12 ஆம் வகுப்பு - தமிழ் - விழுப்புரம் மாவட்டம் - நவம்பர் 2021 - அலகுத்தேர்வு வினாத்தாள் / 12th TAMIL - UNIT TEST - NOVEMBER 2021 - VILUPPURAM DIST.

 


பள்ளிக் கல்வித்துறை 

விழுப்புரம் மாவட்டம்

அலகுத் தேர்வு 1 - நவம்பர் - 2021

வகுப்பு - 12 

பாடம் : தமிழ்         மதிப்பெண் - 50

I .  அனைத்துவினாக்களுக்கும் விடை தருக.                                         8 × 1 = 8


1 ) பேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தேர்க

அ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது
ஆ வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது
இ அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்
ஈ) மயில்கள் விறலியரைப்போல் ஆடுகின்றன


2) பொருத்துக

அ) ஒரு கிராமத்து நதி-1) அய்யப்ப மாதவன்
ஆ ) ஆதிறனாய்வுக்கலை - 2) பாலசுப்பிரமணியம்

இ) உய்யும் வழி - 3 ) தி.சு. நடராஜன்

ஈ) நீர்வெளி - பரலி சு. நெல்லையப்பர்

அ) 4 3 2 1 ஆ ) 1 4 2 3 இ ) 2 4 1 3 ஈ ) 2 3 4 1


3) நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது என்று அய்யப்பமாதவன் குறிப்பிடுவது

அ) மழைமேகங்கள் 

ஆ ) மழைத்துளிகள் 

இ ) நீர்நிலைகள் 

ஈ) சூரிய ஒளிக்கதிர்

4) பொருந்தாத இணையைத் தேர்க.

அ) ஒவ்வொரு - ஒருமை
ஆ சொல்+துணை - சொற்றுணை
இ வியர்வை வெள்ளம் - வினைத்தொகை
ஈ) செம்பரிதி - ஈறுபோதல்

5 )  'வந்து' - சரியான உறுப்பிலக்கணம் பிரிப்பு முறை


அ) வா+த்(நி+த்+உ 

ஆவா ந்+த்+உ 

இவாந்(த்)+த்+உ .

ஈ)வா(வ)+த்(ந்)+த்-உ


6) கருத்து 1. இயல்பு வழக்கில் தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே
மரபு

கருத்து 2 . தொடரமைப்பு, சங்கப்பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.

அ) இரண்டு கருத்தும் சரி 

ஆ) கருத்து சரி 2 தவறு

இ) இரண்டு கருத்தும் தவறு 

ஈ) கருத்து தவறு 2சரி .


7) யார்? எது? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து உணர்த்தும் திணைகள்

அ) அஃறிணை உயர்திணை 

ஆ) உயர்திணை, அஃறிணை


இ) விரவுத்திணை, அஃறிணை

 ஈ) விரவுத்திணை உயர்திணை

8 ) தண்டியலங்காரம் எந்த இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்டது.

அ) வீரசோழியம் 

ஆ முத்துவிரியம் 

இ ) காவியதர்சம் 

ஈ) சூரியோதயம்

II.அ) எவையேனும் மூன்றனுக்கு விடை தருக,

                                                      3 x 2  - 6

9) கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டுகிறார் ?

10) ஒலிப்பின்னல் என்றால் என்ன?

11)"நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரம் ஆகிறது " விளக்குக.

12) அணி இலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல்கள் யாவை?

III ) எவையேனும் மூன்றனுக்கு விடை தருக                                               3 x 2- 6

13) உளப்பாட்டுத் தன்மை பன்மை என்றால் என்ன?

14) இரண்டனுக்குப் புணர்ச்சி விதி கூறுக

அ) சுவரெங்கும் 

ஆ வெங்கதிர் 

இ) உன்னையல்லால்

15) "தாமரை இலை நீர்போல" -  உவமைத்தொடரைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.

16) "விலை, விளை விழை" - மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

IV .அ) எவையேனும் மூன்றனுக்கு விடை தருக

                                                           3 x 4 -12

17) "செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப்பூக்காடாம்
வானமெல்லாம் - தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக

18) கவிதைத்தனம் அல்லது இலக்கியத்தனம் குறித்துத் தி.சு, நடராஜன் உரைக்கும் கருத்துகள்
யாவை?

19) பிறகொருநாள் கோடை " கவிதை வழியாக அய்யப்ப மாதவன் கூறும் கருத்துகள் யாவை?


20) பொருள் வேற்றுமை அணியைச்சான்றுடன்விளக்குக.


ஆ எவையேனும் இரண்டனுக்கு விடை தருக.                                            2 × 4 = 8

 
21) தமிழாக்கம் தருக.

1) Learning is a treasure that will follow its owner.

2) A new language is a new life.

3) Knowledge of languages is the doorway to wisdomi.

4 The limits of my language are the limits of my world.

22) கீழ்வரும் பாடலைப் படித்துணர்ந்து மையக்கருத்தோடு ஏற்புடைய நயங்கள் நான்கினை எழுதுக.

வெட்டி யிடிக்குது மின்னல் - கடல்
வீரத்திரைகொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம் கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட்டட்டா- என்று
தாளங்கள் கொட்டி கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய- மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!

                                                   - பாரதியார்

23) மழை " அல்லது "தமிழ்"- என்னும் தலைப்பில் கவிதை எழுதுக

IV) ஏதேனும் ஒன்றனுக்கு விடை தருக
                                                          1 x 6 = 6


24) பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று மற்றும்
சமூகப்பற்றினை விவரிக்க.

25) கவிதையைக்கட்டமைக்கும் நடையியல் கூறுகளைச்சான்றுடன் விளக்குக.


1) அடிபிறழாமல் செய்யுள் வடிவில் எழுதுக.                              1 X 4 - 4


26. "ஓங்கலிடை வந்து என்னும் தண்டியலங்கார மேற்கோள் பாடல்.





Greentamil.in

***************    ****************   **********

6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களுக்கான வினாத்தாள்கள் , விடைக்குறிப்புகள் , தினம் ஒரு ஆன்லைன் தேர்வு எழுத விரும்புவோர் தங்கள் பெயர் , வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

***************   ***********   ************

Post a Comment

0 Comments