பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல்
வரலாறு -
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
பகுதி - 2 வினாக்களும் விடைகளும்
அலகு 7 முதல் 10 முடிய
அலகு 7
1. 1818 ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஹாஜி வாரியத்துல்லா கீழ்க்கண்டவற்றில் எதனைத் தொடங்கினார்?
அ) வஹாபி கிளர்ச்சி
ஆ) ஃபராசி இயக்கம்
இ) பழங்குடியினர் எழுச்சி
ஈ) கோல் கிளர்ச்சி
விடை : ஆ ) ஃபராசி இயக்கம்
2. “நிலம் கடவுளுக்குச் சொந்தம்” என்று அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரிவிதிப்பதோ, வாடகை வசூலிப்பதோ இறைச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியவர் யார்?
அ) டிடு மீர்
ஆ) சித்து
இ) டுடு மியான்
ஈ) ஷாரியத்துல்லா
விடை : இ ) டுடு மியான்
3. நிரந்தரக் குடியிருப்பின் கீழ் ஜமீன்களை உருவாக்கும் திட்டத்தின்படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்கள் யார்?
அ) சாந்தலர்கள்
ஆ) டிடு மீர்
இ) முண்டா
ஈ) கோல்
விடை : அ ) சாந்தலர்கள்
4. கீழ்க்காண்போரில் தீவிர தேசியவாதி யார்?
அ) தாதாபாய் நௌரோஜி
ஆ) நீதிபதி கோவிந்த ராணடே
இ) பிபின் சந்திர பால்
ஈ) ரொமேஷ் சந்திரா
விடை : இ ) பிபின் சந்திர பால்
5. வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது?
அ) 1905 ஜூன் 19
ஆ) 1906 ஜூலை 18
இ) 1907 ஆகஸ்ட் 19
ஈ) 1905 அக்டோபர் 16
விடை : ஈ ) 1905 அக்டோபர் 16
6. சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்தப் பின்னணியில் நிறைவேற்றப்பட்டது?
அ) கோல் கிளர்ச்சி
ஆ) இண்டிகோ கிளர்ச்சி
இ) முண்டா கிளர்ச்சி
ஈ) தக்காண கலவரங்கள்
விடை : இ ) முண்டா கிளர்ச்சி
7. 1916 ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்?
அ) அன்னி பெசன்ட் அம்மையார்
ஆ) பிபின் சந்திரபால்
இ) லாலா லஜபதி ராய்
ஈ) திலகர்
விடை : ஈ ) திலகர்
8. நீல் தர்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்?
அ ) தீன பந்து மித்ரா
ஆ) ரொமேஷ் சந்திர தத்
இ) தாதாபாய் நௌரோஜி
ஈ) பிர்சா முண்டா
விடை : அ ) தீன பந்து மித்ரா
அலகு : 8
1. அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்பு போராட்டங்களின்போது கைது செய்யப்பட்டவர் யார்?
அ) மோதிலால் நெரு
ஆ) சைஃபுதீன் கிச்லு
இ) முகம்மது அலி
ஈ) ராஜ் குமார் சுக்லா
விடை : ஆ ) சைஃபுதீன் கிச்லு
2. இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது?
அ) பம்பாய்
ஆ) மதராஸ்
இ) கல்கத்தா
ஈ) நாக்பூர்
விடை : இ ) கல்கத்தா
3. விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது?
அ) 1930 ஜனவரி 26
ஆ) 1929 டிசம்பர் 26
இ) 1946 ஜுன் 16
ஈ) 1947 ஜனவரி 15
விடை : அ ) 1930 ஜனவரி 26
4. முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?
அ ) 1858
ஆ ) 1911
இ ) 1865
ஈ ) 1936
விடை : இ ) 1865
5. 1933 ஜனவரி 8 எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது?
அ) கோவில் நுழைவு நாள்
ஆ) மீட்பு நாள் (டெலிவரன்ஸ் டே)
இ) நேரடி நடவடிக்கை நாள்
ஈ) சுதந்திரப் பெருநாள்
விடை : அ ) கோவில் நுழைவு நாள்
6. மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?
