PG - TRB - TAMIL , 2004 - 2005 - ORIGINAL QUESTION PAPER - QUESTION & ANSWER - ஆசிரியர் தேர்வு வாரியம் - முதுகலைத்தமிழாசிரியர் தேர்வு - 2004 - 2005 வினாத்தாள்

 

 

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய

முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு 

வினாத்தாள் - 2004 - 2005

வினாக்களும் விடைகளும்

PG - TRB - TAMIL 

ORIGINAL QUESTION PAPER  - 2004 - 2005

QUESTION & ANSWER


****************     **************  **********

1. முக்தி நூல்' என்று அழைக்கப்பெறுவது?

A) சீவகசிந்தாமணி 

B) மணிமேகலை

C) கம்பராமாயணம்

D) சிலப்பதிகாரம்

2. பௌத்த சமயத்தைச் சார்ந்த நூல் எது?

A) சிலப்பதிகாரம்

B) கம்பராமாயணம்

C) குண்டலகேசி

D) வளையாபதி

3. மணிமேகலை எத்தனை காதைகளைக் கொண்டுள்ளது?

A) பன்னிரண்டு

B) பதின்மூன்று

C) பத்து

D) முப்பது

4. நீலகேசிக்கு உரை எழுதியவர் யார்? '

A) அடியார்க்கு நல்லார் 

B) தெய்வச் சிலையார்

C) சமய திவாகரர் 

D) சிவஞான முனிவர்

5. ஐஞ்சிறு காப்பியங்களில் சமண சமயம் சார்ந்தவை

A) ஐந்து

B ) மூன்று

C) பத்து

D ) ஆறு

6. அறவணடிகள் இடம்பெறும் காப்பியம் எது?

A) சீவகசிந்தாமணி 

B) மணிமேகலை

C) சிலப்பதிகாரம் 

D) வளையாபதி

7. பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக' என்று கூறியவர் யார்?

A) மணிமேகலை

B) காயசண்டிகை

C) ஆதிரை

D) தீவதிலகை

8.காயசண்டிகைக்கு நேர்ந்த துன்பத்தைக் காஞ்சனனிடம் கூறியது எது?

A) கந்திற்பாவை 

B) புத்த பீடிகை

C) மணிமேகலா தெய்வம் 

D) கோமுகிப் பொய்கை

9. தமிழில் தோன்றிய முதல் விருத்தக் காப்பியம் எது?

A) கம்பராமாயணம் 

B) சீவகசிந்தாமணி

C) சிலப்பதிகாரம் 

D) மகாபாரதம்

10. 'பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது' என்று கூறியவர் யார்?

A) சாதுவன்

B) கவுந்தியடிகள்

C) மணிமேகலை

D) அறவண்டிகள்

11. தமிழில் தோன்றிய முழுமுதற்காப்பியம் எது?

A) மணிமேகலை

B) கம்பராமாயணம்

C) சிலப்பதிகாரம்

D) மகாபாரதம்


12. பசிப்பிணி என்னும் பாவி என்று கூறியவர் யார்?

A) கணியன் பூங்குன்றனார் 

B) இளங்கோவடிகள்

C) ஔவையார்

D) சீத்தலைச்சாத்தனார்

13. மாதவி ஆடிய ஆடல்களின் எண்ணிக்கையினைக் கூறுக.

A) பதினொன்று

B) மூன்று

C) பத்து

D ) ஆறு

14. சிலப்பதிகாரத்தின் திருப்புமுனையாக அமையும் காதை எது?

A) வழக்குரை காதை

B) கொலைக்களக் காதை

C) அரங்கேற்று காதை 

D) கானல் வரி

15. சீவக சிந்தாமணி எவ்வகையில் பகுக்கப்பட்டுள்ளது?

A) சருக்கம்

B ) காதை

C) படலம்

D) இலம்பகம்

16. அறத்தொடு நிற்றல் துறையிலமைந்த பத்துப்பாட்டு நூல் எது?

A) முல்லைப்பாட்டு 

B) குறிஞ்சிப் பாட்டு

C) பட்டினப்பாலை 

D) நெடுநல்வாடை

17. 'எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே' என்று பாடியவர் யார்?

A) ஔவையார்

B) கபிலர்

C) பரணர்

D) பொன்முடியார்

18. அகநானூற்றின் அடிவரையறை

A) 4 முதல் 40 அடி வரை 

B) 9 முதல் 13 அடி வரை

C) 13 முதல் 31 அடி வரை 

D) 3 முதல் 5 அடி வரை

19. தொண்ணூற்றொன்பது வகையான மலர்களைப் பற்றிக் குறிப்பிடும் நூல் எது?

