PG - TRB - TAMIL - 2008 - 2009 - ORIGINAL QUESTION PAPER - QUESTION & ANSWER - ஆசிரியர் தேர்வு வாரியம் - வினாத்தாள் - 2008 - 2009 - வினாக்களும் விடைகளும் -

 


 


 

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய 

முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு 

வினாத்தாள் - 2008 - 2009

வினாக்களும் விடைகளும் 

PG - TRB - TAMIL 

ORIGINAL QUESTION PAPER - 2008 - 2009

QUESTION & ANSWER

****************    *************   ***********

1 . ரௌலட் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்ட போது வைசிராயாக இருந்தவர் யார்?

A) இர்வின் பிரபு

B) செம்ஸ்ஃபோர்டு பிரபு

C) வேவல் பிரபு

D) வெலிங்டன் பிரபு

2 . கீழ்க்கண்டவற்றுள் எது மிருதுவானது?

A) சோடியம்

B) அலுமினியம்

C) இரும்பு

D) லித்தியம்

3 . நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர் அல்லாத யார் ஒருவர் சபை நடவடிக்கைகளில் பங்கு கொள்ள இயலும்?

A) துணை குடியரசுத் தலைர்

B) தலைமை நீதிபதி

C) அட்டர்னி ஜெனரல்

D) தலைமை தேர்தல் ஆணையர்

4 . எந்த ஆற்றின் குறுக்கே இந்திரா சாகர் அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது?

A) மகாநதி

B) கோதாவரி

C) கிருஷ்ணா

D) நர்மதா

5 . புவி தன் அச்சில் சுழல்கிறது என்பதை முதலில் தெரிவித்த வானியல் வல்லுநர் பெயரைக் குறிப்பிடுக.

A) பாஸ்கரா

B) ஆரியபட்டர்

C) வராஹிமித்திரர் 

D) கல்பனா சாவ்லா

6. கீழ்க்காணும் கோண அளவுகளில் அளவிடப்படாத அளவுகோல் மற்றும் காம்பசின் உதவியால் எந்த கோணத்தை வரைய இயலாது?

A) 75°

B) 90°

C) 50°

D) 22 1/2

7. ஓர் அலைவுப் பல்கோணத்தில் புள்ளிகள் எதற்கு எதிராகக் குறிக்கப்படுகிறது?

A) வகுப்பு இடைவெளியின் நடுப்புள்ளி VS அதிர்வெண்

B) வகுப்பு இடைவெளியின் கீழ்வரம்புப்புள்ளி VS அதிர்வெண்

C) வகுப்பு இடைவெளியின் மேல்வரம்புப்புள்ளி VS அதிர்வெண்

D) வகுப்பு இடைவெளியின் உண்மை வரம்புப்புள்ளி Vs அதிர்வெண்

8. AICTE நிறுவப்பட்ட ஆண்டு 

A) நவம்பர், 1945

B) நவம்பர், 1955

C) நவம்பர், 1985 

D) நவம்பர், 1975

9. ஜான்டூயின் வெளியீடுகளில் முக்கியமானது

A) குழந்தைப் பருவ ரகசியம்

B) இன்றையக் கல்வி

C) மனிதனின் கல்வி

D) சமுதாய ஒப்பந்தம்

10. டேவிட் ஆசுபெல்லின் கருத்துப்படி 'வாய்வழிக் கற்றல்' என்பது

A) புதியமொழி ஒன்றைக் கற்றுக் கொள்வது

B) வாய்மொழிப் பயிற்சி

C) வாய்வொழித் தகவல்களைப் புரிந்துகொள்வது

D) செயலற்ற கற்றல் அனுபவம்

11. பல்கலைக்கழக மானியக் குழு(UGC)வின் தெற்கு மண்டல
அலுவலகம் அமைந்துள்ள இடம்

A) ஹைதராபாத்

B) பெங்களூர்

C) சென்னை

D) மும்பை

12. தேசிய மக்கள்தொகைக் கொள்கை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

A) 1976

B) 1979

C) 1986

D) 1977

13. ஆப்ரகாம் மாஸ்லோ-வின் படிநிலைகளில் ‘தன்னிறைவு' என்பது

A) முதல் நிலை

B) இறுதி நிலை

C) மூன்றாம் நிலை 

D) நான்காம் நிலை


14. 'Emile' என்பதன் ஆசிரியர்

A) டூயி

B) பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்

C) ஃப்ரோபெல்

D) ரூஸோ

15. கல்லூரிகள் இணைவு வகை பல்கலைக்கழகம் என்பதல்லாதது

A) சென்னை பல்கலைக்கழகம்

B) மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

C) தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்

D) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

16. மனித உரிமைகள் தினம் என்பது

A) டிசம்பர் 10

B) டிசம்பர் 7

C) டிசம்பர் 26

D) டிசம்பர் 17

17. கீழ்க்கண்டவற்றுள் எது கல்வி ஏற்பாடு வளர்ச்சிக்கு தொடர்பில்லாதது?

