ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - கடிதம் - கால்முளைத்த கதைகள் / 9th TAMIL - EYAL 1 - KADITHAM

 


ஒன்பதாம் வகுப்பு - தமிழ் 

இயல் - 1

கடிதம் எழுதுக

உங்களின் நண்பர், பிறந்தநாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணனின்,
“கால்முளைத்த கதைகள்” என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.



                                                   சென்னை- 1,
                                                      25.05. 2020.


ஆருயிர் நண்பா!


வணக்கம். நலம். நலமறிய ஆவல். என்னுடைய பிறந்தநாள் பரிசாக நீ அனுப்பிய எழுத்தாளர் எஸ்.
இராமகிருஷ்ணன் எழுதிய ‘கால் முளைத்த கதைகள்' என்ற கதைப்புத்தகம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி
அடைந்தேன். அதில் உள்ள கதைகள் அனைத்தையும் படித்தேன். படிப்பதற்குப் புதுமையாகவும், மிக்கஆர்வமாகவும் இருந்தது.


உலகம் தோன்றியது எப்படி என்ற வினாவிற்கு, இன்றுவரை தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை.
உலகம் எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு இந்நூலிலுள்ள கதைகள், வியப்பான விடைகளைத் தருகின்றன.
பழங்குடியினர் முப்பதுபேர் சொன்ன கதைகளைக் கொண்டதாக இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
‘வண்ணத்துப்பூச்சி ஏன் பூக்களைச் சுற்றுகிறது' என்ற ஒரு கதை. வயதான பெண் ஒருத்தி தன்னுடைய
பூந்தோட்டத்தில் பூத்திருந்த பூக்களை யாரோ பறித்துவிட்டதை எண்ணி, இரவு முழுவதும் வருந்தினாள்.


மறுநாள் மறைந்து இருந்து பூக்களைப் பறித்தவர்களைப் பிடித்துவிட்டாள்.
பூக்கள்மீது இருந்த ஆசையால் பறித்தோம் என்று ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கூறுகின்றனர்.
கிழவி அவ்விருவரையும் வண்ணத்துப் பூச்சிகளாக உருமாறச் செய்துவிடுகிறாள். அன்றிலிருந்து
வண்ணத்துப்பூச்சிகள் பூக்களைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன என்று, கதை முடிகிறது.


இந்நூலில் பூனையை நாய் ஏன் துரத்துகிறது? கொசு ஏன் கடிக்கிறது? போன்ற தலைப்புகளில்
கதைகள் உள்ளன. குழந்தைகள் மிகவும் விரும்பிப் படிப்பதற்கு ஏற்ற வகையில் இனிய எளிய சொற்களால்,
கதைகள் சிறியனவாக அமைந்துள்ளன. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.


                                  அன்பு நண்பன்,
                                            எழிலன்

Post a Comment

2 Comments