பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 4 , நான்காம் தமிழ் - பாடப்பகுதி சிறுவினா - வினா & விடை / 10th TAMIL - EYAL - 4 , QUESTION & ANSWER

 பத்தாம் வகுப்பு - தமிழ் 

இயல் - 4  , நான்காம் தமிழ் 

சிறுவினா

1. 'மாளாத காதல் நோயாளன் போல்' என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

"மாளாத காதல் நோயாளன் போல்” என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தி :

(i) “மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார்.

(ii) அதுபோன்று, வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே! “நீ உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன்” என்று குலசேகராழ்வார். தன்னுடைய மனநிலையை வெளிப்படுத்துகிறார்.

2. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனைமேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை   முன்வைத்து எழுதுக.

இன்றைய அறிவியல்கண்டுபிடிப்புகள் மனிதனைமேம்படுத்துகின்றன. அன்றாடம்நம்செயல்பாடுகளில்அறிவியலின் பயன்பாடு நீக்கமற நிறைந்துள்ளது. மனிதனின் அன்றாடத் தேவையான நீர், உணவு, உடை எல்லாவற்றிலும் அறிவியலின் வளர்ச்சி பயன்படுகிறது. நாம் பயன்படுத்தும் நீர் குளிர்நீர், வெந்நீர் என இருவகையில் உள்ளது. அவை குறையுடையவையாயின் அவற்றைச் செப்பம் செய்யும் முறைகளுக்கு   விஞ்ஞானம் தேவைப்படுகிறது.

நாம் உண்ணும் உணவு சத்து மிகுந்ததாக உள்ளதா கலப்பின்றி உள்ளதா வயதுக்கும் தட்ப வெப்ப நிலைக்கும் பொருந்துவதாக உள்ளதா என அறிவதற்கு அறிவியல் சாதனங்கள் தேவைப்படுகின்றன.

விடியலில் எழுந்ததது முதல் இரவு தூங்கும் வரை நாம் அறிவியலால் உருவான மின்சாதனங்களைப்   பயன்படுத்துகிறோம். அறுவைசிகிச்சை வரை எல்லாவற்றிற்கும் அறிவியல் கண்டுபிடிப்புகள் பயன்படுகின்றன. பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் எங்கும் நிறைந்த இறைவனைப் போல் அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகெங்கும் நிறைந்து மனிதனை மேம்படுத்துகின்றன.

3. மனிதர்களின் மூளையைப் போன்றது, செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியின் மென்பொருள்.மனிதனைப் போலவே பேச, எழுத, சிந்திக்க இத்தொழில்நுட்பம் மேம்படுத்தப்படுகிறது. இதனால்   மனிதகுலத்துக்கு ஏற்படுகிற நன்மைகளைப் பற்றி அறிவியல் இதழ் ஒன்றுக்கு எதிர்காலத் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் எழுதுக.

எதிர்காலத் தொழில்நுட்பம் :

மனிதர்களுக்கு மூளையைப் போன்றது. செயற்கை நுண்ணறிவுகொண்ட கணினிக்கு மென்பொருள். மனிதனைப் போலவே பேச, எழுத, சிந்திக்க இத்தொழில்நுட்பம் மேம்படுத்தப்படுகிறது.

மனித இனத்தைத் தீங்குகளிலிருந்து காப்பாற்றவும் உடல்நலத்தைப் பேணவும் கொடிய நோய்களைத்   தொடக்க நிலையிலேயே கண்டறியவும் மருத்துவம் செய்யும் முறைகளைப் பட்டறிவு மிக்க மருத்துவரைப் போலப் பரிந்துரை செய்யவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.

எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவும் நான்காவது தொழிற்புரட்சியின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் அறிவுமே நம்மை வளப்படுத்த உதவும்.
நாம் பயணிக்கும் ஊர்திகளைச் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு இயக்க வேண்டியிருக்கும்.
இத்தகைய ஊர்திகள் ஏற்படுத்தும் விபத்துகள் குறையும். போக்குவரத்து நெரிசல் இருக்காது. அதன்மூலம் பயண நேரம் குறையும் எரிபொருள் மிச்சப்படும்.
இத்தகைய மென்பொருள்கள் கவிதைகள், கதைகள், விதவிதமான எழுத்து நடைகள் போன்றவற்றைக்
கற்றுக்கொண்டு மனிதர்களுடன் போட்டியிட்டாலும் வியப்பதற்கில்லை. இப்போது உலகில் இங்கொன்றும்
அங்கொன்றுமாகப் பயன்பாட்டில் இருக்கின்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில்
உலகின் ஒவ்வொரு துறையிலும் அளவிடற்கரிய முன்னேற்றத்தைத் தரும்.


4 ) நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது; தந்தை என்னிடம், "இலச்சுமி கூப்பிடுகிறாள். போய்ப் பார்” என்றார்.
"இதோ சென்றுவிட்டேன்” என்றவாறே அங்குச் சென்றேன். துள்ளிய குட்டியைத் தடவிக் கொடுத்து,
"என்னடா விளையாட வேண்டுமா?” என்று கேட்டு அவனை அவிழ்த்துவிட்டேன். என் தங்கை அங்கே
வந்தாள். அவளிடம், "நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன். அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி
தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.
இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.

(i) இலட்சுமி கூப்பிடுகிறாள்
திணைவழுவமைதி

(ii) இதோ சென்றுவிட்டேன்
- கால வழுவமைதி

(iii) நீயும் இவனும் விளையாடுங்கள் - இட வழுவமைதி

(iv) என்னடா விளையாட வேண்டுமா? திணை வழுவமைதி




Post a Comment

1 Comments