A) டைலர் மாதிரி 

B) அசுபெல்லின் மாதிரி

C) டாபா மாதிரி

D) ஹன்கின்ஸின் மாதிரி

18. முன் ஆரம்பக்கல்வியின் முக்கிய நோக்கமானது

A) உடல் வளர்ச்சி அதிகரித்தல்

B) மனவளர்ச்சியை அதிகரித்தல்

C) சமுதாய வளர்ச்சியை அதிகரித்தல்

D) ஒட்டுமொத்த வளர்ச்சியை அதிகரித்தல்

19. ஒரு குழந்தையின் கற்றல் செயல்பாடுகளில் ஏதேனும் புதிதாக அல்லது சுயமானதாக ஓர் ஆசிரியர் கண்டறிந்தால் அந்தக் குழந்தையானது

A) புத்திசாலி

B) ஆக்கத்திறனுடையவர்

C) திறனாய்வுமிக்கவர் 

D) ஊக்குவிக்கப்பட்டவர்

20. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று கற்றல் பகுதி இல்லாதது?

A) அறிவுப் பகுதி 

B) உள-இயக்கப்பகுதி

C) உடலியல் பகுதி

D) உணர்ச்சிப் பகுதி

21. கட்டுரையாவது ‘சிதறுண்ட சிந்தனை' என்றவர்

A) அட்சன்

B) ஜான்சன்

C) பேக்கன்

D) கிராபே

22 கதைகளின் தோற்றம், பரவிய விதம், அதற்குரிய காரணங்கள் ஆகியவற்றை அறிய உதவும் கோட்பாடு எது?

A) வரலாற்றுப் புவியியல் கோட்பாடு

B) அமைப்பியல் கோட்பாடு

C) இலட்சியக் கோட்பாடு

D) சொல்திறன் கோட்பாடு


23. 'நிலம், நீர், வளி, விசும்பு' என்ற நான்கின் மறு பதிப்பு எனக்
குமட்டூர்க் கண்ணனார் யாரைப் பாடுகின்றார்?

A) பல்யானைச் செல்கெழு குட்டுவன்

B) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

C) நார் முடிச்சேரல்

D) கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்

24. 'உவமைப் போலி' என்ற பெயருடைய அணி

A) ஒட்டணி

B) தன்மையணி

C) ஏது அணி

D) நிரனிறையணி

25. 'மாபெரும் மீட்பர் நீயோ?' என இயேசுபிரானை வினவியவன்
யார்?

A) இராயப்பர்

B) அன்னாஸ்

C) கைப்பாஸ்

D) யூதாஸ்

26. 'தமிழகம் முழுவதையும் காலால் அளந்தோம்
மக்கள் மனங்களை யாழால் அளந்தோம்'
- எனப் பாடியவர் யார்?

A) பரணர்

B) கபிலர்

C) ஔவையார்

D) நல்லந்துவனார்

27. தேசியக் கவிஞர் எனவும் காந்தியக் கவிஞர் எனவும் மதிக்கப்படுபவர் யார்?

A) நாமக்கல் கவிஞர் 

B) கவிமணி

C) பாரதியார்

D) பாரதிதாசன்

28. எந்த மொழியில் மாறுதல்கள் தடையின்றி நேர்ந்த வண்ணம் இருக்கும் என மு.வ. கூறுகிறார்?

A) செயல்மொழி

B) உணர்ச்சி மொழி

C) இலக்கியம் நிறைந்த மொழி

D) இலக்கியம் இல்லாத மொழி

29. திருவாசக அடைக்கலப்பத்து எத்தலத்தில் உறையும்இறைவனைப் பாடியது?

A) திருவிடைமருதூர் 

B) திருப்பெருந்துறை

C) திருவாஞ்சியம் 

D) திருப்பனையூர்

30. குகனின் தலைநகரம்

A) சிருங்கிபேரம் 

B) மதுராபுரி

C) மிதிலை

D) அயோத்தி

31 'கவிதை கற்பனை, உணர்ச்சி ஆகியவற்றின் மொழியாகும்' என்று கூறியவர்

A) ஆசிலிட்

B) கோல்ரிட்ஜ்

C) ஷெல்லி

D) கார்லைல்


32. நாட்டுப்புறத் தெய்வங்களுக்குக் கொண்டாடப்படும் விழாவைக் கொடை' என எம்மாவட்ட மக்கள் கூறுகிறார்கள்?

A) கோயம்புத்தூர் 

B) சேலம்

C) திருநெல்வேலி

D) தருமபுரி

33. கலித்தொகையில் 'நும்மொடு துன்பந் துணையாக நாடின் அதுவல்லது இன்பமும் உண்டோ எமக்கு?' எனக் கூறியது யார்?

A) தலைவி

B) தோழி

C) செவிலி

D) தலைவன்

34. மன்னுறு தொழில், தன்னுறு தொழில் எனத் தன்னுள் இரு கூறுகளையுடைய திணை எது?

A) நொச்சி

B) கரந்தை

C) உழிஞை

D) வெட்சி

35. பண்பாடு கெட்டவர்கள் பலபாடு படுவார்கள் எனக் கூறியது யார்?

A) யூதாஸ்

B) கைப்பாஸ்

C) இராயப்பர்

D) அன்னாஸ்

36. 'பொன்னகரம்' சிறுகதையை எழுதியவர் யார்?

