PG - TRB - TAMIL - 2013 - 2014 - ORIGINAL QUESTION PAPER - QUESTION & ANSWER - ஆசிரியர் தேர்வு வாரியம் - முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு -

 

 

 

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய 

முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு 

வினாத்தாள் - 2013 - 2014

வினாக்களும் விடைகளும் 

PG - TRB - TAMIL 

ORIGINAL QUESTION PAPER - 2013 - 2014

QUESTION & ANSWER 

****************    *************   ***********

1 . உழவர்களின் வாழ்வியலைக் கூறும் சிற்றிலக்கியம் எது?

A) பள்ளு

B) உலா

C) கலம்பகம்

D ) தூது

2. பிள்ளைத் தமிழில் முதலாவதாக எப்பருவம் அமைகிறது?

A) முத்தப் பருவம் 

B) அம்புலிப் பருவம்

C) காப்புப் பருவம் 

D) தாலப் பருவம்

3 . முதலாழ்வார்களின் எண்ணிக்கை யாது?

A) 5

B) 6

C) 7

D) 3

4 . ' கொல்லா விரம் குவலயமெல்லா மோங்க எல்லோர்க்குஞ்

சொல்லுவதென் இச்சை பராபரமே' என்று உரைத்தவர் யார்?

A) தாயுமானவர் 

B) பட்டினத்தார்

C) வள்ளலார்

D) திருமூலர்

5 . குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் பெயர் தருக.

A) ஜெயங்கொண்டார்

B) ஒட்டக்கூத்தர்

C) திரிகூடராசப்பக் கவிராயர்

D) குற்றாலநாதர்

6 . ஒரு குறிப்பிட்ட வேலையைக் கற்றது பின்னர் மற்றொரு வேலை கற்பதற்கு உதவியாக இருப்பது எவ்வா அழைக்கப்படுகிறது?

A) எதிர்மறை கற்றல் மாற்றம்

B) பூஜ்ய கற்றல் மாற்றம்

C) நேரிடையான கற்றல் மாற்றம்

D) இவை எதுவும் இல்லை

7 . மனித தேவைகளை உயர்நிலைப் படிக் கோட்பாடாக உருவாக்கியவர்?

A) மார்கன்

B) முர்ரே

C) அட்கின்ஸன் 

D) ஆப்ரகாம் மாஸ்லோ

8 . தற்காப்பு நடத்தை அல்லாதது எது?

A) காரணம் கற்பித்தல்

B) ஈடு செய்தல்

C) புறத்தெரிதல்

D) மனப்போராட்டம்

9. இவற்றில் எது ஆளுமையின் உயிரியியல் காரணி அல்ல?

A) உடல் சார்ந்த பண்புகள் 

B) நுண்ணறிவு

C) நரம்பு மண்டலம் 

D) வேதிப்பொருட்கள்

10. நுண்ணறிவு ஈவு கணக்கிடும் சூத்திரம் எது?

A ) மன வயது

கால் வயது  X100

B ) கால வயது

மன வயது  X 100

C) மனவயது X காலவயது X 100

D) மனவயது X காலவயது - 100

11. வைகறை, விடியல்

A) முல்லைத் திணைக்குரிய காலம்

B) குறிஞ்சித் திணைக்குரிய காலம்

C) மருதத் திணைக்குரிய காலம்

D) நெய்தல் திணைக்குரிய காலம்

12 'இருத்தலின்' உரிப்பொருளுக்குரிய திணை

A) குறிஞ்சித் திணை 

B) நெய்தல் திணை

C) முல்லைத் திணை 

D) மருதத் திணை

13. மருதநிலத் தலைமக்கட் பெயர்

A) ஊரன் மகிழ்நன்

B) சேர்ப்பன் துறைவன்

C) மீளி, விடலை 

D) மலைநாடன், வெற்பன்

14. முல்லைத்திணைக்குரிய தெய்வம்

A) இந்திரன்

B) கண்ணன்

C) கொற்றவை

D) வருணன்

15. மருதத் திணைக்குரிய பூ

A) காந்தள் பூ

B) மராம் பூ

C) தாமரை

D) நெய்தல் பூ

16. 'அவர் வந்தார்' என ஒருவரை மட்டும் குறிப்பது

A) திணை வழுவமைதி 

B) பால் வழுவமைதி

C) இட வழுவமைதி 

D) எண் வழுவமைதி

17. 'துஞ்சினார்' என்று செத்தாரைக் குறிப்பது

A) மங்கல வழக்கு 

B) இடக்கரடக்கல்

C) ஆகுபெயர்

D) குழூஉக்குறி

18. 'அண்ணாக் கயிறு' என்பது

A) அண்ணனுக்கு கட்டும் கயிறு

B) அர்ணாக்கொடி

C) அரைஞாண் கயிறு

D) தாம்புக் கயிறு

19. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குக் கடன் வாங்கப்பெற்ற சொற்கள்

A) ஓலை, கறி, காசு, தேக்கு

B) மயில், மாலை, பழம், ஏலம்

C) குடி, கூலி, பெருமகன், கல்

D) அரிசி, இஞ்சி, கருவா (பட்டை), தோகை

20. 'Bicycle' என்பதன் கலைச் சொல்லாக்கம்

A) சைக்கிள்

B) துவிச் சக்கர வாகனம்

C) ஈருருளி 

D) மிதிவண்டி

21. “குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்” என மான உணர்ச்சி மிகுந்த பாடல் பாடிய மன்னன் யார்?