A) குறிஞ்சிப்பாட்டு 

B) கலித்தொகை

C) நெடுநல்வாடை 

D) பட்டினப்பாலை

20. 'வேம்பதலை யாத்த நோன்காழ் எஃகம்'
என்ற பாடலடி இடம்பெறும் சங்க நூல் எது?

A) நெடுநல்வாடை 

B) முல்லைப்பாட்டு

C) புறநானூறு

D) ஐங்குறுநூறு

21. குறிஞ்சித் திணைப் பாடல்களைப் பாடுவதில் வல்ல புலவர் யார்?

A) பரணர்

B) கபிலர்

C) ஔவையார்

D) பிசிராந்தையார்

22. திருமுருகாற்றுப்படையின் வேறு பெயர் யாது?

A) நெஞ்சாற்றுப்படை

B) புலவராற்றுப்படை

C) நெடுந்தொகை

D) மலைபடுகடாம்

23. சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்?

A) தொண்டைமான் இளந்திரையன்

B) கரிகாற்சோழன்

C) ஓய்மானாட்டு நல்லியக்கோடன்

D) பாண்டியன் நெடுஞ்செழியன்

24. பெரும்பாணாற்றுப்படையையும் பட்டினப்பாலையையும் இயற்றிய புலவர் யார்?

A) கடியலூர் உருத்திரங்கண்ணனார்

B) - நக்கீரர்

C) பெருங்கௌசிகனார்

D) நப்பூதனார்

25. பொருநராற்றுப்படையின் பாடலடிகள்

A) 188

B) 269

C) 248

D) 317

26. கலித்தொகையில் இடம் பெற்றுள்ள மருதத்திணைப் பாடல்களின் எண்ணிக்கையைக் கூறுக.

A) 35

B) 17

C) 33

D) 29

27. பத்துப்பாட்டு நூல்களின் ஆற்றுப்படை நூல்கள்

A) மூன்று

B) இரண்டு

C) ஐந்து

D) நான்கு

28. பத்துப்பாட்டு நூல்களில் அளவால் பெரிய நூல் எது?

A) பட்டினப்பாலை 

B) மதுரைக்காஞ்சி

C) மலைபடுகடாம் 

D) பெரும்பாணாற்றுப்படை

29. பத்துப்பாட்டு நூல்களில் அகமா புறமா என்ற சர்ச்சைக்குரிய நூல் எது?

A) நெடுநல்வாடை 

B) முல்லைப்பாட்டு

C) குறிஞ்சிப்பாட்டு 

D) பட்டினப்பாலை

30. பிரகதத்தன் எனும் அரசனுக்குத் தமிழ் பண்பாட்டைத் தெரிவிப்பதற்காகப் பாடப்பட்ட பத்துப்பாட்டு நூல் எது?

A) மலைபடுகடாம் 

B) மதுரைகாஞ்சி

C) பட்டினப்பாலை 

D) குறிஞ்சிப்பாட்டு

31. 'கற்றறிந்தார் ஏத்தும்' என்ற அடைமொழியையுடைய நூல் எது?

A) குறுந்தொகை 

B) கலித்தொகை

C) நற்றிணை

D) பதிற்றுப்பத்து

32. 'சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே' என்று கூறிய புலவர் யார்?

A) ஔவையார்

B) பொன்முடியார்

C) காவற்பெண்டு 

D) வெள்ளிவீதியார்

33. குடவோலை முறை' பற்றிய குறிப்பினைக் கொண்ட சங்க நூல் எது?

A) குறிஞ்சிப்பாட்டு

B ) முல்லைப்பாட்டு 

C) அகநானூறு

D) பரிபாடல்

34. 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்று கூறிய புலவர் யார்?

A) கணியன் பூங்குன்றனார்

B) பிசிராந்தையார்

C) கபிலர்

D) பரணர்

35. இன்று நமக்குக் கிடைத்துள்ள பரிபாடல் பாடல்களின்
எண்ணிக்கையைக் கூறுக.

A) 32

B) 22

C) 42

D) 52

36. எயில்தனைக் காத்தல்

A) வஞ்சித்திணை 

B) உழிஞைத் திணை

C) "வாகைத் திணை 

D) நொச்சித் திணை

37. மகட்பால் இகல் எனும் துறை இடம்பெறும் திணை எது?

A) கரந்தைத் திணை 

B) காஞ்சித் திணை

C) உழிஞைத் திணை 

D) தும்பைத் திணை

38. புறப்பொருள் வெண்பாமாலையின் ஆசிரியர் யார்?

A) அமுதசாகரர் 

B) ஐயனாரிதனார்

C) பவணந்திமுனிவர் . 

