10 ஆம் வகுப்பு - தமிழ் - அலகுத்தேர்வு - 2 , நவம்பர் - 2021 , மாதிரி வினாத்தாள் ( இயல் 4 , 5 , 6 , 7 ) / 10th TAMIL - UNIT TEST 2 - NOVEMBER 2021 - EYAL 4 , 5 , 6 , 7 )

 

பத்தாம் வகுப்பு - தமிழ்

அலகுத் தேர்வு ( இயல்கள் 4 , 5 , 6 , 7 ) 

மாதிரி வினாத்தாள் - நவம்பர் - 2021

காலம் : 1:30 மணி      மதிப்பெண்கள் : 50

வினா உருவாக்கம்

திரு.மணிமீனாட்சி சுந்தரம் ,

தமிழாசிரியர் , அ.மே.நி.பள்ளி , சருகுவலையபட்டி , மேலூர் , மதுரை


                 பகுதி - 1         மதிப்பெண்கள் - 6

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1 ) ' உனதருளே பார்ப்பன் அடியனே ' - யாரிடம் யார் கூறியது ?

அ ) குலசேகர ஆழ்வாரிடம் இறைவன்

ஆ ) இறைவனிடம் குலசேகர ஆழ்வார்

இ ) மருத்துவரிடம் நோயாளி

ஈ ) நோயாளியிடம் மருத்துவர்

2 ) கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன ?

அ ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்

ஆ ) ஊரில் விளைச்சல் இல்லாததால்

இ ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்

ஈ ) அங்கு வறுமை இல்லாததால்

3 ) எழுவாய் , பயனிலைகளை வரிசைப்படி நிறுத்திப் பொருள் கொள்ளும் முறை எது ?

அ ) ஆற்றுநீர்ப் பொருள்கோள்

ஆ ) முறைநிரல்நிரைப் பொருள்கோள்

இ ) எதிர்நிரல் நிரைப் பொருள்கோள்

ஈ ) கொண்டு கூட்டுப்பொருள்கோள்

4 ) தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி.கருதியது ------

அ ) திருக்குறள்

ஆ ) புறநானூறு

இ ) கம்பராமாயணம்

ஈ ) சிலப்பதிகாரம்

பாடலைப்படித்து படித்து விடை தருக.

" வெய்யோன் ஒளி தன்மேனியில் விரிசோதியில் மறையப்

பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான் "

5 ) இவ்வடிகளில் வெய்யோன் என்பது --------ஐக் குறிக்கிறது.

அ ) இராமன் ஆ ) சூரியன்

இ ) இலக்குவன் 

ஈ ) இராமனும் சூரியனும்

6 ) இவ்வடிகளில்' இடையாளொடும் இளையானொடும் ' என்பது யாரைக் குறிக்கிறது ?

அ ) இராமனும் சீதையும்

ஆ ) இலக்குவனும் சீதையும்

இ ) சீதையும் இலக்குவனும்

ஈ ) சீதையும் இராமனும்


              பகுதி - 2

மதிப்பெண்கள் - 12

           பிரிவு - 1

குறுகிய விடை தருக. ( மூன்று மட்டும் )

( வினா எண் 10 , கட்டாய வினா ) 

7 ) செய்குத்தம்பி பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.

8 ) விடைக்கேற்ற வினா அமைக்க.

அ ) பெருமாள் திருமொழியில் 105 பாடல்கள் உள்ளன.

ஆ ) கம்பர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர்.

9 ) வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி.என்பதற்குச் சான்று தருக.

10 ) ' செயற்கை ' எனத்தொடங்கும் குறளை எழுதுக.

                     பிரிவு - 2

விடை தருக ( மூன்று மட்டும் ) 

11 ) கூத்துக் கலைஞர் பாடத்தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர். ( கலவைத் தொடராக மாற்றுக )

12 ) கலைச்சொற்கள் தருக.

 அ ) Myth    ஆ ) Intellectual

13 ) கொடுக்கப்பட்டுள்ள இருசொற்களைப் பயன்படுத்தித் தொடர் அமைக்க.

அ ) இயற்கை -  செயற்கை

ஆ ) விதி  - வீதி 

14 ) கீழ்க்காணும் ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.

அ ) கோயம்புத்தூர் 

ஆ ) திருநெல்வேலி

                        பகுதி - 3

( மதிப்பெண்கள் : 9 ) 

சுருக்கமான விடை தருக. ( மூன்று மட்டும் )

( வினா எண் : 17 கட்டாய வினா )

15 ) தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் ' - இடம்சுட்டிப் பொருள் விளக்குக.

16 ) " மாளாத காதல் நோயாளன் போல் " என்னும் தொடரில் உவமை சுட்டும் பொருளை எழுதுக.

17 ) ' அருளைப் பெருக்கி ' எனத் துவங்கும் நீதிவெண்பா பாடலை அடிபிறழாமல் எழுதுக.

18 ) பெரும்பொழுதுகள் , சிறுபொழுதுகள் - வகைப்படுத்துக.


                      பகுதி - 4

( மதிப்பெண்கள் : 15 ) 

எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடை தருக.

19 ) நீவிர் படித்த நூல் ஒன்றுக்கு மதிப்புரை எழுதுக.

20 ) காட்சியைக்கண்டு கவினுற எழுதுக.



21 ) நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் ' உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் ' என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.

22 ) நூலக உறுப்பினர் படிவம் நிரப்புக.



      

             பகுதி - 5

 ( மதிப்பெண்கள் : 8 ) 

23 ) ' பெண் ஆளுமை மிக்கவள் ' என்பதை மங்கையராயப் பிறப்பதற்கே என்னும் விரிவானப் பகுதியைக் கொண்டு நிறுவுக.

                 ( அல்லது ) 

உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

**************   **************   *************


Post a Comment

2 Comments