A) சேரமான் கணைக்கால் இரும்பொறை

B) கிள்ளிவளவன்

C) பாண்டியன் அறிவுடைநம்பி

D) நலங்கிள்ளி

22. “பெரியோரை வியத்தலும் இலமே : சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” எனப் பாடியவர் யார்?

A) ஔவையார்

B) உலோச்சனார்

C) கணியன் பூங்குன்றனார் 

D) பரணர்

23. உவமையால் பெயர் பெற்ற புலவர்

A) ஓதலாந்தையார் 

B) கல்பொருசிறுநுரையார்

C) வன்பரணர்

D) அம்மூவனார்

24. கோப்பெருஞ்சோழனோடு பிசிராந்தையாரைப் போல் நட்புக்
கொண்ட மற்றொரு புலவர் யார்?

A) பொத்தியார்

B) கபிலர்

C) தொல்கபிலர் 

D) பெருஞ்சித்திரனார்

25. “எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே” எனப் பாடிய புலவர் யார்?

A) பாரி மகளிர்

B) பெருங்கோப் பெண்டு

C) வெள்ளி வீதியார்

D) ஔவையார்

26. தமிழ்மொழியை உயர்தனிச்செம்மொழி என்று முதன்முதலில் கூறியவர்

A) மறைமலை அடிகள் 

B) திரு.வி. கல்யாண சுந்தரம்

C) பரிதிமாற் கலைஞர் 

D) எஸ். வையாபுரிப் பிள்ளை

27. தொல்காப்பியர் சுட்டும் உரசொலிகள்

A) ல,ள

B) ப,ம

C) ச,ஞ

D) ர,ழ

28 . ' என்' என்னும் சொல் யார் காலத்தில் 'அன்' என்று மாறியது ?

A ) பல்லவர்

B) பாண்டியர்

C ) சேரர்

D) சோழர்

29. முதன் முதலாகத் 'தமிழன்' என்ற சொல்லாட்சி காணப்படும் இலக்கியம்


A) சம்பந்தர் தேவாரத்தில்
 
B) திருமந்திரத்தில்

C) அப்பர் தேவாரத்தில்

D) திருவாசகத்தில்

30. எந்த அளபெடை சோழர் காலத் தமிழில் காரணவினை
காட்டும் உருபாக இருந்தது?

A) இகரம்

B) உகரம்

C) அகரம்

D) எகரம்

31. உவமை தோன்றும் நிலைக்களன்

A) பகை

B) காதல்

C) விளையாட்டு

D) வினை

32. பொறி நுதல் வியர்த்தல்

A) இரண்டாம் நிலை மெய்ப்பாடு

B) மூன்றாம் நிலை மெய்ப்பாடு

C) முதல் நிலை மெய்ப்பாடு

D) ஆறாம் நிலை மெய்ப்பாடு

33. உவமப் போலி

A) நான்கு

B) மூன்று

C) இரண்டு

D) ஐந்து

34. உள்ளுறை உவமத்தின் பயன்

A) சுவை

B) கற்பனை

C) வடிவம்

D) உணர்ச்சி

35. 'தளிர் அடிமென் நகை மயிலைத் தாது அவிழ்தார்க் காளைக்கு' - இவ்வடிகளில் அமைந்துள்ளது