A) மௌனி

B) கு. அழகிரிசாமி

C) ஜெயகாந்தன் 

D) புதுமைப்பித்தன்

37. தமிழ் இலக்கியத்தில் முதல் அந்தாதி நூல் எது?

A) வெண்பா அந்தாதி

B) நூற்றந்தாதி

C) அற்புதத் திருவந்தாதி

D) திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

38, இரு, மூ முதலான பெயரடைகள் எதை உணர்த்துகின்றன?

A) எண்ணப்படும் முறையை

B) எண்ணிக்கை அளவை

C) கற்கும் முறையை

D) சொல்லும் முறையை

39. 'ஆர்த்தான் அரக்கன்தனை மால்வரைக்கீழ் அடர்ந்திட்டு
அருள் செய்த அது கருதாய்' இதில் இடம்பெறும் அரக்கன் பெயர் என்ன?

A) பகாசுரன்

B) இரணிய கசிபு

C) இரணியாட்சன் 

D) இராவணன்

40. 'இம்மலை தனியே நீர் இங்கு இருப்பதே' என்று நைந்து கூறியவர் யார்?

A) திண்ணனார்

B) நாணன்

C) காடன்

D) நாகன்


41. உணர்வின் சிறப்பை ஒட்டிய சிறுகதையே சிறந்தது என்று
கூறியவர் யார்?

A) செட் ஜலிக்

B) எட்கர் ஆலன்போ

C) சோமர்செட் மாம் 

D) செகோ

42. 'சமுதாயத்தின் தனியுரிமைப் பத்திரம்' எனப் பேரறிஞர் மாலினோவஸ்கி கூறுவது

A) புராணக் கதைகள் 

B) நம்பிக்கைகள்

C) வழக்கங்கள்

D) ஆட்டங்கள்

43. மானம் வரின் உயிர் நீப்பர் எதனைப் போன்றவர்?

A) புலி

B) சிங்கம்

C) கவரிமான்

D) நரி

44. ஆசிரியப்பாவிற்குரிய ஓசை எது?

A) துள்ளலோசை 

B) அகவலோசை

C) செப்பலோசை 

D) தூங்கலோசை

45. பழங்கால இயற்கை செய்யும் புதுக்காட்சி பருகு தம்பி எனப்
பாடியது யார்?

A) பாரதியார்

B) கவிமணி

C) பாரதிதாசன்

D) கண்ணதாசன்

46. "எதிரிகளுக்கு மதம்பொழியும் யானை, எங்களுக்குக் குளம்படியும் யானை”

 என ஒளவையார் யாரைப் பாடினார்?

A) சேரன் செங்குட்டுவன்

B) அதியன் அஞ்சி

C) சோழன் நல்லுருத்திரன்

D) பாண்டியன் நெடுஞ்செழியன்

47. பொருநராற்றுப்படையில் ஆற்றுப் படுத்தும் பொருநன் எவ்வகையைச் சார்ந்தவன்?

A) ஏர்க்களம் பாடுவோன்

B) போர்க்களம் பாடுவோன்

C) பரணி பாடுவோன்

D) கலம்பகம் பாடுவோன்

48. ஒரு மெய்யின் முன் அம்மெய்யே வந்து மயங்கும் மயக்கம்

A) வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

B) உடம்படுமெய்

C) சந்தியக்கரம்

D) உடனிலை மெய்ம்மயக்கம்

49. சுந்தரருக்காகச் சிவபெருமான் யாரிடம் தூது சென்றார்?

A) சங்கிலி நாச்சியார் 

B) மங்கையர்க்கரசியார்

C) பரவை நாச்சியார் 

D) திலகவதியார்

50 ) காளத்தி மலை அருகில் ஓடும் நதி எது ? 

A ) பாலாறு 

B ) பொன்முகலியாறு

C )  வையை 

D ) காவிரி 


51 சமுதாயத்தின் போக்கையே திருத்தவல்லதாகவும் மாற்றியமைக்கக் கூடியதாகவும் உள்ளது எவ்வகை இலக்கியம் என்று மு.வ. கூறுகிறார்?

A) கலம்பகம்

B) பரணி

C) நாவல்

D) காப்பியம்

52. பலரின் அறிவையும் ஒருவரின் உண்மைத் தன்மையையும் உணர்த்துவது எது?

A) தாலாட்டு

B) நம்பிக்கை

C) தொழில்பாடல் 

D) பழமொழி

53. சேரமன்னர்களைப் பாட்டுடைத் தலைவர்களாக கொண்ட சங்க நூல் எது?

A) புறநானூறு

B) அகநானூறு

C) பரிபாடல்

D) பதிற்றுப்பத்து

54. பொருளோடு பொருள் இயைய வைத்து ஒப்புமை தோன்றக் கூறும் அணி எது? 

A) உவமையணி

B) தன்மையணி

C) விபாவனை அணி 

D), தீவக அணி

55. “என்னை முழுக்காட்டி - என்னையே கரைத்துக் கொண்டு அங்கிருந்து வருகிறது'

- எனச் சிற்பி கூறுவது என்ன?

