12 ஆம் வகுப்பு - பொதுத்தமிழ்
இயல் 5 - நாடென்ப நாட்டின் தலை
நிகழ்நிலை சான்றிதழ்த் தேர்வு - 5
வினா உருவாக்கம்
திருமதி.இரா.மனோன்மணி ,
முதுகலைத் தமிழாசிரியை ,
செக்காபட்டி, திண்டுக்கல்.
பசுமைக்கவிஞர். மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
****************** ************ *********
1) உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் -
இத்தொடர் உணர்த்தும் பண்பு --
அ) நேர்மறை
ஆ) எதிர்மறை
இ) முரண்
ஈ) இவை அனைத்தும்
விடை : இ ) முரண்
2) ஆன்மநேய , சமய ஒருமைப்பாட்டையும், ஒளி வழிபாட்டையும் உருவாக்கி வளர்த்தவர்
அ ) இராமலிங்க அடிகள்
ஆ) திருஞானசம்பந்தர்
இ) பாரதியார்
ஈ) சுந்தரர்
விடை : அ ) இராமலிங்க அடிகள்
3) திருவருட்பாவிலுள்ள திருமுறைகள்
அ ) இரண்டு
ஆ) ஐந்து
இ) ஆறு
ஈ) எட்டு
விடை : இ ) ஆறு
4)------ அருளை வேண்டி தெய்வ
மணிமாலை பாடப்பட்டது.
அ ) அழகர்கோவில் அழகரின்
ஆ) சுவாமிமலை முருகனின்
இ) கந்தகோட்டத்து முருகப்பெருமானின்
ஈ) பழனிமலை முருகப்பெருமானின்
விடை : இ ) கந்தகோட்டத்து முருகப்பெருமான்
5) மனுமுறை கண்ட வாசகம் ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய
உரைநடை நூல்களை எழுதியவர் -----
அ) திருஞானசம்பந்தர்
ஆ) அப்பர்
இ ) மாணிக்கவாசகர்
ஈ) இராமலிங்க அடிகள்
விடை : ஈ ) இராமலிங்க அடிகள்
6) ' மலரடி' - இலக்கணக்குறிப்பு
அ) உவமைத்தொகை
ஆ) உம்மைத்தொகை
இ) எண்ணும்மை
ஈ) பண்புத்தொகை
விடை : அ ) உவமைத்தொகை
7) நினைக்கின்ற - புணர்ச்சி விதி
அ) நினை + க் + கின்று + அ
ஆ) நினை + க் + க் + இன்ற
இ) நினை + க் + இன்ற
ஈ) நினைக் + கின்ற
விடை : அ ) நினை + க் + கின்று + அ
8) சைவத்திருமறைகளின் எண்ணிக்கை
அ) 6
ஆ) 10
இ) 12
ஈ) 14
விடை : இ ) 12
9) பன்னிரு திருமறைகளைத்
தொகுத்தவர் -----
அ) இராஜராஜ சோழன்
ஆ) நாதமுனிகள்
இ) நம்பியாண்டார் நம்பி
ஈ) கூடலூர்க்கிழார்
விடை : இ ) நம்பியாண்டார் நம்பி
10) மடநல்லார் - எனப்படுவோர்
அ) இளமையான பெண்கள்
ஆ) ஆண்கள்
இ) குழந்தை
ஈ) முதுபெண்கள்
விடை : அ ) இளமையான பெண்கள்
11) திருவிழாக்கள் நிறைந்த
வீதிகளையுடைய ஊர் -----
அ) திருமயிலை
ஆ) திருவேங்கடம்
இ) திருவொற்றியூர்
ஈ) திருப்புவனம்
விடை : அ ) திருமயிலை
12 ) ஒன்று முதல் ஏழு வரையுள்ள
திருமுறைகளுக்கு ----- என்று பெயர் .
அ) தேவாரம்
ஆ) திருவாசகம்
இ) திருவருட்பா
ஈ) தெய்வமணிமாலை
விடை : அ ) தேவாரம்
13) ' ஒலிவிழா' - இலக்கணக் குறிப்பு -----
அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) முற்றும்மை
ஈ) உம்மைத்தொகை
விடை : ஆ ) வினைத்தொகை
14 ) ' மாமயிலை' - இலக்கணக்,குறிப்பு
அ ) பெயரெச்சம்
ஆ) வினையெச்சம்
இ) உரிச்சொற்றொடர்
ஈ) பண்புப்பெயர்
விடை : இ ) உரிச்சொற்றொடர்
15) பூம்பாவாய் - புணர்ச்சி விதி
அ) பூப்பெயர் முன் இனமென்மையும்
தோன்றும்
ஆ) ஈறுபோதல்
இ) இனமிகல்
ஈ) ஆதிநீடல்
விடை : அ ) பூப்பெயர் முன் இனமென்மையும்
16)' ஒரு குட்டித் தீவின் வரைபடம்
' என்ற சிறுகதைத் தொகுப்பின்
ஆசிரியர் -----
அ) தோப்பில் முகமது மீரான்
ஆ) இராமலிங்க அடிகள்
இ) பாலச்சந்திரன்
ஈ) நகுலன்
விடை : அ ) தோப்பில் முகமது மீரான்
17 ) 1997 ல் சாகித்ய அகாதமி
விருது பெற்ற தோப்பில் முகமது
மீரான் அவர்களின் புதினம் ------
அ) ஒரு குட்டித்தீவின் வரைபடம்
ஆ) சாய்வு நாற்காலி
இ) துறைமுகம்
ஈ) கூனன் தோப்பு
விடை : ஆ ) சாய்வு நாற்காலி
18 ) தம்முடைய வட்டார எழுத்திற்கு கரிசல் இலக்கியம்' என்று பெயரிட்டவர்
அ புதுமைப்பித்தன்
ஆ) ஜெயகாந்தன்
இ) தி.ஜானகிராமன்
ஈ) கி.இராஜநாராயணன்
விடை : ஈ ) கி.இராஜநாராயணன்
19 ) தற்போது கிராமங்கள் ----- ஐ
இழந்து வருகிறது.
அ ) முதலீட்டை
ஆ) வருவாயை
இ) முகவரியை
ஈ) வியாபாரத்தை
விடை : இ ) முகவரியை
20) 'தலைக்குளம் ' கதையில்
இயற்கை நேசன் என்று
விவரிக்கப்பட்டவர் --
அ) கதாசிரியர்
ஆ) ஓய்வு பெற்ற நீதிபதி
இ) மூத்த மகன்
ஈ ) வாப்பா
விடை : ஆ) ஓய்வு பெற்ற நீதிபதி
0 Comments