D) நாற்கவிராச நம்பி

39. 'கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முற்றோன்றி மூத்த குடி' எனக் கூறும் இலக்கண நூல்
எது ?

A) புறப்பொருள் வெண்பாமாலை

B) தொல்காப்பியம்

C) நன்னூல்

D) பன்னிருபாட்டியல்

40. 'எள்ளல்'காரணமாகத் தோன்றும் மெய்ப்பாடு யாது?

A ) நகை

B) அழுகை

C) அச்சம்

D) வெகுளி

41. உள்ளுறையுவமை எத்தனை வகைப்படும்?

A) நான்கு

B) மூன்று

C) ஐந்து

D) எட்டு

42. இடைச்சங்கம் அமைந்திருந்த இடம் எது?

A) கடல் கொண்ட தென்மதுரை

B) கபாடபுரம்

C) தற்போதைய மதுரை

D) திருநெல்வேலி

43. எட்டுத்தொகை நூல்களில் அகமும் புறமும் சார்ந்த நூல் எது?

A) கலித்தொகை

B) பரிபாடல்

C) ஐங்குறுநூறு

D) பதிற்றுப்பத்து

44. கலித்தொகைப் பாடல்களைத் தொகுத்தவர் யார்?

A) பூரிக்கோ

B) உருத்திரசன்மனார்

C) கூடலூர் கிழார் 

D) நல்லந்துவனார்

45. ஐங்குறுநூற்றில் இடம்பெற்றுள்ள முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவர் யார்?

A) பேயனார்

B) அம்மூவனார்

C) ஓதலாந்தையார் 

D) ஓரம்போகியார்

46. குறிஞ்சித் திணைக்குரிய உரிப்பொருள் யாது?

A) இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

B) ஊடலும் ஊடல் நிமித்தமும்

C) புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

D) இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

47. அகப்பொருள் விளக்கம் கூறும் உரிப்பொருள்கள்

A) பதினான்கு

B) பன்னிரண்டு

C) பத்து 

D) பதிமூன்று

48. முல்லைத் திணைக்குரிய பண் யாது?

A) செவ்வழிப்பண் 

B) சாதாரிப்பண்

C) பஞ்சுரப்பண்

D) மருதப்பண்

49. நான்கு அறிவினையுடைய உயிர்

A) கறையான்

B) முரள்

C) சிப்பி

D) தும்பி

50. காஞ்சி எனும் புறத்தினைக்குரிய அகத்திணை எது?

A) கைக்கிளைத் திணை 

B) பெருந்திணை

C) நெய்தல் திணை 

D) மருதத்திணை

51. அகநானூற்றின் வேறு பெயர் யாது?

A) புலவராற்றுப்படை

B) பாணாறு

C) நெடுந்தொகை

D) நெஞ்சாற்றுப்படை

52 சேர மன்னர்களைப் பற்றி மட்டுமே பாடும் எட்டுத்தொகை நூல் எது?

A) பரிபாடல்

B) புறநானூறு

C) பதிற்றுப்பத்து 

D) கலித்தொகை

53. அறிவு எனப்படுவது பேதையார் சொல்நோன்றல் எனக் குறிப்பிடும் எட்டுத்தொகை நூல் யாது?

A) கலித்தொகை

B) புறநானூறு

C) குறுந்தொகை 

D) பரிபாடல்

54. 'வினைக வயலே வருக இரவலர்' எனக்கூறும் எட்டுத்தொகை நூல் எது?

A) புறநானூறு

B) நற்றிணை

C) அகநானூறு

D) ஐங்குறுநூறு

55. 'முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்' என்று குறிப்பிடும் நூல் யாது?

A) நற்றிணை

B) புறநானூறு

C) குறுந்தொகை 

D) பரிபாடல்

56. தொல்காப்பியம் குறிப்பிடும் பொருள்கோள்கள்

A) நான்கு

B) ஒன்பது

C) எட்டு

D) பத்து

57. தன்மையணியின் வேறுபெயர் யாது?

A) இயல்பு நவிற்சியணி 

B) ஒட்டணி

C) தற்குறிப்பேற்றவணி 

D) நுட்பவணி

58. ‘சிறப்பினும் பொருளினும் குணத்தினும் உண்மை மறுத்துப் பிறிதுரைக்கும்’ அணி எது?

A) தீவகவணி

B) முன்னவிலக்கணி

C) அவநுதியணி

D) விபாவனையணி

59. 'கருதிய பொருள் தொகுத்து அது புலப்படுவதற்கு ஒத்தது என்று உரைக்கும்' அணி யாது?

