9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 2 , உயிருக்கு வேர் - சிறுவினா - வினா & விடை / 9th TAMIL - EYAL 2 - SIRUVINA - QUESTION & ANSWER

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் 

இயல் - 2 , உயிருக்கு வேர்

மதிப்பீடு - சிறுவினா

சிறுவினா

1 ) அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை - அதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.

* உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும், நீர் மிகமிக அவசியம்.

* ' நீரின்றி அமையாது உலகு" எனத் திருவள்ளுவரும், “நீரின்று அமையா யாக்கை” எனக் குடபுலவியனாரும் நீரின் தேவையை அறுதியிட்டுக் கூறியுள்ளனர்.

* நீர்நிலைகளாகிய ஏரி, குளம், குட்டை, ஆறுகளைப் பாதுகாப்பது அவசியமாகிறது.

* பயிர்வாழ்க்கைக்கும், உயிர்வாழ்க்கைக்கும் நீர் பெருந்துணையாய் இருப்பதால், அதைப்

* பாதுகாக்கவும் பராமரிக்கவும் வழிகாட்ட வேண்டும்.

* நமது அடுத்த தலைமுறைக்கும் நீர் தேவை என்பதனால், நீர்நிலைகளை மாசுபடாமல் தூய்மை செய்தும், நீர் வரும் வழிகளில் ஏற்படும் தடைகளைக் களைந்தும் பாதுகாத்தும் மக்களிடம் நீரின் இன்றியமையாமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வழிகாட்ட வேண்டும்.

****************   *************  ************

2 ) நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?

* உணவைத் தந்தவர் உயிர் தந்தவரே. 'உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே' என்பதால், உயிர் இனங்கள் வாழ மிக அவசியமான உணவை உற்பத்தி செய்ய, நிலமும் நீரும் வேண்டும்.

* மழைநீரைக் கொண்டு நிலத்தைச் செம்மைபடுத்தித் தானிய வித்துகளை இட்டு, வேளாண்மையைச் செய்தனர். நீரினால் நிலத்தைச் செம்மைப் படுத்தியதால், வேளாண்மை சிறப்புப் பெறுகிறது.

* உயிர் வாழ்க்கைக்கு உணவும், உணவிற்கு நிலமும், நிலத்திற்கு நீரும் அவசியம். ஆதலால் நீர்நிலை ஆதாரமாகிய ஏரி, குளம், குட்டைகளைக் கட்டிக் காப்பவர், குறையாத இன்பத்தோடு நிலைத்த புகழைப் பெறுவர். இதுவே குடபுலவியனார், நிலைத்த புகழைப் பெறுவதற்குக் கூறும்
வழிகளாகும்.




Post a Comment

2 Comments