மாணிக்கவாசரின் திருவாசகம்
4 , போற்றித் திரு அகவல்
பகுதி - 2
உரை விளக்கம்:
பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ,
தலைமையாசிரியர் , ( ப.நி )
கோகிலாபுரம் , இராயப்பன் பட்டி , தேனி
ஆறு கோடி மாயா சத்திகள்
2
வேறுவேறு தம்மாயைகள் தொடங்கின;
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி, நாத்தழும்பு ஏறினர்;
சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்
பற்றி அழைத்துப் பதறினர்; பெருகவும்
விரதமே பரம் ஆக, வேதியரும்,
சரதம் ஆகவே, சாத்திரம் காட்டினர்;
சமய வாதிகள் தம் தம் மதங்களே
அமைவது ஆக, அரற்றி, மலைந்தனர்,
மிண்டிய மாயா வாதம் என்னும்
சண்ட மாருதம் கழித்து அடித்து, ஆஅர்த்து
உலோகாயதன் எனும் ஒண் திறல் பாம்பின்
கலா பேதத்த கடுவிடம் எய்தி,
அதில்பெரு மாயை எனைப் பலசூழவும்,
தப்பாமே, தாம்பிடித்தது சலியாத்,
தழல் அது கண்ட மெழுகு அதுபோலத்,
தொழுது, உளம் உருகி, அழுது, உடல் கம்பித்து,
ஆடியும், அலறியும், பாடியும், பரவியும்,
'கொடிறும் பேதையும் கொண்டது விடாது' எனும்
0 Comments