A) ஒட்டணி

B) இலேசவணி

C) சங்கீரணவணி 

D) ஆர்வமொழியணி

60. வியத்தகு செல்வமும் மேம்படும் உள்ளமும் உயர்ச்சி புனைந்துரைக்கும் அணி எது?

A) ஆர்வமொழியணி 

B) அதிசயவணி

C) உதாத்தவணி

D) சுவையணி

61 மரபு என்ற பெயர் கொண்டு முடியும் இயல்கள்

A) மூன்று

B) நான்கு

C) ஐந்து

D) இரண்டு

62 அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருமாறு அமையும்தொடையின் பெயர் என்ன?

A) இயைபுத் தொடை 

B) மோனைத் தொடை

C) அளபெடைத் தொடை 

D) எதுகைத் தொடை

63. வஞ்சிப்பாவிற்குரிய ஓசை எது?

A) துள்ளலோசை 

B) செப்பலோசை

C) தூங்கலோசை 

D) அகவலோசை

64. கலிப்பாவிற்குரிய உறுப்புகள்

A) ஐந்து

B ) ஆறு

C) பதினெட்டு

D) பத்து

65. இழுமென்ற ஒலியுடன் சொற்களைப் புணர்த்தி விழுமிய பொருள்களைப் பாடும் வனப்பு யாது?

A) தோல்

B) இழைபு

C) இயைபு

D) அம்மை

66. கால் கழீஇ வருதும் என்பது

A) இடக்கரடக்கல் 

B) குழூஉக்குறி

C) இலக்கணப் போலி

D) மரூஉ

67. ஈரிதழ் ஒலிகள்

A) தந

B ) ப ம 

C ) ட ண

D) சஞ

68. எதிரொலிச் சொற்களைத் தமிழ் மொழி எம்மொழியிலிருந்து பெற்றது?


A) மராத்தி மொழி 

B) சிங்கள மொழி

C) இந்தி மொழி 

D) முண்டா மொழி


69. 'பிங்கான்' என்ற சொல்


A) சீனமொழிச் சொல் 

B) மலாய் மொழிச் சொல்

C) உருது மொழிச் சொல் 

D) துருக்கி மொழிச் சொல்


70 . ' குடக்கு'எனும் சொல் உணர்த்தும் பொருள் யாது?


A) கிழக்கு

B) தெற்கு

C) மேற்கு

D) வடக்கு


71 . திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர் யார்?

A) வீரமாமுனிவர் 

B) ஜி.யூ.போப்

C) கால்டுவெல்

D) இராபர்ட்-டி-நொபிலி

72. திருந்திய திராவிட மொழிகளின் எண்ணிக்கை

A) பன்னிரண்டு

B) ஆறு

C) ஐந்து

D) பத்து


73. 'கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை' எனக்கூறும் இலக்கண நூல்

A) நன்னூல்

B) யாப்பருங்கலம்

C) நேமிநாதம்

D) தொல்காப்பியம்


74. மொழிக்கு இறுதியில் வரும் மெய்கள்


A) பதினெட்டு

B ) ஆறு

C) பதினொன்று 

D) பன்னிரண்டு


75. 'ஓ' எனும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?

B) ஆறு

A) எருது

B) நுரை

C) மதகு நீர் தாங்கும் பலகை

D) மலர்

76. 2004-இல் ஒலிம்பிக் வெள்ளி பதக்கத்தை வென்ற இந்தியர்

A) தன்ராஜ் பிள்ளை 

B) ராஜ்யவர்தன் சிங் ரதோர்

C) அஞ்சு பாபி ஜார்ஜ் 

D) திலீப் டர்க்கி


77. ISO குறிப்பது

A) இண்டர்நேஷ்னல் ஸ்டான்டர் ஆர்கனைசேஷன்

B) இன்டியன் ஸ்பேஸ் ஆர்கனைசேஷன்

C) இண்டர் நேஷ்னல் சயின்ஸ் ஆர்கனைசேஷன்

D) இன்டியன் சோஷியல் ஆர்கனைசேஷன்

78. லேசான உலோகம்

A) காரீயம்

B) சோடியம்

C) அலுமினியம் 

D) லித்தியம்

79. ஓர் உருகு இழையின் தன்மை

A) அதிக மின்தடை மற்றும் அதிக உருகுநிலை

B) குறைந்த மின்தடை மற்றும் அதிக உருகுநிலை

C) அதிக மின்தடை மற்றும் குறைந்த உருகுநிலை

D) குறைந்த மின்தடை மற்றும் குறைந்த உருகுநிலை

80. இந்தியாவின் தலைமை நீதிபதி

A) ஆர்.சி. லஹோதி

B) சுபாஷன் ரெட்டி

C) ஜி.பி. பட்நாயக்

D) ஏ.ஆர். லட்சுமணன்

81 இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு
மாற்றப்பட்ட வருடம்

A) 1910

B) 1911

C) 1912

D) 1913

82. கீழ்க்கண்டவர்களுள் எந்த முகலாய சக்கரவர்த்தி பிரிட்டிஷாருக்கு இந்தியாவுடன் வாணிகம் நடத்த முதலில் அனுமதி அளித்தவர்?