A) நீரோடை

B) சிற்றோடை

C) ஒரு கிராமத்து நதி 

D) வையை நதி

56. “சாபவிமோசனம் கண்டாலும் பாவ விமோசனம் கிடையாதா” எனத் தேம்பியது யார்?

A) அகலிகை

B) அருந்ததி

C) ரம்பை

D) மேனகை

57. 'நாவலந் தண்பொழில்' என்றழைக்கப்படும் நாடு

A) தாய்லாந்து

B) இந்தியா

C) பர்மா

D) மலேசியா

58. தமிழிலக்கண நூலார், ஓர் எழுத்துப் பிறந்து நின்று முடியும் கால அளவையை எவ்வாறு கூறுவர்?

A) மாத்திரை

B) நொடி

C) மணித்துளி

D) இமைப்பொழுது

59. 'அடியேன் உன் அடைக்கலமே' எனத் திருப்பெருந்துறையில் பாடியவர் யார்?

A) மாணிக்கவாசகர் 

B) திருஞானசம்பந்தர்

C) திருநாவுக்கரசர்

D) சுந்தரர்


60. 'உம்மை திட்டியில் தெரியக் கண்டேன், திடுக்கமும் தீர்ந்தன்றே' என்று நபிகள் நாயகத்திடம் கூறியது யார்?

A) பெண்மான்

B) ஆண்மான்

C) ஆடு

D) பசு

61 கண்ணாலும் செவியாலும் நுகரத் தக்க கலை என்று இலக்கிய மரபு நூலில் கூறப்படும் கலை யாது?

A) சிற்பம்

B) இயல்

C) நாடகம்

D) ஓவியம்

62 ஆசை நிறைவேறுதற்குரிய கருவி' என்று சிக்மண்ட் பிராய்டு எதனைக் கூறுகிறார்?

A) தாலாட்டு

B) பழங்கதைகள்

C) பழமொழி

D) விடுகதை

63. 'பெரும! செல் இனி அகத்து' என்று புதல்வனிடம் கூறியது யார்?

A) தலைவன்

B) தலைவி

C) தோழி

D) பாங்கன்

64. நாடு காவலுக்கு உரியவராக நம்பியகப்பொருள்யாரைக் குறிப்பிடுகின்றது?

A) வேளாளர்

B) அரசர்

C) வணிகர்

D) அந்தணர்

65. வாழ்வு மாயமென்னும் உண்மை மனத்திற் கொள்ளாமல் நாளும் தைந்திடுதல் எதைத் தரும்?

A) சினம்

B) உவகை

C) அழுகை

D) நகைப்பு

66. அடிபுதை அரணம் என்பது எப்பொருளைக் குறிக்கின்றது?

A) காலணி

B) சிலம்பு

C) சதங்கை

D ) குழை

67. தமிழ் மூவாயிரம் என்றழைக்கப்படும் நூலின் பெயர்

A) திருமந்திரம்

B) திருவாசகம்

C) பெரியபுராணம் 

D) கம்பராமாயணம்

68. ஒலி நூலார் கொள்கைப்படி யகரமும் வகரமும் எவ்வகையைச் சார்ந்தது?

A) மெய்

B) உயிர்மெய்

C) அரையுயிர்

D) உயிர்

69. "சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்” என வேண்டுபவர் யார்?

A) திருஞானசம்பந்தர் 

B) திருநாவுக்கரசர்

C) சேந்தனார்

D) மாணிக்கவாசகர் 

70. கண்ணப்பநாயனார் அவதரித்த திருநாட்டின் பெயர் என்ன?

A) திருப்பூந்துருத்தி 

B) திருவீழிமிழலை

C) தொண்டை நாடு 

D) பொத்தப்பி

71 . கலையின்பம் தவிர வேறொரு பயனும் கருதாமல் புலவர்
இயற்றியது எவ்வகை இலக்கியம்?

A) நேர் இலக்கியம்

B) சார்பு இலக்கியம்

C) வழி இலக்கியம்

D) இடை இலக்கியம்

72. பண்ணுடன் பாடப்படாத நாட்டுப்புறப் பாடல்கள் எல்லாம் சிறகில்லாப் பறவைகள்' என்று கூறியவர்

A) குரோகன்

B) அலன் டாண்டீஸ்

C ) மரியாலீச்

D) சத்தியார்த்தி

73. "கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல”
இடம்பெறும் நூல் எது?

A) நற்றிணை

B) அகநானூறு

C) குறுந்தொகை

D) ஐங்குறுநூறு

74. நெடில் தொடர் குற்றியலுகரச் சொல் எது?

A) போவது

B) சால்பு

C) பட்டாங்கு

D) காசு

75. "அழைக்கும் பொழுதினில் போக்குச் சொல்லாமல் அரைநொடிக்குள் வருவான்” - அவன் யார்?

A) கண்ணன் - என் தோழன்

B) கண்ணன் - என் குழந்தை

C) கண்ணன் - என் சேவகன்

D) கண்ணன் - என் சீடன்

76. அறிவியற் கலைகளின் அரசி எது?

