பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 7 - கவிதைப்பேழை - மெய்க்கீர்த்தி & சிலப்பதிகாரம் - வினா & விடை / 10th TAMIL - EYAL 7 - ONLINE TEST

 

பத்தாம் வகுப்பு - தமிழ்

கவிதைப்பேழை

இயல் 7 - மெய்க்கீர்த்தி & சிலப்பதிகாரம்

வினாக்களும் விடைகளும் 


1) கோப்பரகேசரி திருபுவனச்   சக்கரவர்த்தி என்ற பட்டங்கள் பெற்ற சோழன் ------

அ) இரண்டாம் இராசராச சோழன்

ஆ) பராந்தகச்சோழன்

இ) கோப்பெருஞ்சோழன்

ஈ) மனுநீதிச்சோழன்

விடை : அ ) இரண்டாம் இராசராச சோழன்

2) மெய்க்கீர்த்திகள் புலவர்களால் எழுதப்பட்டு ----- ஆல் கல்லில்   பொறிக்கப்பட்டவை.

அ) மன்னர்களால்

ஆ) அமைச்சர்களால்

இ) கல்தச்சர்களால்

 ஈ) குருமார்களால்

விடை : இ ) கல்தச்சர்களால்

3) ----- காலந்தொட்டு மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டன.

அ ) முதலாம் இராசராச சோழன்
ஆ) இரண்டாம் இராசராசன்
இ) முதலாம் குலோத்துங்கன்
ஈ) கரிகாற்சோழன்

விடை : அ ) முதலாம் இராசராசன்

4) இராசராசன் ஆட்சியில் , நாட்டில் பிணிக்கப்படுவன -----

அ) மக்கள்
ஆ) பறவைகள்
இ) யானை
 ஈ) பூனை

விடை : இ ) யானை

5) இராசராசன் ஆட்சியில்   கலக்கமடைவன ------

அ) ஓடைகள்
ஆ) ஆறுகள்
இ) கடல்
ஈ) குளங்கள்

விடை : அ ) ஓடைகள்

6) இராசராசன் ஆட்சியில் -------
மட்டுமே வடுப்படுகின்றன.

அ) மக்கள்
ஆ) மாங்காய்கள்
இ) தேங்காய்கள்
ஈ) விலங்குகள்

விடை : ஆ ) மாங்காய்கள்

7) ' தன்நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்' - என்னும் மெய்க்கீர்த்தித் தொடர்
உணர்த்தும் பொருள் -----

அ) மேம்பட்ட நிருவாகத்திறன்
பெற்றவர்
ஆ) மிகுந்த செல்வம் உடையவர்
இ) பண்பட்ட மனிதநேயம்
கொண்டவர்
ஈ) நெறியோடு நின்று காவல்
காப்பவர்

விடை : ஈ ) நெறியோடு நின்று காவல் காப்பவர்

8) மாமலரே கடியவாயின - இதில் ' மாமலர்' என்பதன் இலக்கணக்குறிப்பு -----

அ) உருவகம்
ஆ) உவமைத்தொகை
இ) உரிச்சொல் தொடர்
ஈ) பண்புத்தொகை

விடை : இ ) உரிச்சொல் தொடர்

9) மெய்க்கீர்த்தி -இதில் ' கீர்த்தி
என்ற சொல்லின் பொருள் -----

அ) அழகு
ஆ) பெருமை
இ) புகழ்
ஈ) செல்வம்

விடை : இ ) புகழ்

10) சிலப்பதிகாரத்தை.இயற்றியவர் -----

அ) கவுந்தியடிகள்
ஆ) இளங்கோவடிகள்
இ) மறைமலையடிகள்
ஈ) இராமலிங்க அடிகள்

விடை : ஆ ) இளங்கோவடிகள்

11) சிலப்பதிகாரத்தில் உள்ள
காண்டங்களின் எண்ணிக்கை ------

அ ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து

விடை : ஆ ) மூன்று

12) இரட்டைக் காப்பியங்கள் என
அழைக்கப்படுபவை சிலப்பதிகாரமும் ---- ஆகும்.

அ) சீவக சிந்தாமணி
ஆ) மணிமேகலை
இ) வளையாபதி
ஈ) குண்டலகேசி

விடை : ஆ ) மணிமேகலை

13) இளங்கோவடிகளிடம் , ' அடிகள் நீரே அருளுக ' என்று கூறியவர் ------

அ) கம்பர்
ஆ) ஓட்டக்கூத்தர்
இ) திருத்தக்கத்தேவர்
ஈ) சீத்தலைச்சாத்தனார்

விடை : ஈ ) சீத்தலைச்சாத்தனார்

14) சிலப்பதிகாரத்தில் , ' இந்திரவிழா ஊரெடுத்த காதை அமைந்துள்ள காண்டம் -----

 அ) வஞ்சிக்காண்டம்
ஆ) புகார்க்காண்டம்
இ) மதுரைக்காண்டம்
ஈ) விலாதத்துக்காண்டம்

விடை : ஆ ) புகார்க்காண்டம்

15 ) இளங்கோவடிகள் -------- மரபைச் சேர்ந்தவர் 

அ) சேர
ஆ) சோழ
இ) பாண்டிய
ஈ) பல்லவ

விடை : அ ) சேர

16) " நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் " - என்று பாடியவர் -
அ) திருவள்ளுவர்
ஆ) ஔவையார்
இ) பாரதியார்
ஈ) பாரதிதாசன்

விடை : இ ) பாரதியார்

17 ) சிலப்பதிகாரம் கூறும் வணிக
நகரம் -----

 அ) பூம்புகார்
ஆ) மருவூர்ப்பாக்கம்
இ) பட்டினப்பாக்கம்
ஈ) கீழ்ப்பாக்கம்

விடை : ஆ ) மருவூர்ப்பாக்கம்

18) ' ஓசுநர்' என்பதன் பொருள் -----

அ ) அப்பம் சுடுவோர்
ஆ) கள் விற்போர்
இ ) எண்ணெய் விற்போர்
ஈ) ஓவியர்

விடை : இ ) எண்ணெய் விற்போர்

19 ) ' துகிர்' என்பதன் பொருள் -----

அ ) முத்து
ஆ) பவளம்
இ) தங்கம்
ஈ) வெள்ளி

விடை : ஆ) பவளம்

20) வண்ணமும் சுண்ணமும் -
இலக்கணக் குறிப்புத் தருக.

அ) உம்மைத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) பண்புத்தொகை
ஈ) எண்ணும்மை

விடை : எண்ணும்மை

****************   **************   ***********

பசுமைக்கவிஞர்.மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை.

கருத்துகளைப் பகிர - 97861 41410

***************    **************      ******









Post a Comment

2 Comments