A) ஜஹாங்கீர்

B) அக்பர்

C) ஷாஜஹான்

D) ஔரங்கசீப்

83. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது

A) ஆகஸ்ட் 15, 1947 

B) ஜனவரி 26, 1947

C) ஜனவரி 26, 1950 

D) ஆகஸ்ட் 15, 1950

84. பாராளுமன்றத்தில் பூஜ்ய நேரம் என்றால் என்ன?
A) மக்களவையில் பண மசோதா அறிமுகப்படுத்தப்படும் பொழுது

B) காலை மற்றும் மாலை அலுவல்களுக்கு இடைப்பட்ட இடைவேளை நேரம்

C) எதிர்க்கட்சிகளின் பிரேரணைகளை எடுத்துக் கொள்ளும் நேரம்

D) மிகமுக்கியத்துவம் நிறைந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரம்

85. 'As I See' என்ற நூலின் ஆசிரியர்

A) அடல் பிஹாரி வாஜ்பாய் 

B) குஷ்வந்த் சிங்

C) கிரண்பேடி

D) ஷீலா தீக்ஷித்

86. WAIS -இன் வாய்மொழி அளவுகோல் கொண்டிருப்பது

A) 6 சோதனைகள் 

B) 4 சோதனைகள்

C) 5 சோதனைகள் 

D) 8 சோதனைகள்

87. வாழ்க்கை உள்ளுணர்வு (Life instincts) .......... என்று அழைக்கப்படுகிறது.

A) ஈராஸ் (Eros)

B) சூப்பர் ஈகோ (Shperegp)

C) தானடோஸ் (Thanatos)

D) லிபிடோ (Libido)

88. கீழ்க்கொடுத்துள்ளதில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எப்பிரிவு ஆங்கிலத்தை 15 ஆண்டுகளுக்கு
நீடிக்க வகை செய்கிறது?

A) பிரிவு 343

B) பிரிவு 45

C) பிரிவு 49

D) பிரிவு 351

89. பிளேக் இதனால் ஏற்படுகிறது.

A) எலி

B ) பேன்

C) தெள்ளுப்பூச்சி

D ) கொசு

90. ஃப்ரோபெல் என்பவர்

A) ஒரு பிரெஞ்சு கல்வியறிஞர்

B) ஓர் இத்தாலி கல்வியறிஞர்

C) ஒரு ஜெர்மன் கல்வியறிஞர்

D) ஓர் அமெரிக்க கல்வியறிஞர்

91. “கல்வி என்பது அனுபவங்களை மறுபடியும் வடிவமைத்தல்”
(Education is the reconstruction of experiences)
என்ற கருத்துடையவர்

A) பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்

B) ஜான் டூயி

C) ஸ்ரீ அரவிந்தர்

D ) தாகூர்

92. செயல் திட்டம் என்பதை முன்மொழிந்தவர்

A) தாகூர்

B) ஸ்ரீ அரவிந்தர்

C) ஜான் டூயி

D) ஃப்ராபெல்

93. இந்தியன் சைனிக் பள்ளி அகாதமியின் தலைவர்

A) இந்தியக் குடியரசுத் தலைவர்

B) பிரதம மந்திரி

C) மனிதவள மேம்பாட்டு அமைச்சர்

D) பாதுகாப்பு அமைச்சர்

94. மனித உளவியல் அறிஞர் (Humanistic psychologist)

A) ப்ராய்டு

B) கார்ல் ரோஜர்ஸ்

C) ஜங்

D) ஆட்லர்

95. ஊக்கத்தின் உள்ளுணர்வு கொள்கையை (The instinct theory of motivation) உருவாக்கியவர்

A) மர்பி

B) ஆபிரகாம் மாஸ்லோ

C) மெக்டூகல்

D) கில்போர்டு

96. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

A) டிஸ்பிளே ஸ்கிரின்

B) விசைப்பலகை (Key board)

C) அறிவுரைப் பொருட்களுடன் கூடிய ஃப்ளாப்பி டிஸ்க்

D) பிரிண்டர்

97. குழந்தை மையப்படுத்திய கல்வி முறையின் தந்தை எனப்படுபவர்

A) இரவீந்திரநாத் தாகூர். 