A) உவமை

B) அடைமொழி

C) உள்ளுறை

D) இறைச்சி

36. கவிதை இலக்கியங்களுள் பேரிலக்கியமாகத் திகழ்வது

A) காப்பியம்

B) அற இலக்கியம்

C) பக்தி இலக்கியம் 

D) சிற்றிலக்கியம்

37. மணநூல் என்று அழைக்கப்படுவது

A) சிலப்பதிகாரம்

 B) மணிமேகலை

C) வளையாபதி 

D) சீவகசிந்தாமணி

38. 'அடிகள் நீரே அருள்க” என்ற கூற்றுக்கு உரியவர்

A) கோவலன்

B) மாடலன்

C) சாத்தனார்

D) இளங்கோவடிகள்

39. மணிமேகலையால் யானைத் தீ பசிநோய் தீர்க்கப்பட்டவள்

A) ஆதிரை

B) சுதமதி

C) சித்திராபதி

D) காயசண்டிகை

40. குண்டலகேசிக்கு எதிராகத் தோன்றிய வாத நூல்

A) நீலகேசி

B) வளையாபதி

C) உதயண குமார காவியம் 

D) சூளாமணி

41. ஒலி வடிவிலும் வரி வடிவிலும் அமைந்த எழுத்துகளின்
தனித்தன்மையை விளக்குவது

A) மொழி மரபு

B) தொகை மரபு

C) நூன் மரபு

D) பிறப்பியல்

42. சகார ரூகாரம் பிறப்பு

A) நுனிநா அண்ணம் 

B) இடைநா அண்ணம்

C) முதல்நா அண்ணம் 

D) கடைநா அண்ணம்

43. கி.பி. 17ஆம் நூற்றாண்டில் எழுந்த சொல்லிலக்கண நூல்

A) பிரயோக விவேகம்

B) நேமிநாதம்

C) முத்துவீரியம் 

D) தமிழ் நெறி விளக்கம்

44. 'சொல்லும் பொருளும்' ஒரு தாளின் இரண்டு பக்கம்
போன்றது என்று கூறியவர்

A) கால்டுவெல் 

B) டிசசூர்

C) சோம்ஸ்கி

D) சீகன் பால்கு

45. யாப்பிலக்கணக் கலைக் களஞ்சியம்' என அழைக்கப்படுவது

A) யாப்பருங்கலக்காரிகை

B) யாப்பருங்கலம்

C) யாப்பருங்கல விருத்தியுரை

D) இலக்கண விளக்கம்

46. குழந்தை மையக் கல்வியில் ஆசிரியரின் பணி

A) கற்றலுக்கு மாணவர்களை ஊக்கப்படுத்துதல்

B) உகந்த சுற்றுச்சூழலை அளித்தல்

C) குழுவின் செயல்படு உறுப்பினராகத் திகழ்தல்

D) மேற்கூறிய அனைத்தும்

47. மகிழ்ச்சியுடன் கற்றல் என்பது கீழ்க்கண்ட எந்தக்கற்பித்தல் வகைக் கோட்பாடுகளை அடிப்படையாகக்
கொண்டது ?

A) செயல்வழிக் கற்றல்

 B) குழந்தை மையக் கற்றல்

C) தேர்வு மையக் கற்றல் 

D) (A) மற்றும் (B) இரண்டும்

48. 'தி வில்லேஜ் காலேஜ்' என்ற வெளிநாட்டின் அடிப்படையில்
சமுதாயப் பள்ளியை முதன் முதலில் நிறுவியவர்

A) இவான் இல்லிச் 

B) ஹென்றி மோரிஸ்

C) ஜான் டூயி

D) மகாத்மா காந்தி

49. இந்தியாவில் 1961 ஆம் ஆண்டு 'சைனிக் பள்ளிகள்' என்ற
பள்ளி அமைப்புகள் இவருடைய கருத்தில் உருவானது?

A) A.K. கிருஷ்ண மேனன் 

B) J.K. கிருஷ்ண மேனன்

C) S.K கிருஷ்ண மேனன் 

D) V.K கிருஷ்ண மேனன்

50. 5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்குக் கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் நிறுவனம் எது?

A) மத்தியக் கல்வி நுட்பவியல் நிறுவனம், புது டெல்லி

B) மத்தியக் கல்வி நுட்பவியல் நிறுவனம், கர்நாடகம்

C) மத்தியக் கல்வி நுட்பவியல் நிறுவனம், ஆந்திரப்பிரதேசம்

D) மத்தியக் கல்வி நுட்பவியல் நிறுவனம், தமிழ்நாடு

51. கட்டளைக் கலித்துறையில் அமைந்த யாப்பு நூல்

A) இலக்கண விளக்கம்

B) யாப்பருங்கலம்

C) யாப்பருங்கல விருத்தியுரை

D) யாப்பருங்கலக் காரிகை 

52. அணியிலக்கணம் கூறும் நூல்களுள் முதன்மையானது

A) தண்டியலங்காரம் 

B) மாறனலங்காரம்

C) இந்திர காளியம் 

D) மாறனகப் பொருள்

53. தண்டியலங்கார பொருளணியலில் தன்மையணி முதல்  பாவிக அணி வரை உள்ள மொத்த அணிகள்

A) 25 அணிகள் 

B) 27 அணிகள்

C) 35 அணிகள் 

D) 37 அணிகள்

54. 'தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட  வடு' இதில் இடம் பெறும் அணி

A) உவமையணி

B) வேற்றுமையணி

C) அதிசய வணி 

D) சிலேடை அணி

55. ஐந்திலக்கணம் கூறும் முதல் இலக்கண நூல்

A) வீரசோழியம் 

B) முத்துவீரம்

C) நேமிநாதம்

D) பிரயோக விவேகம்

56. பன்னாட்டுக் கூட்டமைப்பு நாடுகளின் பொதுச்சபை  1974 -ஆம் ஆண்டினை என அறிவித்தது.

A) உலக ஒற்றுமை ஆண்டு

B) உலக சுற்றுச்சூழல் ஆண்டு

C) உலக மக்கள்தொகை ஆண்டு

D) உலகக் கல்வி ஆண்டு

57. கற்போர் கட்டுப்பாட்டு கற்பித்தல் முறை (LCI) ---------   என்பவரால் உருவாக்கப்பட்டது.