அ) 1858 ஆம் ஆண்டு சட்டம்
ஆ) இந்திய கவுன்சில் சட்டம், 1909
இ) இந்திய அரசுச் சட்டம், 1919
ஈ) இந்திய அரசுச் சட்டம், 1935
விடை : ஈ ) இந்திய அரசுச் சட்டம், 1935
அலகு 9
1 ) சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?
அ) T. M. நாயர்
ஆ) P. ரங்கைய நாயுடு
இ) G. சுப்ரமணியம்
ஈ) G. A நடேசன்
விடை : ஆ ) P. ரங்கைய நாயுடு
இந்திய தேசியக் காங்கிரசின் மூன்றாவது மாநாடு / அமர்வு எங்கே நடைபெற்றது?
அ) மெரினா
ஆ) மைலாப்பூர்
இ) புனித ஜாாஜ் கோட்டை
ஈ) ஆயிரம் விளக்கு
விடை : ஈ ) ஆயிரம் விளக்கு
3. “அதி நவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு
வண்டியே சிறந்தது ” எனக் கூறியவர் யார்?
அ) அன்னிபெசன்ட்
ஆ) M. வீரராகவாச்சாரி
இ) B.P வாடியா
ஈ) G.S அருண்டேல்
விடை : அ ) அன்னிபெசன்ட்
4. கீழ்க்காண்பவர்களுள் சுயராஜியவாதி யார்?
அ) S. சத்தியமூர்த்தி
ஆ) கஸ்துாரிரங்கர்
இ) P. சுப்பராயன்
ஈ) பெரியார் ஈ.வே.ரா
விடை : அ ) S. சத்தியமூர்த்தி
5. சென்னைக்கருகேயுள்ள உதயவனத்தில் சத்யாகிரக முகாமை அமைத்தவர் யார்?
அ) K. காமராஜ்
ஆ) C. ராஜாஜி
இ) K. சந்தானம்
ஈ) T. பிரகாசம்
விடை : ஈ ) T. பிரகாசம்
6. இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப்பெற்றது?
அ) ஈரோடு
ஆ) சென்னை
இ) சேலம்
ஈ) மதுரை
விடை : இ ) சேலம்
அலகு 10
1. 1709 இல் தரங்கம்பாடியில் ----- ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார் .
அ) கால்டுவெல்
ஆ) எப்.டபிள்யூ. எல்லிஸ்
இ) சீகன்பால்கு
ஈ) மீனாட்சி சுந்தரம்
விடை : இ ) சீகன்பால்கு
2. 1893 இல் ஆதி திராவிட மகாஜன சபையை ------- நிறுவினார்.
அ) இரட்டைமலை சீனிவாசன்
ஆ) B.R. அம்பேத்கார்
இ) ராஜாஜி
ஈ) எம்.சி. ராஜா
விடை : அ ) இரட்டைமலை சீனிவாசன்
3. இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் ------
இல் உருவாக்கப்பட்டது.
அ) 1918
ஆ ) 1917
இ) 1916
ஈ ) 1914
விடை : ஈ ) 1914
4. அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய
நீதிக் கட்சியால் நிறுவப்பெற்றது.
அ) பணியாளர் தேர்வு வாரியம்
ஆ) பொதுப் பணி ஆணையம்
இ) மாநிலப் பணியாளர் ஆளெடுப்பு வாரியம்
ஈ) பணியாளர் தேர்வாணையம்
விடை : அ ) பணியாளர் தேர்வு வாரியம்
5. சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அ) எம்.சி. ராஜா
ஆ) இரட்டை மலை சீனிவாசன்
இ) டி.எம். நாயர்
ஈ) பி. வரதராஜுலு
விடை : அ ) எம்.சி. ராஜா
*************** ************* ************
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிட Greentamil.in இணையதளம் மாணவர்களை அன்புடன் வாழ்த்துகிறது.
' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை.
தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும் இயங்கலைத்தேர்வில் ( Online Test ) பங்கேற்று சான்றிதழ் பெற்றிட தங்கள் பெயர் , படிக்கும் வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பவும்.
*************** **************** *******
0 Comments