B) மகாத்மா காந்தி

C) மரியா மாண்சோரி 

D) ரூஸோ

98. "The Noisy child and the Silent Mind' என்ற
கட்டுரையை எழுதியவர்

A) ஸ்ரீ அரவிந்தர்

B) ஜே. கிருஷ்ணமூர்த்தி

C) பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்

D) பால் ஃப்ரியர்

99. முதன் முதலாக நடுநிலை கல்வியில் பலவிதமான மார்க்கங்களை (Diversified courses) குறிப்பிட்டது

A) ஹண்டர் குழு

B) ஹார்டாக் குழு

C) உட்ஸ் அறிக்கை

D) கல்கத்தா பல்கலைக்கழகக் குழு

100. ஐக்கிய நாடுகள் தினம் கொண்டாடப்படுவது

A) அக்டோபர் 1

B) மார்ச் 15

C) அக்டோபர் 24 

D) டிசம்பர் 1

101. இவான் பாவ்லாவ் ஆய்வு செய்வது

A) ஊக்கம்

B) மாறுதலுக்குள்ளான அனிச்சைச் செயல்

C) அறிவுத்திறன்

D) ஆளுமை

102 ஜான் பியாஜேவின் ஸென்ஸரி மோட்டார் நிலைக்காலம் (Sensory motor stage period) விரவியிருப்பது

A) 0 முதல் 2 ஆண்டுகள்

B) 7 ஆண்டுகள் முதல் 11 ஆண்டுகள் வரை

C) 11 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல்

D) 2 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை

103. கற்றல் வகையின் படிநிலைக் கொள்கையை (The theory of Hierarchy of learning types) உருவாக்கியவர்

A) இ.எல். தார்ண்டைக்

B) பி.எஃப். ஸ்கின்னர்

C) இராபர்ட் எம், காக்னே

D) பாவ்லோவ்

104. கீழ்க்கண்டவற்றில் எது முன்னேற்றப் பள்ளி' ஆகும்?

A) குழந்தைகள் இல்லம்

B) கோடை மலைப்பள்ளி

C) ஆசிரமப் பள்ளிகள்

D) கிண்டர்கார்டன் பள்ளிகள்

105. கற்பித்தல் இயந்திர தளத்தின் (Field of teaching machines) ya Garing

A) பி.எஃப். ஸ்கின்னர் 

B) கிரௌடர்

C) ஆட்லர்

D) சிட்னி பிரஸ்ஸே

106. 'Education for a Better Social Order' என்ற நுலை எழுதியவர்

A) ஸ்ரீ அரவிந்தர் 

B) ஜான் டூயி

C) பெர்டரண்ட் ரஸ்ஸல் 

D) மாண்டிசேரி

107. விஸ்வபாரதி நடைமுறைக்கு வந்த ஆண்டு

A) 1901

B) 1921

C) 1911

D) 1919

108. உன பகுப்பாய்வு கோட்பாட்டை விவரித்தவர்

A ) ஜங்

B) சிக்மண்ட் ப்ராய்டு

C) ஷெல்டன்

D) மாஸ்ஸோ

A) ஜங்


109. சின்னம்மை உடலில் நீடிக்கும் காலம்

A) ஒரு வாரம்

B) நான்கு வாரங்கள்

C) இரண்டு வாரங்கள் 

D) மூன்று வாரங்கள்

110. TATஐ விரிவாக்கம் செய்தவர்

A) பிரஸ்ஸே

B) ஆல்பிரட் பினே

C) சிரில் பர்ட் மற்றும் வெர்னான்

D) முர்ரே மற்றும் மார்கன்

111 'நவசக்தி'என்ற இதழின் ஆசிரியர் யார்?

A) பாரதியார்

B) திரு.வி.க.

C) மறைமலையடிகள் 

D) கல்கி

112. தமிழில் தோன்றிய முதல் சிறுகதை எது?

A) குறட்டை ஒலி

B) குருபீடம்

C) குளத்தங்கரை அரச மரம்

D) செவ்வாழை

113. 'தமிழ்ச் சிறுகதைச் சித்தர்' எனப் போற்றப்படுபவர் யார்?

A) ஜெயகாந்தன் 

B) பதுமைப்பித்தன்

C) மௌனி

D) - கு.ப.ரா.

114. 'பயண இலக்கியப் பெருவேந்தர்' எனப் போற்றப்படுபவர் யார்?

A) ஏ.கே. செட்டியார்
 
B) சோமலெ

C) மணியன்

D) திரு.வி.க

115. திருவருட்பாவை மருட்பா எனக் கூறியோரை எதிர்த்து வாதிட்டு அருட்பாவே என நிறுவிய முஸ்லீம் பேரறிஞர் யார்?

