பண்புத்தொகை

ஈ) அடுக்குத்தொடர்

விடை : அ) உரிச்சொல்தொடர்

20 ) சோழன் நாட்டில் அடைக்கப்படுவன

அ ) அனல்

ஆ) மக்கள்

இ) விலங்குகள்

ஈ) புனல்

விடை : ஈ) புனல்


************    **************  *************

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிட Greentamil.in இணையதளம் மாணவர்களை அன்புடன் வாழ்த்துகிறது.

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 
தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை.

தினமும்  இரவு 8 மணிக்கு நடைபெறும் இயங்கலைத்தேர்வில் ( Online Test ) பங்கேற்று சான்றிதழ் பெற்றிட தங்கள் பெயர் , படிக்கும் வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பவும்.

***************   ****************   *******

Post a Comment

0 Comments