A) இராபர்ட் மேகர் 

B) BE ஸ்கின்னர்

C) சிட்னி - பிரஸ்ஸி 

D) நார்மென் A. கௌடர்

58. பெண்களுக்காக 'மனவியல்' பாடத்தை பரிந்துரை செய்த   கமிட்டி

A) தாராசந்த் கமிட்டி

B) கோத்தாரி கமிட்டி

C) AL முதலியார் கமிட்டி

D) டாக்டர் இராதாகிருஷ்ணன் கமிட்டி

59. 'புத்தக திரிபுக்காட்சி' உருவ  விளக்கப்படம் பின்வருவனவற்றுள் எதனைக் குறிப்பதாக அமைகிறது?

A) பகுப்புக் கவனம் 

B) கவன வீச்சு

C) கவன வகுப்பு

D) கவன ஊசல் 

60. மனவெழுச்சி வளர்ச்சியில் 'ஹெடானிசக்' என்ற  கருத்து எதனை மையமாகக் கொண்டு அமைகிறது?

A) இனிமை

B) முதிர்ச்சி

C) கற்பித்தல் முறைகள்

D) அடைவு

61. கி.பி. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு  வரை உள்ள காலம்

A) நீதி நூல் காலம் 

B) பக்தி இலக்கிய காலம்

C) சிற்றிலக்கிய காலம் 

D) நாடக இலக்கிய காலம்

62. காப்பிய விதிகள் பற்றிக் குறிப்பிடும் இலக்கண நூல்

A) தண்டியலங்காரம் 

B) யாப்பருங்கலக் காரிகை

C) நன்னூல்

D) தொல்காப்பியம்

63. உலக நிலையாமையை எடுத்துக்காட்டும் நீதிநூல்

A) திரிகடுகம்

B) ஆசாரக்கோவை

C) ஏலாதி

D) முதுமொழிக்காஞ்சி

64. இலத்தீன் மொழியில் திருக்குறளை மொழி பெயர்த்தவர்

A) இராஜாஜி

B) ஜி.யூ. போப்

C) வீரமாமுனிவர் 

D) வ.வே.சு. ஐயர்

65. புகார் காண்டத்தின் இறுதி காதை

A) நாடுகாண் காதை 

B) காடுகாண் காதை

C) கொலைக்களக் காதை 

D) வரம் தரும் காதை

66. "The God of Small Things' என்ற நூலின் ஆசிரியர்

A) அருந்ததிராய்

B) சல்மான் ருஷ்டி

C) ஆர்.கே. நாராயணன் 

D) கே.ஆர். நாராயணன்

67. சோடியம் குளோரைடு (உப்பினை) நீரில் சேர்க்கும் போது,  கரைசலின் கொதிநிலை

A) சரியாக 100°C

B) 100° C விட அதிகம்

C) 100° C விட குறைவு

D) சரியாக 0°C

68. NH 7 பின்வருவனவற்றை இணைக்கிறது

A) டெல்லி மற்றும் கன்னியாகுமரி

B) காஷ்மீர் மற்றும் கன்னியாகுமரி

C) ஆக்ரா மற்றும் கன்னியாகுமரி

D) வாரணாசி மற்றும் கன்னியாகுமரி

69. நோபல் அமைதி பரிசிற்காக மிக இளம் வயதில் பரிந்துரைக்கப்பட்ட, பெண் கல்வி  உரிமைக்காக  அறியப்படுபவர்

A) நூர்-உல்-பாத்திமா 

B) மலாலா

C) யாஸ்மின்

D) நூர்-உல்-ஃபரிதா

70. ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி யாருடைய ஆட்சிக்  காலத்தில் இந்தியாவில் வணிகம் செய்யும் உரிமையைப்  பெற்றது?

A) ஷாஜகான்

B) ஜஹாங்கீர்

C) பகதூர் ஷா

D) ரங்கசீப்

71 ஒலியை ஆராயும் முறையை எத்தனை பிரிவாக  வகுக்கிறார்கள் ?

B) நான்கு

A) இரண்டு

D) ஆறு

C) மூன்று

72. அரேபியா, எகிப்து போன்ற பகுதிகளில் பேசப்படும்  மொழியினம்

B) உலாப் இனம்

A) அன்னமியினம்

C) நீக்ரோ இனம் 

D) செமிட்டிக் இனம்

73. குவிழொழி எந்த மாநிலத்தில் பேசப்படுகிறது ?

A) ஒடிசா

B) மத்தியப்பிரதேசம்

C) பீகார்

D) மைசூர்

74. திராவிட மொழிகளிலுள்ள திணை பால் பாகுபாடு சிறந்தது  என்று கூறியவர்

A) வீரமாமுனிவர் 

B) குண்டர்ட்

C) கால்டுவெல்

D) எமனோ

75. 'தமிழ்மொழி பெருமை மிக்க பழைய வரலாறு உடையதாகும்'  என்று உரைத்தவர்

A) தீட்சிதர்

B) தெ.பொ.மீ.