A) இயற்பியல் துறை

B) கணிதத் துறை

C) விலங்கியல் துறை 

D) தாவரவியல் துறை

77.ஒரு கல்லினை உதைக்கும்போது ஒருவருக்கு அடி.ஏற்படுவது எதனால்?

A) எதிர்வினை

B) நிறை

C) திசைவேகம் 

D) உந்தம்

78. கீழ்க்காணும் துறைமுகங்களில் எத்துறைமுகம் இயற்கையான துறைமுகம் அல்ல?

A) கொச்சின்

B) சென்னை

C )  மும்பை 

D) பாரதீப்

79. சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களில் 10,000 ஓட்டங்களை டெஸ்ட் ஆட்டங்களில் எடுத்த ஆறாவது
மட்டை வீரரின் பெயர் என்ன?

A) சச்சின் டெண்டுல்கர்

B) வீரேந்திர சேவாக்

C) சௌரவ் கங்குலி 

D) ராகுல் திராவிட்

80. வந்தவாசிப் போர் யார் யாருக்கு இடையில் நடைபெற்றது?

A) மராட்டியர்கள் மற்றும் போர்ச்சுகீசியர்கள்

B) ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள்

C) ஆங்கிலேயர்கள் மற்றும் போர்ச்சுகீசியர்கள்

D) மராட்டியர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள்


81. நேர்வழி திட்டத்தை உருவாக்கியவர்

A) பி.எப், ஸ்கின்னர் 

B) இ.எல். தார்ண்டைக்

C) எல்.பி. பாவ்லவ் 

D) கிளார்க். எல். ஹல்

82. கீழ்க்கண்ட குழுக்களுள் எது இடைநிலைக் கல்வியின் வலுவற்ற நிலையை முதன்முதலில் கண்டறிந்து, அதனை மேம்படுத்த வழிவகை கூறியது?

A) தாராசந்த் கமிட்டி (1948)

B) இடைநிலைக் கல்விக் குழு (1954)

C) பல்கலைக்கழக கல்விக் குழு (1949)

D) கல்விக் குழு (1966)

83. எந்த வயதிற்குப்பின் அளக்கப்படும் நுண்ணறிவுச் சோதனை மதிப்புகள் நிலையானது?

A) ஒன்று

B) இரண்டு

C ) ஐந்து 

D) இருபது

84. வலுவூட்டுதலுடன் கூடிய தூண்டல்துலங்கள் இல்லாத
கொள்கை

A) E.L. தார்ண்டைக் கொள்கை

B) ஹல் கொள்கை

C) ஸ்கின்னர் கொள்கை

D) டோல்மனின் கற்றல் கொள்கை

85. முதியோர் கல்விக்கான தேசிய வாரியம் வலியுறுத்தும் கருத்தின்படி கலைத்திட்டம் அமைய வேண்டியது

A) தேவையின் அடிப்படையில்

B) செயல்பாட்டின் அடிப்படையில்

C) வேலைவாய்ப்பை நோக்கி

D) உற்பத்தியை நோக்கி

86. உலக முதலுதவி தினம் என்பது

A) செப்டம்பர் 11

B) செப்டம்பர் 12

C) செப்டம்பர் 10

D) செப்டம்பர் 9

87. கீழ்க்கண்ட மதிப்பெண்களுக்கு முகடு மதிப்பை கணக்கிடு

10, 11, 13, 10, 15, 17, 18, 15, 10

A) 10

B) 13

C) 15

D) 18

88. கல்வி நுட்பவியல் என்பது

A) கல்வியியல் நுட்பவியல் 

B) கல்வியின் நுட்பவியல்

C) இரண்டுமே

D) இவற்றுள் எதுவுமில்லை


89. கீழ்க்கண்டவற்றுள் எது ஒன்று மறதிக்கான காரணமல்ல?

