9 ஆம் வகுப்பு - தமிழ் - அலகுத்தேர்வு - மதுரை - இயல் 1 , 2, 3 - மாதிரி வினாத்தாள் - நவம்பர் - 2021 / 9th TAMIL - UNIT TEST - EYAL 1, 2 , 3 - NOVEMBER - 2021

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

அலகுத்தேர்வு  ( இயல்கள் 1 , 2 , 3 )

காலம் : 1:30 மணி        மதிப்பெண்கள் : 50

வினா உருவாக்கம்

திரு.மணிமீனாட்சி சுந்தரம் ,

தமிழாசிரியர் , அ.மே.நி.பள்ளி , சருகுவலையபட்டி , மேலூர் , மதுரை

           பகுதி - 1 (  மதிப்பெண்கள் : 06 )

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1 ) தமிழ்விடு தூது ------ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.

அ ) தொடர்நிலைச்செய்யுள்

ஆ ) புதுக்கவிதை

இ ) சிற்றிலக்கியம்

ஈ ) தனிப்பாடல்

2 ) மல்லல் மூதூர் வயவேந்தே - வண்ணமிட்ட சொல்லின் பொருள் என்ன ?

அ )  மறுமை     ஆ ) பூவரசுமரம்

இ ) வளம்           ஈ ) பெரிய

3 ) பொருந்தாத இணை எது ?

அ ) எருதுகோள் - எருதுகட்டி

ஆ ) திருவாரூர்   - கரிக்கையூர்

இ ) ஆதிச்சநல்லூர் - அரிக்கமேடு

ஈ ) பட்டிமன்றம்    - பட்டிமண்டபம்

4 ) தீரா இடும்பை தருவது எது ?

அ ) ஆராயாமை , ஐயப்படுதல்

ஆ ) குணம் , குற்றம்

இ ) பெருமை , சிறுமை

ஈ ) நாடாமை , பேணாமை

பாடலைப் படித்து விடை தருக.

" வசியும் வளனும் சுரக்க ! என வாழ்த்தி 

அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கென் "

5 ) இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் 

அ ) புறநானூறு     ஆ ) மணிமேகலை

இ ) தமிழ்விடுதூது   ஈ ) பெரியபுராணம்

6 ) வசியும் வளனும் - இலக்கணக்குறிப்பு 

அ ) உம்மைத்தொகை  ஆ ) பெயரெச்சம்

ஆ ) வினைத்தொகை ஈ ) எண்ணும்மை


       பகுதி - 2 ( மதிப்பெண்கள் 12 ) 

                    பிரிவு - 1

குறுகிய விடை தருக. ( மூன்று மட்டும் )

( வினா எண் 10 ,  கட்டாய வினா ) 

7 ) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - குறிப்புத் தருக.

8 ) விடைக்கேற்ற வினா அமைக்க.

அ ) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் கால்டுவெல்.


ஆ ) திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று

9 ) ஏறுதழுவுதல் குறித்த தொல்லியல் 

சான்று கள் இரண்டு கூறுக.

10 ) ' விடல் ' என முடியும் குறளை எழுதுக.


                             பிரிவு - 2

  விடை தருக ( மூன்று மட்டும் )

11 ) பழமொழிகளை நிறைவு செய்க.

அ ) இளமையில் கல்வி --------

ஆ ) கற்றோருக்குச் சென்ற ------

12 )     மரபு இணைச்சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

அ ) நகமும் சதையும்

ஆ கண்ணும் கருத்தும்

13 ) தமிழில் மொழிபெயர்த்து எழுதுக.

அ ) Every flower is a soul blossoming in nature

ஆ ) The art of people is a true mirror to their minds.

14 ) பொருள் எழுதித் தொடர் அமைக்க.

       வாழை - வாளை


பகுதி - 3 (  மதிப்பெண்கள் : 09 ) 

சுருக்கமான விடை தருக ( மூன்று மட்டும் )

( வினா எண் :  17 கட்டாய வினா )

15 ) மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது ?

16 ) நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை ?

17 ) ' காடெல்லாம் ' எனத்துவங்கும்  பெரியபுராணப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.

18 ' படி ' என்னும் வேர்ச்சொல்லைக் கொண்டு தொடர்கள் ( செய்தித்தொடர் , கட்டளைத்தொடர் , வினாத்தொடர் ) உருவாக்குக.

                 பகுதி - 4 ( மதிப்பெண்கள் : 15 )

எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடை தருக.

19 ) உங்கள் நண்பர் பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர். எஸ்.இராமகிருஷ்ணனின் ' கால் முளைத்த கதைகள் என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.

20 ) நயம் பாராட்டுக.

கல்லும் மலையும் குதித்துவந்தேன் - பெருங்

காடும் செடியும் கடந்துவந்தேன்;

எல்லை விரிந்த சமவெளி - எங்கும்நான்

இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்;

ஏறாத மேடுகள் ஏறிவந்தேன் - பல

ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;

ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன் - மணல்

ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்.

                                                    கவிமணி

21 )  காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.



22 ) அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை 

இகழ்வார்ப் பொறுத்தல் தலை  - 

       இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.


              பகுதி - 5 ( மதிப்பெண்கள் : 08 )

விரிவான விடை தருக.

23 ) தூது அனுப்பத் தமிழே சிறந்தது என்பதற்குத் தமிழ்விடு தூது காட்டும் காரணங்கள் யாவை ?

               அல்லது

அகழாய்வின் தேவை குறித்த உனது கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

*****************   ***********   *************



Post a Comment

0 Comments