9 ஆம் வகுப்பு - தமிழ்
இயல் 5 , குடும்ப விளக்கு
வினா உருவாக்கம்
பைந்தமிழ் மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , மதுரை - 97961 41410
************** ************* ******
தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் தேர்வு எழுதி சான்றிதழ் பெற விரும்புவோர் தங்கள் பெயர் , வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எனண்ணிற்கு அனுப்பி இணைப்பைப் பெறலாம்.
****************** ************* **********
1) குடும்ப விளக்கு ' என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ ) சுரதா
ஈ) முடியரசன்
விடை : ஆ ) பாரதிதாசன்
2 ) குடும்ப விளக்கு ------- பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
அ ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
விடை : ஈ ) ஐந்து
3 ) பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய ----- நூலுக்கு சாகித்திய அகாதமி விருது
வழங்கப் பட்டது.
அ ) பிசிராந்தையார்
ஆ) குடும்ப விளக்கு
இ) புரட்சிக்கவி
ஈ) இருண்டவீடு
விடை : அ ) பிசிராந்தையார்
4 ) கீழ்க்காணும் நூல்களில்
பாரதிதாசன் எழுதாத நூல் எது?
அ ) அழகின் சிரிப்பு
ஆ) தமிழியக்கம்
இ) பாண்டியன் பரிசு
ஈ) பாஞ்சாலி சபதம்
விடை : ஈ ) பாஞ்சாலி சபதம்
5) புதுமைக் கருத்துகளை இயம்பும் வகையில் இருபதாம் நூற்றாண்டில் எழுந்தவை ----- இலக்கியங்கள்.
அ) பக்தி
ஆ) மறுமலர்ச்சி
இ) நவீன
ஈ) சங்க
விடை : ஆ ) மறுமலர்ச்சி
6 ) கல்வி இல்லாத பெண்களை ----- நிலம் என்கிறார் பாரதிதாசன்.
அ) களர்
ஆ) தரிசு
இ) குறிஞ்சி
ஈ) பாலை நிலம்
விடை : அ ) களர்
7 ) வையம் என்பதன் பொருள் ------
அ) நாடு
ஆ) உலகம்
இ) மாநிலம்
ஈ) வானுலகம்
விடை : ஆ ) உலகம்
8) சமைப்பவர் உணவோடு ------- யும் படைக்கின்றார்.
அ) சாதனையையும்
ஆ) இன்பத்தையும்
இ) துன்பத்தையும்
ஈ) கொள்கையையும்
விடை : ஆ ) இன்பத்தையும்
9 ) உணவினை ஆக்கல் மக்கட்கு ------
ஆக்கல் அன்றோ?
அ) உணர்வு
ஆ) உயிர்
இ ) உள்ளம்
ஈ) உடைமை
விடை : ஆ ) உயிர்
10 ) பெண்களுக்கு எப்போதும் -- --- வேண்டும் என்கிறார் பாரதிதாசன்.
அ ) கல்வி
ஆ) வீரம்
இ) தன்மானம்
இ) செல்வம்
விடை : அ ) கல்வி
11 ) கற்ற பெண்ணின் குடும்பம் ------ ஆக மிளிரும்.
அ ) பூஞ்சோலையாக
ஆ) அகல் விளக்காக
இ) பள்ளியாக
ஈ) பல்கலைக்கழகமாக
விடை : ஈ ) பல்கலைக்கழகமாக
12) குடும்ப விளக்கு இரண்டாம்
பகுதியில் ----- தலைப்பிலுள்ள
தலைவியின் பேச்சு பாடப்பகுதியாக
அமைந்துள்ளது.
அ) கல்வி
ஆ) வேலை
இ) விருந்தோம்பல்
ஈ) வீரம்
விடை : இ ) விருந்தோம்பல்
13 ) தணல் என்பதன் பொருள் ------
அ) தண்ணீர்
ஆ) நெருப்பு
இ) கல்வி
ஈ) தாகம்
விடை : ஆ ) நெருப்பு
14 ) சமைக்கும் கலன் என்னும் பொருள் தரும் சொல் எது ?
அ) தாலி
ஆ) தாளி
இ) தாழி
ஈ) அ , ஆ இரண்டும்
விடை : இ ) தாழி
15 ) பெண்கல்வி வேண்டும் யாண்டும் - இவ்வடியில்' யாண்டும்' என்ற சொல்லின்
பொருள் -----
அ) எப்பொழுதும்
ஆ) பகற்பொழுதும்
இ) இரவுப் பொழுதும்
ஈ) சில நேரங்களிலும்
விடை : அ ) எப்பொழுதும்
16 ) கல்வி இல்லாத பெண்கள்
களர்நிலம் அந்நிலத்தில் - இவ்வடிகளில் அமைந்துள்ள தொடை நயம்
அ) மோனை
ஆ) எதுகை
இ) இயைபு
ஈ) அனைத்தும்
விடை : அ ) மோனை
17 ) இலக்கணக் குறிப்புத் தருக - மாக்கடல்
அ) உவமைத்தொகை
ஆ) உம்மைத்தொகை
இ) உரிச்சொல் தொடர்
ஈ) பண்புத்தொகை
விடை : இ ) உரிச்சொல் தொடர்
18 ) ஆக்கல் - இலக்கணக்குறிப்பு ------
அ) தொழிற்பெயர்
ஆ) உம்மைத்தொகை
இ ) பெயரெச்சம்
ஈ) உவமைத்தொகை
விடை : இ ) தொழிற்பெயர்
19 ) வில்வாள் - இலக்கணக் குறிப்பு -----
அ) உவமைத்தொகை
ஆ) பண்புத்தொகை
இ) உரிச்சொல் தொடர்
ஈ) உம்மைத்தொகை
விடை : ஈ ) உம்மைத்தொகை
.
20 ) மலர்க்கை - இலக்கணக்
குறிப்பு
அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை
இ ) உவமைத்தொகை
ஈ ) உம்மைத்தொகை
விடை : இ ) உவமைத்தொகை
**************** ************* *********
0 Comments