9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 3 - வாழ்வியல் இலக்கியம் - திருக்குறள் - வினா & விடை / 9th TAMIL EYAL 3 - THIRUKKURAL - ONLINE TEST - QUESTION & ANSWER

 


9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல்

3 - பண்பாடு - திருக்குறள் -

இயங்கலைத் தேர்வு

வினா உருவாக்கம் : 

' பைந்தமிழ்' மு.மகேந்திர பாபு தமிழாசிரியர், மதுரை.

1) உலகப் பொதுமறை என  அழைக்கப்படும் நூல் -----

அ) திருக்குறள்

ஆ) புறநானூறு

 இ ) அகநானூறு

ஈ ) திரிகடுகம்

விடை : அ ) திருக்குறள்

2) கீழ்க்காணும் சிறப்புப் பெயர்களில்
திருவள்ளுவரைக் குறிக்காதது எது?

அ) நாயனார்

ஆ) தெய்வப்புலவர்

இ )  பெருநாவலார்

ஈ) கவியோகி

விடை : ஈ ) கவியோகி 

3) முற்காலத்தில் எழுதப்பட்ட திருக்குறள்
உரைகளுள் சிறந்த உரை -----

அ) மணக்குடவர் உரை

ஆ) பரிமேலழகர் உரை

இ) காளிங்கர் உரை

ஈ) தருமர் உரை

விடை : ஆ ) பரிமேலழகர் உரை

4) திருக்குறளைப் போற்றும் பாடல்களின்
தொகுப்பே------ நூல்.

அ) நான்மணிமாலை

ஆ) திருவள்ளுவமாலை

இ) பிள்ளைத்தமிழ்

ஈ) குறள் எழுச்சிப்பாமாலை

விடை : ஆ ) திருவள்ளுவமாலை

5) திருக்குறள் ------ நூல்களுள் ஒன்று.

அ ) பதினெண்கீழ்க்கணக்கு

ஆ) பதினெண்மேற்கணக்கு

இ) ஐம்பெருங்காப்பியம்

ஈ) ஐஞ்சிறுங்காப்பியம்

விடை : அ ) பதினெண்கீழ்க்கணக்கு

6) திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு -------

அ) 1802

ஆ) 1812

இ) 1822

ஈ) 1832

விடை : ஆ ) 1812

7) தீரா இடும்பை தருவது எது?

அ) ஆராயாமை , ஐயப்படுதல்

ஆ) குணம் , குற்றம்

இ)பெருமை , சிறுமை

ஈ) நாடாமை , பேணாமை

விடை : அ ) ஆராயாமை , ஐயப்படுதல்

8) திருக்குறள் அகரத்தில் தொடங்கி ------
ஒற்றில் முடிகிறது.

அ)யகர

ஆ) மகர

இ) னகர

ஈ) லகர

விடை : இ ) னகர

9 ) திருக்குறளில் இருமுறை வரும் ஒரே
அதிகாரம் எது?

அ) பொறையுடைமை

ஆ) கேள்வி

இ ) வினைத்தூய்மை

ஈ) குறிப்பறிதல்

விடை : ஈ ) குறிப்பறிதல் 

10) செல்வத்துள் செல்வம் -----அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.

அ) பொருட்செல்வம்

ஆ) கல்விச்செல்வம்

இ )  செவிச்செல்வம்

ஈ) பொற்செல்வம்

விடை : இ ) செவிச்செல்வம்

11) தாயின் பசியைக் கண்டபோதும் -----
பழிக்கும் செயல்களைச் செய்யாதே .

அ) சான்றோர்

ஆ) மூத்தோர்

இ) ஆசிரியர்

ஈ) நண்பர்

விடை : அ ) சான்றோர்

12) குறளோவியம் என்ற நூலை
எழுதியவர் யார் ?

அ) மகாகவி பாரதியார்

ஆ) பாவேந்தர் பாரதிதாசன்

இ) அறிஞர் அண்ணா

ஈ) கலைஞர் மு.கருணாநிதி

விடை : ஈ ) கலைஞர்.மு.கருணாநிதி

13 ) திருக்குறள் மூலத்தை முதன்முதலில்
அச்சிட்டவர் ------

அ) உ.வே.சா

ஆ) வ.உ.சி.

இ) தஞ்சை ஞானப்பிரகாசர்

ஈ) ஆபிரகாம் பண்டிதர்

விடை : இ ) தஞ்சை ஞானப்பிரகாசர்.

14) திருக்குறளுக்கு முதன்முதலில் உரை
எழுதியவர் ------

அ) டாக்டர்.மு.வரதராசனார்

ஆ) பரிமேலழகர்

இ) மணக்குடவர்

ஈ ) சாலமன் பாப்பையா

விடை : இ ) மணக்குடவர்

15 ) திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில்
முழுமையாக மொழி பெயர்த்தவர் -----

அ) டால்ஸ்டாய்

ஆ) ஜி.யு.போப்

இ) வீரமாமுனிவர்

ஈ) உ.வே.சா.

விடை : ஆ ) ஜி.யு.போப்

16) திருக்குறளில் கோடி என்ற சொல் -----
இடங்களில் இடம்பெற்றுள்ளது.

அ) ஐந்து

ஆ) ஆறு

இ) ஏழு

ஈ) எட்டு

விடை : இ ) ஏழு

17) பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்
தத்தம் 
------- கட்டளைக் கல்.

அ) செல்வமே

ஆ) கருமமே

இ ) செயலே

ஈ) பிறப்பே

விடை : ஆ ) கருமமே

18) சலத்தால் பொருள் செய்தே மார்த்தல்
பசுமண்
 கலத்துநீர் பெய்திரீஇ யற்று -
இக்குறளில் பயின்று வந்துள்ள அணி ----

அ) உவமை அணி

ஆ) பிறிதுமொழிதலணி

இ) ஏகதேச உருவக அணி

ஈ) சொற்பொருள் பின்வருநிலையடயணி

விடை : அ ) உவமை அணி

19 ) குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல் - இக்குறளில்
-------  அணி வந்துள்ளது.

அ) உருவக அணி

ஆ) இல்பொருள் உவமையணி

இ) சொற்பொருள் பின்வருநிலையணி

ஈ) உயர்வு நவிற்சி அணி

விடை : இ ) சொற்பொருள் பின்வருநிலையணி

20) நுணங்கிய என்ற சொல்லின்
பொருள் ------

அ) அழகான

ஆ) இயல்பான

இ) சிறப்பான

ஈ) நுட்பமான

விடை :ஈ ) நுட்பமான

***************   *************   *************

Post a Comment

1 Comments

  1. பதில் நாங்கள் தேர்வுசெய்துபோல் வேண்டும்

    ReplyDelete