A) ஜவ்வாதுப் புலவர்

B) வண்ணக் களஞ்சியப் புலவர்

C) காசிம் புலவர்

D) செய்குதம்பிப் புலவர்

116. இலக்கியத்தல் பரவி நிற்கும் அழகுத் தன்மையைப் பல நோக்கங்களில் ஆராய்வது

A) மரபுவழித் திறனாய்வு

B) படைப்பு வழித் திறனாய்வு

C) முருகியல் முறைத் திறனாய்வு

D) விதிமுறைத் திறனாய்வு

117. ஞானபீட இலக்கிய விருது பெற்ற தமிழ் நாவல் எது?

A) சித்திரப்பாவை 

B) கள்ளோ? காவியமோ?

C) பொன்விலங்கு

D) பாரிஸுக்குப் போ

118. 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறு நல்லுலகம்' எனத் தமிழகத்தின் எல்லையைச் சுட்டியவர்

A) பனம்பாரனனார் 

B) தொல்காப்பியர்

C) நச்சினார்க்கினியர் 

D) இளங்கோவடிகள்

119. 'சூரியனுக்கு மிகத் தொலைவில் உள்ள கிரகம்’ எது?

A) யுரேனஸ்

B) நெப்டியூன்

C) ப்ளுட்டோ

D) வெள்ளி


120. இந்திய தேசியக் கொடியில் அமைந்துள்ள ஆரங்களின் எண்ணிக்கையைக் கூறுக.


A) 32

B) 24

C) 12 

D ) 18

121. பெண்களுக்காக முதன் முதலில் தொடங்கப்பெற்ற இதழ் எது?

A) மங்கையர் மலர் 

B) பெண்மதி போதினி

C) மாதர்மித்திரி

D) அமிர்தவர்ஷினி

122 திருக்குற்றாலக் குறவஞ்சியை இயற்றியவர் யார்?

A) வேதநாயக சாஸ்திரியார்

B) சிவக்கொழுந்து தேசிகர்

C) திரிகூடராசப்பக் கவிராயர்

D) வரத நஞ்சையப்ப பிள்ளை

123. தெய்வீக உலா' என்று சிறப்பிக்கப்படும் நூல் எது?

A) திருக்கைலாய ஞான உலா

B) மூவருலா

C) மதுரைச் சொக்கநாதர் உலா

D) திருவாரூர் உலா

124. உரைநடை வேந்தர்' என்று போற்றப்படுபவர் யார்?

A) நக்கீரர்

B) ஆறுமுக நாவலர்

C) பரிமேலழகர்

D) சேனாவரையர்

125. என் சரிதம்' என்ற நூலை எழுதியவர் யார்?

A) உவே.சா.

B) நாமக்கல் கவிஞர்

C) பாரதியார்

D) மறைமலையடிகள்

126. செயல்பாட்டு ஆக்க நிலையுறுத்தல் கொள்கையை தோற்றுவித்தவர்

A) இ.எல். தார்ண்டைக் 

B) பாவ்லாவ்

C) பி.எஃப். ஸ்கின்னர்

D) கோஹ்லர்


127. விளைவு விதி (Lawofeffect).....-- -ன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

A) மறுபடி செய்தல்

B) வெகுமதி

C) ஊக்கம்

D) மறுமொழி

128. தேசிய கல்விக் குழுவின் (1964-66) தலைவராக இருந்தவர்

A) டாக்டர் டி.எஸ். கோத்தாரி

B) டாக்டர் ஏ.எல். முதலியார்

C) டாக்டர் ஜே.பி. நாயக்

D) டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன்

129. சுவிட்சர்லாந்திலுள்ள ஓல்டன்வால்ட் பள்ளியைத்  (oldenwald School) தோற்றுவித்தவர்

A) பால் கேஹப்

B) பால் ஃப்ரியர்

C) ஏ.எஸ். நீல்

D) ஃபுரோபெல்

130. ஃபுரோபெல்லுடன் தொடர்பில்லாதது எது?

A ) பாடல்கள்

B) பரிசுகள்

C) தொழில்

D) கற்பிக்கும் உபகரணங்கள்

131 சமரச சன்மார்க்கர்தை முதன் முதலாக உலகிற்கு உணர்த்தியவர் யார்?

A) தாயுமானவர்

B) அருணகிரிநாதர்

C) பட்டினத்தார்

D) திருமூலர்

132. பக்தி சுவை நனி சொட்ட சொட்டப்பாடிய கவிவலவ' என்று போற்றப்படுபவர் யார்?