C) ஹீராஸ்

D) சாட்டர்ஜி

76. 'மதுரையைத் தென்தமிழ் மதுரை' எனக் குறிப்பிடும் நூல்

A) சிலப்பதிகாரம் 

B) மணிமேகலை

C) வளையாபதி

D) குண்டலகேசி

77. பதினெண் கீழ்க்கணக்கில் இடம்பெறும் அகநூல்கள் :

A) 4

B) 5

C) 6

D) 7

78. சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதை இடம் பெறும் நூல்

A) சிலப்பதிகாரம் 

B) மணிமேகலை

C) சீவகசிந்தாமணி 

D) குண்டலகேசி

79. வைரவியாபாரி இடம்பெறும் காப்பியம்

A) மணிமேகலை 

B) சீவகசிந்தாமணி

C) வளையாபதி

D) சிலப்பதிகாரம்

80. “பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை
செத்தும்” என்ற வரிகள் இடம் பெறும் நூல்

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) வளையாபதி

D) குண்டலகேசி

81 'தாண்டகவேந்தர்' என்றழைக்கப்பெறுபவர் யார்?

A) திருநாவுக்கரசர் 

B) திருஞானசம்பந்தர்

C) மாணிக்கவாசகர் 

D) சுந்தரர்

82 சைவத் திருமுறைகள் முதல் மூன்று திருமுறைகள்  ஆசிரியர் யார்?

A) திருநாவுக்கரசர்

B) மாணிக்கவாசகர்

C) திருஞானசம்பந்தர்

 D) சுந்தரர்

83. பன்னிரு ஆழ்வார்களுடன் கடவுளைப் பாடாது அடியாராம்  நம்மாழ்வாரைப் பாடியது யார்?

B) திருமங்கை ஆழ்வார்

C) ஆண்டாள்

D) திருப்பணாழ்வார்

A) மதுரகவி ஆழ்வார்


84. தஞ்சைவாணன் கோவையின் ஆசிரியர் பெயர் தருக

A) பொய்யாமொழிப் புலவர் 

B) பொய்கையார்

C) சேக்கிழார்

D) ஒட்டக்கூத்தர்

85. திருமந்திரத்தின் உட்பிரிவாக எத்தனை தந்திரங்கள் இடம் பெற்றுள்ளன?

A) 7

B) 8

C) 9

D) 6

86. 'போர்க்குறிக்காயமே புகழின் காயம்
யார்க்கது வாய்க்கும்! ஆ! ஆ! நோக்கிமின்' - என்று கூறிய கதாபாத்திரம் :

A) குடிலன்

B) நடராசன்

C) சீவகவழுதி

D) நாராயணன்

87. 'பவளக்கொடி' நாடக ஆசிரியர்

A) பரிதிமாற் கலைஞர் 

B) பம்மல் சம்பந்த முதலியார்

C) டி.கே. சண்முகம் 

D) சங்கரதாஸ் சுவாமிகள்

88. 'தமிழ் நாடகத் தந்தை' எனப் போற்றப்படுபவர்

A) பெ. சுந்தரம்பிள்ளை 

B) பம்மல் சம்பந்த முதலியார்

C) பரிதிமாற் கலைஞர் 

D) இராசமாணிக்கம்

89. 'வாசகர் தாள் பனுவலுக்கான அர்த்தங்களை வெளிக்கொணர்கிறார்' என்று கூறும் கோட்பாடு

A) சோசலிச எதார்த்தவாதம்

B) பின் காலனியம்

C) பின் நவீனத்துவம்

D) அமைப்பியல்

90. 'சிட்டுக்குருவி எனது பலகணியின் வழியே வரின் யான் என்னை மறந்து சித்தாகவே மாறி விடுகிறேன்' என்று
கூறிய கவிஞர் :

A) ஷெல்லி

B) கீட்ஸ்

C) காட்டே ரூஸ் 

D) டி.எஸ். எலியட்

91. தமிழ் உரைநடையின் தந்தை என்று அழைக்கப்படுபவர்

A) சீகன் பால்கு ஐயர்

B) ஜி.யூ. போப்

C) வீரமாமுனிவர் 

D) இவர்களுள் எவருமில்லை

92. பாரதியாரின் 'சின்ன சங்கரன் கதை' என்னும் நூல்

A) கதைக் கவிதை 

B) உரைநடை நூல்

C) குறுங்காவியம் 

D) சுயசரிதம்

93. 'வரலாற்றுக் களஞ்சியம்' என்று யாருடைய நாட்குறிப்பைக்
குறிப்பிடுவர்?

A) ஆனந்தரங்கம் பிள்ளை

B) சி.வை. தாமோதரம் பிள்ளை

C) கதிரைவேற் பிள்ளை

D) அ. குமாரசாமிப் பிள்ளை

94. 'காட்டு வாத்து' தொகுப்பினை வெளியிட்ட பதிப்பகம்

A) கசடதபற

B) மணிக்கொடி

C) எழுத்து

D) வானம்பாடி

95. உ.வே. சாமிநாதையர் முதன் முதலில் பதிப்பித்த நூல்


A) சிலப்பதிகாரம் 

B) மணிமேகலை

C) சீவகசிந்தாமணி 

D) பெருங்கதை


96. மூன்றாவது இந்திய தேசிய காங்கிரஸ் (1887) நடைபெற்ற இடம்


) டெல்லி 

B) பம்பாய்

C) சென்னை

D) கல்கத்தா


97. 'கங்கை கொண்ட சோழன்' என அழைக்கப்படுபவர்


A) முதலாம் பராந்தக சோழன்

B) முதலாம் இராஜராஜ சோழன்

C) இரண்டாம் இராஜராஜ சோழன்

D) முதலாம் இராஜேந்திர சோழன்


98. 2013 ICC சாம்பியன் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர் நாயகன் விருது பெற்றவர்


