மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
தொடர் - 7
உரை விளக்கம்:
பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ,
தலைமையாசிரியர் , ( ப.நி )
கோகிலாபுரம் , இராயப்பன் பட்டி , தேனி
3. திருஅண்டப் பகுதி
(தில்லையில் அருளியது)
சிவனது தூலசூக்குமத்தை வியந்தது
(சிவபெருமான் இல்லாத இடம் இல்லை என்பதை விளக்குவது)
இணைக்குறள் ஆசிரியப்பா
திருச்சிற்றம்பலம்
5
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்,
அளப்பு அரும் தன்மை, வளப்பெரும் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன;
இல்நுழை கதிரின் நுண்ணணுப் புரைய;
சிறிய ஆகப் பெரியோன், தெரியின்,
வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்,
தோற்றமும், சிறப்பும், ஈற்றொடு புணரிய
மாப்பேர் ஊரூழியும், நீக்கமும், நிலையும்,
10 சூக்கமொடு, தூலத்துச், சூறை மாருதத்து
எறியது வளியின்
கொட்கப் பெயர்க்கும் குழகன்; முழுவதும்
படைப்போன் படைக்கும் பழையோன்; படைத்தவை
காப்போன் காக்கும் கடவுள்; காப்பவை
15 கரப்போன்; கரப்பவை கருதாக்
கருத்துடைக் கடவுள்; திருத்தகும்
அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும்
வீடுபேறாய், நின்ற விண்ணோர் பகுதி
கீடம்புரையும் கிழவோன்; நாள்தொறும்
20 அருக்கனில் சோதி அமைத்தோன் திருத்தகு
மதியில் தண்மை வைத்தோன்; திண்திறல்
தீயில் வெம்மை செய்தோன்; பொய்தீர்
வானில் கலப்பு வைத்தோன்; மேதகு
காலின் ஊக்கம் கண்டோன்; நிழல்திகழ்
25 நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட
மண்ணில் திண்மை வைத்தோன் என்று என்று
எனைப்பல கோடி, எனைப்பல பிறவும்,
0 Comments