10 ஆம் வகுப்பு - சமூக அறிவியல் - வரலாறு - அலகு 5 , பகுதி - 2 / 10th SOCIAL SCIENCE - HISTORY - UNIT 5 - PART 2 - ONLINE TEST - QUESTION & ANSWER

 


10 ஆம் வகுப்பு - சமூக அறிவியல்  

வரலாறு - அலகு - 5

 19 ஆம் நூற்றாண்டில் சமூக , சமய

 சீர்திருத்த இயக்கங்கள் - பகுதி - 2

வினா உருவாக்கம் - 

திருமதி.ச.இராணி ப.ஆ,

இளமனூர் , மதுரை.

**************    ***************   **********

தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும்   ஆன்லைன் தேர்வு எழுத விருப்பமுள்ளோர் தங்கள் பெயர் படிப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பி லிங்க் பெற்றுக்கொள்ளலாம்.

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

*****************   **************   -**********

1) பிரார்த்தனை சமாஜம் எங்கு எந்த
ஆண்டில் ஆரம்பிக்கப் பட்டது?

அ) பம்பாய் , 1867

ஆ) சென்னை , 1857

இ) கல்கத்தா , 1867

ஈ) டில்லி 1860

விடை :  அ ) பம்பாய் , 1867

2) தக்காண கல்விக்கழகம் , விதவை
மறுமணச் சங்கம் போன்ற அமைப்புகளை நிறுவியவர் யார்?

அ ) இராமகிருஷ்ணர்

ஆ) மகாதேவ் கோவிந்த் ரானடே

இ) ஜோதிபா பூலே

ஈ) தேவேந்திரநாத் தாகூர்

விடை : ஆ ) மகாதேவ் கோவிந்த் ரானடே

3) ஆரிய சமாஜம் தொடங்கப்பட்ட ஆண்டு
எது?

அ) 1975

ஆ) 1875

இ)1865

ஈ) 1855

விடை : ஆ ) 1875

4) ஆரிய சமாஜத்தின் முக்கியக் குறிக்கோள் எது?

அ) விதவை திருமணம்

ஆ) உடன்கட்டை ஒழித்தல்

இ)ஆங்கில வழிக்கல்வி ஆதரித்தல்

ஈ) எதிர்மதமாற்றம்

விடை : ஈ ) எதிர்மதமாற்றம்

5) வாழ்கின்ற அனைத்து உயிரினங்களும் இறைவனே எனக்கூறியவர் யார்?

அ ) இராமகிருஷ்ண பரமஹம்சர்

ஆ) விவேகானந்தர்

இ) M G இரானடே

ஈ) ஆத்மநாம்

அ ) இராமகிருஷ்ண பரமஹம்சர்

6) மனிதர்களுக்குச் செய்யப்படும் சேவையே கடவுளுக்குச் செய்யப்படும் சேவை எனக்கூறியவர் யார்?

அ) அய்யங்காளி

ஆ) நாராயணகுரு

இ) இராமகிருஷ்ண பரமஹம்சர்

ஈ) M G இரானடே

விடை : இ ) இராமகிருஷ்ண பரமஹம்சர்

7) பஞ்சாபில் சீர்திருத்த   இயக்கங்களுக்குத்
தலைமையேற்ற சமாஜம் எது ?

அ) ஆரிய சமாஜம்

ஆ) பிரார்த்தனை சமாஜம்

இ) பிரம்ம சமாஜம்

ஈ) பிரம்மஞான சபை

விடை : அ ) ஆரிய சமாஜம்

8) இராமகிருஷ்ண பரமஹம்சர் எந்த
ஊரைச்சேர்ந்தவர்?

அ) அடையாறு

ஆ) பஞ்சாப்

இ) தட்சினேசுவரம்

ஈ) பேலூர்

விடை : இ ) தட்சினேசுவரம்

9 ) இராமகிருஷ்ண மிஷன் என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் யார் ?

அ ) இராமகிருஷ்ண பரமஹம்சர்

ஆ) சுவாமி விவேகானந்தர்

இ) இராஜாராம் மோகன்ராய்

ஈ) ஜோதிபாபூலே

விடை : ஆ ) சுவாமி விவேகானந்தர்

10 ) நரேந்திரநாத் தத்தா என்பது யாருடைய பெயர்?