A) தோனி

B) விராட் கோலி

C) ஷிகர் தவான் 

D) ரவீந்திர ஜடேஜா

99. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் பிரிவு :


A) பிரிவு 340

B) பிரிவு 360

C) பிரிவு 370

D) பிரிவு 390

100. NCTE என்பது :

A ) National Council for Technical Education 

B ) National Centre for Teacher Education 

C ) National Council for Teacher Education

D ) National Centre for Technical Education

101. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இருந்ததாகக் கருதப்படும் இடம்

A) கபாடபுரம்

B) உத்திர மதுரை

C) காஞ்சிபுரம்

D) கரந்தை

102 ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் யார்?

A) பூரிக்கோ

B) பாண்டியன் மாறன் வழுதி

C) பெருந்தேவனார் 

D) உருத்திரசன்மனார்

103. பொருநராற்றுப்படை எம்மன்னனின் சிறப்பைப் பாடுகிறது?

A) கரிகால் சோழன்

B) இளந்திரையன்

C) பாண்டியன் நெடுஞ்செழியன்

D) நல்லியக் கோடன்

104. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

A) இரண்டாம் பத்து - பல்யானை செல்கெழு குட்டுவன்

B) மூன்றாம் பத்து - களங்காய் கண்ணி நார்முடிச்சேரல்

C) நான்காம் பத்து - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதான்

D) ஐந்தாம் பத்து - கடல் பிறக்கோட்டிய   செங்குட்டுவன்

105."ஆன்றோர் புகழ்ந்த அறிவினிற் றெரிந்து சான்றோருரைத்த தண்டமிழ்த் தெரியல் ஒருபது பாட்டும்” எனக் கூறியவர் யார்?

A) நச்சினார்க்கினியர்

B) பேராசிரியர்

C) அடியார்க்கு நல்லார்

D) இளம்பூரணர்

106. எந்தக் கல்விக் குழுவால் இடைநிலை அளவில் பன்நோக்குக் கல்விமுறை பரிந்துரைக்கப்பட்டது?

A) இராமமூர்த்தி குழு

B) தாராசந்த் குழு

C) ஹன்டர்ஸ் குழு

D) ஹார்டாக் குழு

107. அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி ஆண்டு 'கல்வி' இணைக்கப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

A) 1974

B) 1975

C) 1976

D) 1977

108. “14 வயதுக்குட்பட்ட எந்தக் குழந்தையையும் பணியில்
அமர்த்தக்கூடாது” என்பது இந்திய அரசியல் சாசனம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது:

A) சட்டப்பிரிவு 23

B) சட்டப்பிரிவு 45

C) சட்டப்பிரிவு 30

D) சட்டப்பிரிவு 45 (A)

109. NCERT 1979 ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘கல்வியில் சமூக, ஒழுக்க மற்றும் ஆன்மிக விழுமங்கள்' என்ற பதிப்பில்
விழுமங்கள் கல்வியின் மூலம்
போதிக்கப்படலாம் என்று வரையறுத்தது.

A) 90

B) 84

C) 45

D) 36

110. மனித சக்தி திட்டமிடல் வகை செயல்பாட்டினால் அதிக தாக்கத்திற்குள்ளாகிறது.

A) ஏற்றுமதி செய்தல் 

B) இறக்குமதி செய்தல்

C) இருத்தி வைத்தல் 

D) இடம்பெயர்தல்

111. “சொற்களைச் சிறந்த முறையில் வைப்பதே வசனம். சிறந்த
சொற்களைச் சிறந்த முறையில் வைப்பதே கவிதை” என்று கூறியவர்

A) ஷெல்லி -

B) டி.எஸ். எலியட்

C) கோல்ரிட்ஜ்

D) கீட்ஸ்

112. ஒவ்வொரு சொல்லையும் சுண்டிப் பார்த்து ஓசைநயம் செவ்வனே உள்ளதா என்று ஆராய்ந்து பயன்படுத்தும் கதை ஆசிரியர்

A) கல்கி

B ) அகிலன்

C) சுஜாதா

D ) லா.ச.ராமாமிர்தம்

113. நிஜ நாடக இயக்கம் நிகழ்த்திய நவீன நாடகம்

A) பலூன்

B ) துர்க்கிர அவலம்

C) ஊர்வலம்

D ) பலி ஆடுகள்

114. தொல்காப்பியத்தில் ஆய்தல்' என்ற சொல்லுக்குக் கூறப்படும் பொருள்

A) உள்ளதன் நுணுக்கம்

B) நுட்பமாய் அறிதல்

C) தேடுதல்

D) கூர்ந்து கவனித்து அறிந்து கொள்ளுதல்

115. 'அர்த்தங்கள் மையம் இழந்தவை; நிலையற்றவை; ஒத்தி
வைப்புக்குள்ளானவை' விளக்கிய கோட்பாடு

