11 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - என்னுயிர் என்பேன் - இயங்கலைத் தேர்வு - வினா & விடை / 11th TAMIL - EYAL -1 , ONLINE CERTIFICATE TEST

 

பொதுத்தமிழ் - 

மேல்நிலை முதலாம் ஆண்டு

இயங்கலைத் தேர்வு-இயல் 1-

என்னுயிர் என்பேன்.

வினா உருவாக்கம் - 

அ.அன்பு தவமணி ,

முதுகலைத் தமிழாசிரியர் , 

வெள்ளலூர் , மதுரை.

தினமும் இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் தேர்வினை எழுதி சான்றிதழ் பெற விரும்புவோர் தங்களது பெயர் , வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பிப் பெறலாம்.

பசுமைக்கவிஞர் மு.மகேந்திர பாபு,
தமிழாசிரியர் இளமனூர், மதுரை.(
பைந்தமிழ் வலையொளி - Green Tamil  -
You Tube - 97861 41410 )


1) ' பேச்சு மொழியும் கவிதை மொழியும் ' என்னும் உரைநடையை எழுதிய இந்திரன் அவர்களின் இயற்பெயர் -----

அ ) சு.வில்வரத்தினம்

ஆ ) ராசேந்திரன்

இ ) அ.முத்துலிங்கம்

ஈ ) வ.ஐ.ச.ஜெயபாலன்

விடை : ஆ ) ராசேந்திரன்

2) ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய ஸ்டெஃபான் மல்லார்மே எந்த நாட்டைச் சார்ந்தவர் ?

அ ) பிரான்சு

ஆ ) இங்கிலாந்து

இ ) அமெரிக்கா

ஈ ) பிரிட்டன்

விடை : அ ) பிரான்சு

3) சிலி நாட்டில் பிறந்த பாப்லோ
நெருடா எந்த ஆண்டு
இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார்?

அ ) 1969

ஆ ) 1970

இ ) 1971

ஈ ) 1972

விடை : இ ) 1971

4) மனித இனத்தின் ஆதி அடையாளம் எது?

அ ) தொல்காப்பியம்

ஆ ) இதிகாசம்

இ ) புராணம்

ஈ ) மொழி

விடை :  ஈ ) மொழி 

5) சு.வில்வரத்தினம் இலங்கை
யாழ்ப்பாணத்தில் எந்த ஊரில்
பிறந்தார்?

அ ) புங்குடுதீவு

ஆ ) மாலத்தீவு

இ  ) லட்சத்தீவு

ஈ ) கொழும்புத்தீவு

விடை : அ ) புங்குடுதீவு

6) தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை'வேரில்லாத மரம் ; கூடு இல்லாத பறவை' என்று கூறியவர் -----

அ ) பாப்லோ நெருடா

ஆ ) ஸ்டெஃபான் மல்லார்மே

இ ) ரசூல் கம்சதேவ்

ஈ ) வால்ட் விட்மன்

விடை : இ ) ரசூல் கம்சதேவ்

7) தமிழில் கிடைத்த முதல் இலக்கண நூல் -------

அ ) நன்னூல்

ஆ ) நேமிநாதம்

இ ) முத்துவீரியம்

ஈ ) தொல்காப்பியம்

விடை : ஈ ) தொல்காப்பியம்

8) பாயிரம் இல்லது ---- அன்றே

அ ) சொல்

ஆ ) பனுவல்

இ ) மொழி

ஈ ) பொருள்

விடை : ஆ ) பனுவல்

9) நன்னூல் எத்தனை அதிகாரங்களாகப்
பிரிக்கப்பட்டுள்ளது?

அ ) 2

ஆ ) 3

இ ) 4

ஈ ) 5

விடை : அ ) 2

10) திருக்குறளையும், திருவாசகத்தையும்
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்

அ ) ஜி.யு.போப்

ஆ ) வீரமாமுனிவர்

இ ) பாரதியார்

ஈ ) பாரதிதாசன்

விடை : அ ) ஜி.யு.போப்

11) ஆறாம் திணை என்பது ------

அ ) மலையும் மலை சார்ந்த நிலமும்

ஆ ) காடும் காடு சார்ந்த நிலமும்

இ ) வயலும் வயல் சார்ந்த நிலமும்

ஈ ) பனியும் பனி சார்ந்த நிலமும்

விடை :  ஈ ) பனியும் பனி சார்ந்த நிலமும்

12) கீழ்க்கண்டவற்றுள் தமிழ்ச்சொல் -----

அ ) டமாரம்

ஆ ) ராக்கி

இ ) கோதை

ஈ ) டப்பா

விடை : இ ) கோதை

13) மொழி முதல் எழுத்துக்கள்
எத்தனை?

அ ) 22

ஆ ) 24

இ ) 26

ஈ  ) 28

விடை : அ ) 22

14) சொல்லின் முதலிலும் இறுதியிலும் வராத சார்பெழுத்து எது?

அ ) உயிர்மெய்

ஆ ) குற்றியலுகரம்

இ ) குற்றியலிகரம்

ஈ ) ஆய்தம்

விடை : ஈ ) ஆய்தம்

15) பவணந்தி முனிவரின் காலம்
நூற்றாண்டு

அ ) 13

ஆ ) 14

இ ) 15

ஈ) 16

விடை : அ ) 13 


16) மாநகர் இலக்கணக் குறிப்பு -----

அ ) தொழிற்பெயர்

ஆ ) வினையாலணையும் பெயர்

இ ) முற்றும்மை

ஈ ) உரிச்சொற்றொடர்

விடை : ஈ ) உரிச்சொற்றொடர்

17 ) யார் கேட்டுக்கொண்டதால்
பவணந்தி முனிவர் நன்னூலை
இயற்றினார்?

அ ) பாண்டியன் நெடுஞ்செழியன்

ஆ ) மாறன் வழுதி

இ ) உக்கிரப்பெருவழுதி

ஈ)  சீயகங்கன்

விடை : ஈ ) சீயகங்கன்

18) பொதுச் சிறப்பு = பொது + சிறப்பு எவ்வாறு புணரும்?

அ ) இயல்பினும் விதியினும் நின்ற
உயிர்முன் கசதப மிகும்

ஆ ) உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது
இயல்பே

இ ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு
ஓடும்

ஈ ) ஈறுபோதல்

விடை : அ ) இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்

19 ) உலகில் வாழும் புலம்பெயர் 
மக்களில் எந்த நாட்டைச்
சேர்ந்தவர்கள் அதிகம்?

அ ) ஆஸ்திரேலியா

ஆ ) இங்கிலாந்து

இ ) மாலத்தீவு

ஈ ) இலங்கை

விடை : ஈ ) இலங்கை 

20) பவணந்தி முனிவர் எந்தசமயத்தைச் சார்ந்தவர் ?

அ ) சைவம்

ஆ ) சமணம்

இ ) பௌத்தம்

ஈ ) வைணவம்

விடை : ஆ ) சமணம்

**************   **********   ************

Post a Comment

2 Comments