அ) சுவாமி விவேகானந்தர்

ஆ) சுவாமி கமலாத்மானந்தர்

இ) கேசவ்சந்திரசென்

ஈ) வித்யாசாகர்

விடை : அ ) சுவாமி விவேகானந்தர்


11) 1893 ஆம் ஆண்டு உலகச்சமய மாநாடு
எங்கு நடைபெற்றது?

அ) வாரணாசி

ஆ) பெர்லின்

இ) இலண்டன்

ஈ) சிக்காகோ

விடை : ஈ ) சிக்காகோ

12) 1893 ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து சமயம் பற்றிச்
சொற்பொழிவாற்றியவர் யார் ?


அ) சுவாமி விவேகானந்தர்

ஆ) அன்னிபெசன்ட்

இ) தயானந்த சரஸ்வதி

ஈ) ஆத்மராம் பாண்டுரங்

விடை : அ ) சுவாமி விவேகானந்தர்


13) பிரம்மஞான சபையைத் தோற்றுவித்தவர் யார்?


அ) சுவாமி விவேகானந்தர்

ஆ) அன்னிபெசன்ட்

இ) ஜோதிபாபூலே மற்றும் அய்யங்காளி

ஈ) மேடம் H.P பிளா வட்ஸ்கி மற்றும் H.S ஆல்காட்

விடை : ஈ) மேடம் H.P பிளா வட்ஸ்கி மற்றும் H.S ஆல்காட்

14) இந்தியாவில் பிரம்மஞான சபை எங்கு
ஆரம்பிக்கப்பட்டது?

அ) கல்கத்தா

ஆ) மும்பை

இ) அடையாறு

ஈ) மதுரை

விடை : இ ) அடையாறு

15 ) இந்தியாவிற்கு அயர்லாந்தைப் போல
தன்னாட்சி வழங்க வேண்டும் என்று
கூறியவர் யார்?

அ) விவேகானந்தர்

ஆ) அன்னிபெசன்ட்

இ) சாவித்ரிபாய்

ஈ ) அய்யங்காளி

விடை :ஆ ) அன்னிபெசன்ட்

16) நியூ இந்தியா, காமன்வீல் ஆகிய
செய்தித்தாட்கள் யாரால் வெளியிடப்பட்டன?

அ ) சாவித்ரி

ஆ) அன்னிபெசன்ட்

இ )  H.P.பிளாவட்ஸ்கி

ஈ) அயோத்திதாசர்

விடை : ஆ ) அன்னிபெசன்ட்

17) ஜோதிபா கோவிந்தராவு பூலே எந்த
மாநிலத்தில் பிறந்தார்?

அ) மகாராஷ்டிரா

ஆ) பஞ்சாப்

இ) கேரளா

ஈ ) தமிழ் நாடு

விடை : அ ) மகாராஷ்டிரா

18) ஒடுக்கப்பட்டோருக்கான முதல்
பள்ளி எந்த ஆண்டு , எங்கு
தொடங்கப்பட்டது?

அ) 1927 , சென்னை

ஆ) 1852 , புனே

இ) 1952 , மும்பை

ஈ ) 1854 , தட்சிணேசுவரம்

விடை : ஆ ) 1852 , புனே

19 ) சத்ய சோதக் சமாஜ் ( உண்மையை நாடுவோர் சங்கம்) என்னும் அமைப்பை
ஏற்படுத்தியவர் யார்?

அ) அன்னிபெசன்ட்

ஆ) சையத் அகமத்கான்

இ )  ஜோதிபா கோவிந்தராவ் பூலே

ஈ ) அய்யங்காளி

விடை : இ ) ஜோதிபா கோவிந்தராவ் பூலே

20 ) குலாம்கிரி' என்றால் என்ன?

அ) ஒற்றுமை

ஆ ) அடிமைத்தனம்

இ )வீடுபேறு

ஈ) ஆர்வம்

விடை : ஆ ) அடிமைத்தனம்

***************    **************   ***********



Post a Comment

0 Comments