10 ஆம் வகுப்பு - தமிழ் - கவிதைப்பேழை - குறுவினா & விடை - பாடம் முழுமையும் / 10th TAMIL - KAVITHAIPPEZHAI - KURUVINAKKAL - QUEDTION & ANSWER

 

பத்தாம் வகுப்பு - தமிழ்

பொதுத்தேர்வில் வெற்றி 

கவிதைப்பேழை  - குறுவினாக்களும் விடைகளும் 

முன்னுரிமைப் பாடங்கள்

இயல் - 1

1. " மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!". இவ்வடிகளில் ஐம்பெரும் காப்பியங்களில் இடம்பெற்றுள்ள காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

1. சீவக சிந்தாமணி 

2. வளையாபதி 

3. குண்டலகேசி

                            இயல் - 2

2. வசன கவிதை - குறிப்பு வரைக.

                யாப்புக்கட்டுக்கு அப்பாற்பட்டு உரைநடையும் கவிதையும் இணைவது வசன கவிதை ஆகும்.

3 . பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக. *

தம்பி அழாதே! விளையாடு! நாம் விளையோடுவோமா! திண்பண்டம் தருகிறேன். சாப்பிடு. அம்மா, அப்பா இப்போது வந்து விடுவர்


                      இயல் - 3

4. 'நச்சப் படாதவன் செல்வம் - இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக

நச்சப்படாதவன் - பிறருக்கு உதவி செய்யாமல் ஒருவராலும் விரும்பப்படாதவர்

5. கொடுப்பதூஉம் துய்ப்பதுஉம் இல்லார்க்கு அடுக்கிய

கோடிஉண் டாயினும் இல். - இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.

கொடுப்பதூஉம்  - இன்னிசை அளபெடை

துய்ப்பதூஉம்  - இன்னிசை அளபெடை

6.பொருளுக்கேற்ற அடியை பொருத்துக.

* உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக்காக்கப்படும்ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை


* ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றது -  உயிரினும் ஓம்பப் படும்

ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர்நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று

விடை

* உயிரைவிடச் சிறப்பாகப்  பேணிக்   காக்கப்படும் -  உயிரினும் ஓம்பப் படும்.

* ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றது -  நடு ஊாருள் நச்சு மரம் பழுத்தற்று

* ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் -   ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை.

7. எய்துவர் எய்தாப் பழி-இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது?

எய்/துவர் - நேர் நிரை -  கூவிளம்

எய்/ தாப் - நேர் நேர் - தேமா 

பழி - நிரை -  மலர்

                              இயல் - 4

8. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக?

1. மருந்தால் மட்டும் நோய் நீங்கி விடாது.

2. அன்போடு நோயாளிக்கு மருத்துவம் செய்வதும் பயன் தரும்.

9. 'நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேன் என்று யார் யாரிடம் கூறினார்?

குலசேகர ஆழ்வார், இறைவனிடம் கூறினார்.

                                இயல் - 5

10. செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.

* அருளைப் பெருக்கிட கல்வி கற்போம் !

*  அறிவைத் திருத்திட கல்வி கற்போம் !

 * அறியாமை அகற்றிட கல்வி கற்போம் !

                               இயல் -6

11. உறங்குகின்ற கும்பகன்ன 'எழுந்திராய் எழுந்திராய்'

காலதூதர் கையிலே ' உறங்குவாய் உறங்குவாய்' கும்ப கர்ணனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

* பொய்யான வாழ்வெல்லாம் அழியத் தொடங்கி விட்டது. எழுந்திராய்! எழுந்திராய்! என எழுப்பினர்.

* எமனுடைய தூதர் கைகளிலே உறங்கச் சொல்கிறார்கள்.

12. கரப்பிடும்பை இல்லார் - இத்தொடரின் பொருள் கூறுக.

            பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பத்தைச் செய்யாதவர்.

13. வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்த குறளின் கருத்து என்ன?

                ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால் உதவி கேட்டு
வருபவரின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும்.


14. பின்வருபவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன்?

1.கூரான ஆயுதம் உழைத்ததால் கிடைத்த ஊதியம். 

2.அது பகைவரை வெல்லும்.

                                   இயல் -7

15. மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?

1. அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்து நிற்க விரும்பினர்.

2. அவற்றைக் கல்லில் செதுக்கினர்.
  
                      இயல் -8

16. கொள்வோர் கொள்க குரைப்போர் குரைக்க
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது' அடி எதுகையை எடுத்தெழுதுக.

இலக்கணக் குறிப்பெழுதுக: கொள்க,குரைக்க

அடியெதுகை - கொள்வோர், உள்வாய் - ள ்

இலக்கணக்குறிப்பு - கொள்க, குரைக்க - 
வியங்கோள் வினைமுற்று

                                இயல் - 9

17. “காய்மணி யாகி முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்” உவமை உணர்த்தும் கருத்து யாது?

        இளம்பயிர் வளர்ந்து நெல்மணியாய் ஆவதற்கு முன் காய்ந்தது போல்
கருணையன் வளர்ந்து ஆளாகும் முன்னரே தாயை இழந்து வாடுகின்றான்.

***************  *************   ************

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிட Greentamil.in இணையதளம் மாணவர்களை அன்புடன் வாழ்த்துகிறது.

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 
தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை.

தினமும்  இரவு 8 மணிக்கு நடைபெறும் இயங்கலைத்தேர்வில் ( Online Test ) பங்கேற்று சான்றிதழ் பெற்றிட தங்கள் பெயர் , படிக்கும் வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பவும்.

***************   ****************   *******



Post a Comment

0 Comments