A) கற்றதைத் திரும்ப திரும்ப பயன்படுத்தாதது

B) தற்போது கற்றுக் கொண்டிருப்பதின் ஈடுபாடு

C) கற்றல் பொருட்களை மறு அமைப்பு செய்யாதது

D) குறுகிய கால நினைவின் அடிப்படையில் கற்பது

90. செயல்பாட்டிற்கான காரணம் செயல்படுத்தப்படும் பொழுது,
அதற்கான ஊக்கப்படுத்துதல்

A) வெளிப்புற ஊக்கப்படுத்துதல்

B) உள்ளார்ந்த ஊக்கப்படுத்துதல்

C) வெளிப்புற மற்றும் உள்ளார்ந்த ஊக்கப்படுத்துதல்

D) இவற்றுள் எதுவுமில்லை

91. தேசிய ஒருங்கிணைப்பு தினம் என்பது

A) நவம்பர் 19

B) டிசம்பர் 19

C) செப்டம்பர் 19

D) மே 19

92. ஆசிரியர் கல்வியின் முக்கியத்துவத்தை முதலில்
வலியுறுத்தியது

A) வுட்ஸ் டெஸ்பேட்ச்

B) ஹன்ட்டர் கமிஷன்

C) கல்கத்தா பல்கலைக்கழக கமிஷன்

D) வெள்ளைத் தாள்

93. கல்வி நோக்கங்களின் வகைப்பாட்டினை முதன் முதலில்
அமைத்தவர்

A) மேகர்

B) ஸ்கின்னர்

C) புளூம்

D) தார்ண்டைக்

94. SSA என்பது கீழ்க்கண்டவற்றுள் எதற்காக ஏற்படுத்தப்பட்டது?

A) தொடக்கக் கல்வி 

B) இடைநிலைக் கல்வி

C) உயர்கல்வி

D) தொழிற்பயிற்சி கல்வி

95. அமைப்பில் இயற்கை கொள்கையையும், நோக்கத்தில்
கருத்துக் கொள்கையையும் முறை மற்றும் செயல்பாட்டுத் திட்டத்தில் பயனனவைக் கொள்கையையும் உள்ளடக்கிய தத்துவம் யாருடையது?

A) ஸ்ரீ அரவிந்தர் 

B) காந்தி அடிகள்

C) ரூஸோ

D) தாகூர்

96. நுண்ணறிவை விளக்கும் பல காரணிக் கொள்கையை
தோற்றுவித்தவர்

A) சார்லஸ் ஸ்பியர்மன்

B) E.L. தார்ண்டைக்

C) L.L. தர்ஸ்டன் 

D) Dr. J.P. கில்போர்டு

97. 'தமிழ் உரைநடைத் தந்தை' எனத் தமிழண்ணல் யாரைக்
குறிப்பிடுகின்றார்?

A) கணக்காயர்

B) திரு.வி. கல்யாண சுந்தரணார்

C) ரா.பி. சேதுப்பிள்ளை

D) வீரமாமுனிவர்

98. ஆண்பால், பெண்பால் மற்றும் அலிப்பால் என்ற முப்பால் பகுப்புள்ள மொழிகள் எவை?

A) திராவிட மொழிகள்

B) மங்கோலியன் துருக்கி மொழிகள்

C) இந்தோ ஐரோப்பிய மொழிகள்

D) வட இந்திய மொழிகள்

99. கண்ணன் குடையாக எடுத்த குன்றின் பெயர் என்ன?

A) கோவர்த்தன மலை 

B) கோல மலை

C) நீலமலை

D) இமயமலை

100. 'பெறுகதி நின்னாற் பெற்றேன், பெறும் பாவங்களைத்தேன்' என்று சீறாப்புராணத்தில் இடம்பெறும் கூற்று யாருடையது?

A) ஆண் மான்

B) முகமது நபி

C) பெண் மான்

D) வேடன்

101. தொல்காப்பியர் இலக்கியத்தின் அழகை என்னவென்று கூறுகிறார்?

A) தூக்கு

B) வனப்பு

C) வண்ணம்

D ) ஓசை 

102. ஆடுபுலி ஆட்டத்தின் வேறு பெயர் என்ன?

A) பல்லாங்குழி

B) பதினைந்தாம் புலி

C) தட்டாங்கல்

D) வட்டத்திரி

103. 'பாசறையில் ஒரு கை பள்ளியொற்றி ஒருகை முடியொடு கடகஞ் சேர்த்தி'- இருப்பவன் யார்?

A) வீரன்

B) பகைவன்

C) தோழன்

D) தலைவன்

104. புறப்பொருள் வெண்பாமாலை கூறும் எயில் காத்தல் எத்திணைக்குரியது?

A) தும்பை

B) வெட்சி

C) நொச்சி

D) வாகை

105. கொன்றைக் காய்க்கு நிகராக வாலை ஆட்டியது எது என்று பாரதிதாசன் கூறுகிறார்?

A) பசு

B) நாய்

C ) பூனை

D) மயில்

106. ஆடம்பரத்தைப் பாவம் என்று கருதியவர் என மு.வ. யாரைக் கூறிப்பிடுகின்றார்?

A) மண்டேலா

B) காந்தியடிகள்

C) அன்னை தெரசா

D) ஜவஹர்லால் நேரு

107. 'இராசாக்கோவை' என்ற பாராட்டைப் பெற்றது?


A) தஞ்சைவாணன் கோவை

B) திருக்கோவையார்

C) சிதம்பரச் செய்யுட் கோவை

D) ஒரு துறைக் கோவை


108. இருமை என்ற எண் இல்லா மொழி எது?

A) பஞ்சாபி

B ) வடமொழி 

C) திராவிட மொழி

D ) ஐரோப்பிய மொழி 

109. 'எத்தன் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை'
எனச் சிவபெருமானிடம் கூறியவர் யார்?


A) அதிரா அடிகள்

B) சுந்தரர்

C) திருஞானசம்பந்தர் 

D) திருநாவுக்கரசர்


110. காட்டில் மான்கூட்டம் சிதறி ஓடக் காரணம்?