A) பின் நவீனத்துவம் 

B) பின் காலனியம்

C) நவீனத்துவம் 

D) பின் அமைப்பியல்

116. புறப்பொருள் வெட்சிப் படலத்தில் 'உண்டாட்டு' எனப்படுவது

A) எதிர்த்துப் போரிடுவது

B) பகைவர் அரண்களைக் காப்பது

C) கள் அருந்திக் களிப்பது

D) ஆநிரைகளைப் பகிர்ந்து வழங்கல்

117. வெட்சிப் படலத்தில் 'துடிநிலை' என்று கூறப்படுவது

A) குடிப்பழைமையைப் புகழ்தல்

B) கொற்றவையைப் புகழ்தல்

C) மன்னரைப் புகழ்தல்

D) வீரர்களைப் புகழ்தல்

118. கரந்தைப் பூ பூக்கும் காலம்

A) மாசி, பங்குனி 

B) சித்திரை, வைகாசி

C) ஐப்பசி, கார்த்திகை 

D) மார்கழி, தை

119. வஞ்சி மறவரின் போர்த்தொழிலைச் சிறப்பித்துக் கூறும் துறை

A) குடிநிலை

B) வாள்நிலை

C) குடைநிலை

D) கொற்றவைநிலை

120. 'வட்கார் மேல் செல்வது'

A) காஞ்சித் திணை 

B) வெட்சித் திணை

C) கரந்தைத் திணை 

D) வஞ்சித் திணை

121. இரண்டு எதிரிடையான இலக்குகளுடைய மனப்போராட்டம்

A) விலகு - விலகு 

B) விலகு - அணுகு

C) அணுகு - அணுகு 

D) இவை எதுவும் இல்லை

122. கல்விப் புதுமையின் குறிக்கோளானது

A) கற்றலில் மிகை மாற்றத்தை உருவாக்குவது

B) கற்றலில் குறை மாற்றத்தை உருவாக்குவது

C) கற்றலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதது

D) (A) மற்றும் (B) இரண்டும்

123. எந்த ஆசிரமம் 'மனித ஒற்றுமையே உயர்வானது', என்பதைப் பிரதிபலிக்கிறது?

A) இராமகிருஷ்ண மடம் 

B) விவேகானந்தர் ஆசிரமம்

C) ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் 

D) காந்தியடிகள் ஆசிரமம்


124. கல்வியில் 'ஆணுக்குப் பெண் சமம்' என்ற கருத்தை முதன்முதலில் பிரதிபலித்தவர்

A) விவேகானந்தர்

B) ரூசோ

C) காந்தியடிகள் 

D) தயானந்த சரஸ்வதி

125. இந்திய அரசியல் சட்ட அமைப்பின் முகப்புரையில் விவரிக்கப்பட்ட கோட்பாடுகளில் ஒன்று :

A) சமத்துவம்

B) அதிகார தன்மை

C) வேறுபடுத்துதல் 

D) தனிமைப்படுத்துதல்

126. பெரும் பொழுதின் வகைகள்

A) ஐந்து வகைப்படும்
 
B) ஆறு வகைப்படும்

C) எட்டு வகைப்படும் 

D) மூன்று வகைப்படும்

127. 'மல்குகார்மாலை'

A) நெய்தற்கு உரிததே 

B) மருதத்திற்கு உரிததே

C) முல்லைக்கு உரிததே 

D) குறிஞ்சிக்கு உரிததே


128. முல்லைத் திணைப் பறை

A) தொண்டகப் பறை

B ) துடி 

C) கோட் பறை

D) ஏற்றுப் பறை

129. அகப்பொருள் மெய்யுறு புணர்ச்சியின் உட்பிரிவுகள்

A) ஏழு வகைப்படும் 

B) பத்து வகைப்படும்

C) பன்னிரண்டு வகைப்படும் 

D) ஆறு வகைப்படும்

130. களவிற்குரிய கிளவித் தொகைகள்

A) பதினேழு கிளவித் தொகைகள்

B) பதினைந்து கிளவித் தொகைகள்

C) பத்துக் கிளவித் தொகைகள்

D) பதினெட்டுக் கிளவித் தொகைகள்

131. 'ஞானபீட விருது பெற்ற புதினம்

A) அகல் விளக்கு 

B) அலை ஓசை

C) வேங்கையின் மைந்தன் 

D) சித்திரப்பாவை

132. வா.செ. குழந்தைசாமியின் சாகித்ய அகாடமி விருது பெற்ற திறனாய்வு நூல்

A) திருக்குறள் நீதி இலக்கியம்

B) வாழும் வள்ளுவம்

C) பாரதி காலமும் கருத்தும்

D) கம்பன் புதிய பார்வை

133. ஏறு தழுவுதலைக் கதைக்களமாகக் கொண்ட புதினம்

A) வளைக்கரம்

B) அழுக்குகள்

C) வாடிவாசல்

D) கல்லும் மண்ணும்

134. 'குடும்பத்தேர்' சிறு கதையின் ஆசிரியர்

A) ஆதவன்

B) பூமணி

C) நகுலன்

D) மௌனி

135. பட்டியல்-1 பட்டியல்-11 உடன் பொருத்திக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான
விடையைத் தேர்ந்தெடு.