A) சேக்கிழார்

B) கம்பர்

C) மாணிக்கவாசகர்

D) அப்பர்

133. பரஞ்சோதி முனிவர் இயற்றிய புராணம் எது?

A) கந்தபுராணம்

B) அரிச்சந்திர புராணம்

C) திருவிளையாடல் புராணம்

D) பெரியபுராணம்

134. 'ஆராய்ச்சி' என்னும் இதழை நடத்தியவர் யார்?

A) நா. வானமாமலை 

B) கி.வா. ஜகந்நாதன்

C) அன்னகாமு

D) அழ வள்ளியப்பா

135. 'ஒரு கிராமத்து நதி' கவிதை நூலுக்காக சாகித்ய அகாதெமி பரிசு பெற்றவர் யார்?

A) கவிக்கோ அப்துல் ரகுமான்

B) கவிஞர் மீரா

C) கவிஞர் சிற்பி.

D) கவிஞர் வைரமுத்து

136. ‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னைநன்றாகத் தமிழ்செய்யு மாறே' என்று கூறும் நூல் எது?

A) திருமந்திரம்

B) திருவாசகம்

C) பெரிய புராணம் 

D) திருக்கோவையார்

137. திருவிரட்டை மணிமாலையை இயற்றியவர் யார்?

A) சுந்தரர்

B) அப்பர்

C) ஆண்டாள்

D) காரைக்கால் அம்மையார்

138, சைவத்திற்கு மாணிக்கவாசகர் போன்று வைணவத்திற்கு உரியவர் யார்?

A) நம்மாழ்வார்

B) பேயாழ்வார்

C) பெரியாழ்வார்

D) திருப்பாணாழ்வார்

139. வழிப்பறிக் கொள்ளையடித்து வைணவ அடியார்களைப் புரந்த ஆழ்வார் யார்?

A) பூதத்தாழ்வார்

B) குலசேகர ஆழ்வார்

C) திருமங்கையாழ்வார்

D) பொய்கையாழ்வார்

140. நம்மாழ்வாரையே தெய்வமாகக் கருதிப்பாடிய ஆழ்வார் யார்?

A) மதுரகவியாழ்வார்

B) திருமழிசையாழ்வார்

C) தொண்டரடிப் பொடியாழ்வார்

D) ஆண்டாள்

141 'ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம் ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கமுடைமை' என்று சுட்டும் நூல் எது?

A) ஆசாரக்கோவை 

B) நாலடியார்

C) முதுமொழிக்காஞ்சி

D) ஏலாதி

142. சிறுபஞ்சமூலம் என்ற நூலை இயற்றியவர் யார்?

A) காரியாசான்

B) கணிமேதாவியார்

C) விளம்பிநாகனார் 

D) பூதஞ்சேந்தனார்

143. குமரகுருபரர் இயற்றிய நூல் எது?

A) அறநெறிச்சாரம் 

B) நன்னெறி

C) வெற்றிவேற்கை 

D) நீதிநெறி விளக்கம்

144. தேவாரம் எனப்படுபவை

A) முதல் மூன்று திருமுறைகள்

B) முதல் ஐந்து திருமுறைகள்

C) முதல் ஏழு திருமுறைகள்

D) முதல் ஆறு திருமுறைகள்

145. 'ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பது எது?

A) திருவாசகம்

B) திருப்புகழ்

C) திருவருட்பா

D) திருமந்திரம்

146. திருக்குறளில் அறத்துப் பாலில் இடம் பெற்றுள்ள அதிகாரங்கள்

A) 70

B) 25

C) 35

D) 38

147. 'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்' என்று கூறியவர் யார்?

A) ஔவையார்

B) இடைக்காடர்

C) கோவூர்கிழார் 

D) மோசிகீரனார்

148. 'வேளாண் வேதம்' என்னும் வேறு பெயரையுடைய நூல் எது?

A) திருக்குறள்

B) நாலடியார்

C) சிலப்பதிகாரம் 

D) கம்பராமாயணம்

149. உலக மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்ட தமிழ் நூல் எது?

A ) புறநானூறு

B) சிலப்பதிகாரம்

C) திருக்குறள்

D) நாலடியார்

150. மூன்றுரை அரையனார் இயற்றிய நீதி நூல் எது?

A ) பழமொழி நானூறு

B) ஆசாரக்கோவை

C ) நான்தணிக்கடிகை

D) திரிகடுகம்


**************   **********    *****************


தேர்வில் வெற்றி உங்களுக்கே !

வாழ்த்தும் ,

பைந்தமிழ்.மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

*****************   *************   **********

Post a Comment

0 Comments