A) யானையின் பிளிறல்

B) சிங்கத்தின் கர்ஜனை

C) வரிப்புலியின் முழக்கம்

D) நரியின் ஊளை


111.  கவிதை தனித்த முருகியல் இன்பம் வாய்ந்ததென்றும்அதை உணர்ந்து திளைப்பதே கவிதையின் பயன் என்றும்
பொழிந்தவர்


A) பேட்டர்

B) எட்கார் ஆலன்போ

C) போதலர்

D) கான்ட்


112 மாரியம்மன் வழிபாட்டுடன் தொடர்புடையது

A) சிலம்பாட்டம்

B) காவடியாட்டம்

C) கரக ஆட்டம்

D) சக்கையாட்டம்

113. ‘தனிச்சேறல் ஆயத்தில் கூடு' என்று தலைவியிடம் கூறியது யார்?


A) தோழி

B) தாய்

C) செவிலி

D) தலைவன்


114. 'விடுகணை' எத்தொகையைச் சார்ந்த சொல்?

A) வினைத்தொகை 

B) உம்மைத்தொகை

C) பண்புத்தொகை

D) அன்மொழித் தொகை


115. வாடிக் கிடந்த புத்தருக்கு ஆயர்குலச் சிறுவன் கொடுத்தது என்ன?


A) மருந்து

B) உணவு

C) நீர்

D) பால்


116. 1832 இல் ‘பூமிசாஸ்திரம்' என்ற நூலை எழுதியவர்


A) டாக்டர் கரோல் 

B) இராம சுந்தரம்

C) இரேனியுஸ் பாதிரியார் 

D) டாக்டர் சாமுவேல்

117. 'சமுதாயப் பாட்டு' எனத் தமிழண்ணல் கூறும் நூல்

A) திருமுருகாற்றுப்படை 

B) சிறுபாணாற்றுப்படை

C) கூத்தராற்றுப்படை 

D) பெரும்பாணாற்றுப்படை

118. மக்களின் பேச்சு வழக்கிலுள்ள தமிழ்ச்சொற்கள்

A) இயற்சொல்

B) வடசொல்

C) திரிசொல்

D) திசைச்சொல்

119. கண்ணே மனோன்மணியே கண்பார்வைக் கெட்டாத
விண்ணடங்கா வெட்டவெளியே பராபரமே' எனப் பாடியவர்

A) குணங்குடி மஸ்தான்

B) செய்குத் தம்பிப் பாவலர்

C) காசிம்புலவர்

D) குலாம் காதிறு

120. கலைமகள் கொடுத்த முத்து மாலையைச் சீதை யாருக்கு அளித்தாள்?

A) பரதன்

B) இலட்சுமணன்

C) வீடணன்

D) அநுமான்

121 நுண்கலைகளுள் உணர்ச்சி ஒன்றையே கொண்டு அமைந்த
கலை எது என்று தா.ஏ. ஞானமூர்த்தி குறிப்பிடுகிறார்?

A) ஓவியம்

B) இயல்

C) இசை

D) சிற்பம்

122. இலக்கிய வழக்கில் விடுகதையை எவ்வாறு அழைப்பர்?

A) புதிர்

B) அழிப்பாங்காதை

C) வெடி

D) நொடி

123. 'நனந்தலை உலகம் வளைஇ நேமியோடு' எனத் தொடங்கும்
பத்துப்பாட்டு நூல் எது?

A) முல்லைப்பாட்டு 

B) குறிஞ்சிப்பாட்டு

C) சிறுபாணாற்றுப்படை 

D) பொருநராற்றுப் படை

124. இரண்டாம் வேற்றுமை உருபைக் கூறுக.

B) கு

A) அது

D) 

C) ஆல்

125. திக்குத் தெரியாத காட்டில் உள்ளம் அஞ்சக் குரல் பழகுபவை எவை எனப் பாரதியார் கூறுகிறார்?

A) சிங்கம்

B) புலிகள்

C) நரி

D) யானை

126. உரிமையை மட்டும் மிகுதியாக விரும்பிக் கடமையைப் புறக்கணித்தால் எது மிஞ்சும்?

A) குழப்பம்

B) கவலை

C) துன்பம்

D) இன்பம்

127. எட்டுத்தொகையில் ஒவ்வொன்றும் எத்தகு பாடல்களின் தொகுப்பு?

A) போர்ப்பாடல்கள் 

B) நெடும்பாடல்கள்

C) உதிரிப்பாடல்கள் 

D) துன்பப்பாடல்கள்

128. மொழியின் பழைய வடிவத்தைக் காத்து வரும் மொழி எது?

A) பேச்சு மொழி 

B) இலக்கிய மொழி

C) செயல் மொழி 

D) அறிவு மொழி

129. திருமாலின் கையிலுள்ள சுதர்சனம் என்பது என்ன?

A) வில்

B) வாள்

C) சங்கு

D) சக்கரம்

130. மலையிடைப் பிறவா மணியே! எனக் கண்ணகியைக் கூறியது யார்?

A) கவுந்தியடிகள் 

B) கோவலன்

C) மாதவி

D ) ஐயை 

131. 'இலக்கியமாவது சிறந்த கருத்துகள் அடங்கிய நூலாகும்' என்றவர்

A) ஸ்டாபோர்டு புரூக் 

B) அட்சன்

C) வின்செஸ்டர்

D) எமர்சன்

132 'அம்மானை' என்ற சொல் முதன் முதலில் எந்த இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது?