பட்டியல்-1                 பட்டியல்-II

a) வித்தன்     1. கமலாவின் கல்யாணம்
b) கு. அழகிரிசாமி   2. அக்பர் சாஸ்திரி
c) கல்கி                          3. மவராசர்கள்
c) தி. ஜானகிராமன்  4. திரிபுரம்

குறியீடுகள் :

a) b) c) d)

A) 4 3 2 1

B) 3 4 1 2

C) 2 4 1. 3

D) 3 - 2 4 1

136. ஆற்றுப்படைகளில் அடியளவில் பெரிய நூல் எது?

A) திருமுருகாற்றுப்படை 

B) சிறுபாணாற்றுப்படை

C) மதுரைக்காஞ்சி 

D) பெரும்பாணாற்றுப்படை

137. 'வஞ்சி நெடும்பாட்டு' என வழங்கப் பெறும் நூல் எது?

A) மதுரைக் காஞ்சி 

B) பட்டினப்பாலை

C) முல்லைப்பாட்டு 

D) குறிஞ்சிப்பாட்டு

138. வடக்கிருந்து உயிர் நீத்த சோழ மன்னன் யார்?

A) கரிகால் சோழன் 

B) இராஜராஜ சோழன்

C) கோச்செங்கணான் 

D) கோப்பெருஞ் சோழன்

139. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

A) குறிஞ்சிக் கலி   -  இளநாகனார்

B) முல்லைக் கலி    -  கபிலர்

C) மருதக் கலி           - நல்லுருத்திரன்

D) பாலைக் கலி        - பெருங்கடுங்கோ

140. நக்கீரர் பத்துப் பாட்டில் பாடிய நூல்கள்

A) நெடுநல்வாடை, மதுரைக் காஞ்சி

B) திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை

C) திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி

D) நெடுநல்வாடை, பட்டினப்பாலை

141. ......... என்பவர் கற்றல் மாற்றத்தினை விளக்குவதற்காக ஒத்தக் கூறுகளின் கோட்பாட்டினை உருவாக்கினார்.

A) பாவ்லோவ்

B) குத்தையர்

C) வுட்வர்த்

D) தார்ண்டைக்

142. புலன் உணர்வு தகவல்களுக்கு விளக்கம் தருவதில் மேம்பட்ட அறிதலுக்கு உட்படுகிறது.

A) திரிபுக்காட்சி 

B) புலன்காட்சி

C) புலன் உணர்வு

D) இல்பொருள் காட்சி

143. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

1. சிக்கல் தீர்க்கும் திறன், வயது சார்ந்து வளர்ச்சி அடையும்.

II. இவ்வளர்ச்சி, வேகம் மற்றும் துல்லியம் இவை இரண்டிலும் அமையும்.


சரியான விடையளி :

A) I சரியான பதில் II தவறானது

B) 1 மற்றும் II தவறான பதில்

C) II சரியான பதில் l தவறானது

D) I மற்றும் II சரியான பதில்

144. முயன்று தவறி கொள்கையை வழங்கியவர்

A) இவான், பாவ்லோவ் 

B) எட்வர்ட் எல். தார்ன்டைக்

C) ஸ்கின்னர்

D) ஹல்

145. எபிங்காஸின் சோதனை எதனுடன் தொடர்புடையது?

A) நினைவு வளைவு

B) மறதி வளைவு

C) கற்றல் வளைவு 

D) இவை எதுவும் இல்லை

146. 'ஆதி நிகண்டு' என அழைக்கப்பெறுவது எது?

A) சூடாமணி நிகண்டு 

B) பிங்கல நிகண்டு

C) திவாகர நிகண்டு 

D) சேந்தன் திவாகரம்


147. 'கம்பராமாயணம்' நூலுக்குக் கம்பர் சூட்டிய பெயர் யாது?

A) இராமாவதாரம் 

B) கம்பராமாயணம்

C) கம்பநாடகம்

D) கம்பநாட்டான் கதை

148. வினா-விடை' வடிவில் அமைந்த இஸ்லாமிய இலக்கியம் எது?

A) கிஸ்ஸா

B) நாமா

C) பலசந்தமாலை

D) மசாலா

149. 'உடம்பால் அழியின் உயிரால் அழிவர்'- யாருடைய கூற்று?

A) திருவாதவூரர்

B) அப்பர்

C) திருமூலர்

D) சம்பந்தர்

150. விக்கிரம சோழன் உலாவின் ஆசிரியர் யார்?

A) ஒட்டக்கூத்தர்

B) தரணி முழுதுடையான்

C) ஞானதேவன்

D) தேரியன் மாதேவி

Post a Comment

0 Comments