A) சீவகசிந்தாமணி 

B) வளையாபதி

C) சிலப்பதிகாரம் 

D) மணிமேகலை

133. மயில் குளிரால் நடுங்குமென்று போர்வை கொடுத்த வள்ளல் யார்?

A) பாரி

B) காரி

C) ஓரி

D) பேகன்

134. ஓதல் பிரிவுக்குரிய கால அளவு -

A) 2 ஆண்டுகள் 

B) 4 ஆண்டுகள்

C) 3 ஆண்டுகள் 

D) 5 ஆண்டுகள்

135. "போதுகின்ற அன்புடை நண்பனே முத்தமிட்டுக் காட்டிக் கொடுக்கவோ காதலோடு என் முன்னம் வந்துள்ளாய்? கடவுள் தம்மை உனக்கென  வேண்டுவேன்” - என கண்ணதாசன் யாரைக் குறிப்பிடுகிறார்?

A) இராயப்பர்

B) யூதாஸ்

C) அன்னாஸ்

D) அரிமத்தியாவூர் சூசை

136. அஜயன், விஜயன் யாருடைய மைந்தர்கள்?

A) பார்வதி

B) இலக்குமி

C) கலைவாணி

D) பூமாதேவி


137. உலகிலேயே பாடு பொருள்களை 'துறை' என்ற பெயரால்
அடிக்கருத்துகளாக எண்ணி வகை தொகைப்படுத்திக் காட்டியவர் இவர் ஒருவரே - யார்?

A) சன்மதி முனிவர் 

B) வச்சணந்தியார்

C) பவணந்தியார்

D) தொல்காப்பியர்

138. 'ஒருவர் செய்வதைப் பார்த்து அவ்வாறே செய்வது'
என்பதை எவ்வாறு கூறுவர்?

A) ஒழுங்குபடல் 

B) படியெடுத்தல்

C) போலச் செய்தல்

D) ஒப்புமையாக்கம்

139. பித்தா பிறைசூடி பதிகத்தைச் சுந்தரர் பாடிய தலம் எது?

A) திருநள்ளாறு 

B) திருமழபாடி

C) திருவெண்ணெய்நல்லூர்

D) திருவலம்புரம்

140. போர் உதவிய திண் தோளாய் பொருந்துறப் புல்லுக' என்று
இராமன் யாரை அழைத்தார்?

A) வீடணன்

B) அனுமான்

C) நீலன்

D) பரதன்

41 உலகில் சிறந்ததென்று உணர்ந்து சிந்திக்கப் பெறுவதைத்
தன்னலமற்ற முறையில் அறிந்து பரப்புவதற்கு முயற்சி செய்வது திறனாய்வாகும் என்று கூறியவர்

A) வால்டர் பெட்டர் 

B) மேத்யூ அர்னால்டு

C) விக்டர் யூகோ 

D) சி.டி. வின்செஸ்டர்

142 தாய்மை உலகிற்கு வழங்கிய முதல் இலக்கியப் பரிசு எது எனத் தமிழண்ணல் கூறுகிறார்?

A) விடுகதை

B) பழமொழி

C ) கதை 

D) தாலாட்டு

143. பாலைக்கலியைப் பாடியவர்

A) கபிலர்

B) பெருங்கடுங்கோ

C) பரணர்

D) ஔவையார்

144. முச்சீரால் வரும் அடியின் பெயர் என்ன?

A) குறளடி

B) நெடிலடி

C) சிந்தடி

D ) அளவடி


145. கடல் நீருக்கும் நீலவானுக்கும் இடையில் கிடக்கும் வெள்னத்தைப் பாரதிதாசன் எவ்வாறு உருவகிக்கிறார்?

A) வீணை

B) யாழ்

C ) முழவு

D) பறை

146. படைப்பில் அமைந்த வியக்கத்தக்க விந்தைகளுள் மிகச் சிறந்தது எது என்று மு.வ. கூறுகிறார்?

A) உலகம்

B) அண்டம்

C) மனித உடம்பு

D) நீர்

147. தமிழர் கலைக் களஞ்சியம் எனத் தமிழண்ணல் குறிப்பிடும் நூல்

A) சிலப்பதிகாரம்

B) திருக்குறள்

C) மணிமேகலை

D) சீவகசிந்தாமணி

148. உள்ளத்து உணர்ச்சியின் தூண்டுதலால் இயல்பாகத் தானே வரும் மொழி

A) அறிவுமொழி

B) எழுத்துமொழி

C) செயல்மொழி 

D) பேச்சுமொழி

149. "ஊர் பரந்த உலகின் முதலாகிய ஊர்” - எது?

A) திருச்சிராப்பள்ளி 

B) திருப்பிரமபுரம்

C) தில்லை

D) திருவாரூர்

150. "காதலர் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல் தீதறுக' இடம்பெறும் காப்பியம் எது?

A) மணிமேகலை

B) சீவக சிந்தாமணி

C) சிலப்பதிகாரம்

D) வளையாபதி

*****************   ****************   ********


தேர்வில் வெற்றி உங்களுக்கே !

வாழ்த்தும் ,

பைந்தமிழ்.மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

*****************   *************   **********





Post a Comment

0 Comments