11 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத் தேர்வு - பகுதி 4 - வினாக்களும் விடைகளும் / 11th TAMIL - PUTHTHAAKKAP PAYIRCHIK KATTAKAM - ONLINE TEST - PART - 5 ,QUESTION & ANSWER

 

11 ஆம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

இயங்கலைச் சான்றிதழ்த் தேர்வு - 4

வினாக்களும் விடைகளும் 

****************    **************   ***********

1 ) பா வகைகள் , பாக்களின் ஓசைகள் , பா இயற்றுவதற்கான விதிமுறைகள் குறித்துக் கூறும் நூல்

அ) யாப்பருங்கலக்காரிகை

ஆ ) புறப்பொருள் வெண்பா மாலை

இ) தண்டியலங்காரம்

ஈ) மாறனலங்காரம்

விடை : அ) யாப்பருங்கலக்காரிகை

2) புலவர்க்கு 'வன்பா ' என்று
அழைக்கப்படுவது

அ) கலிப்பா

ஆ) வஞ்சிப்பா

இ) வெண்பா

ஈ) ஆசிரியப்பா

விடை : இ) வெண்பா

3) பா எத்தனை வகைப்படும் ?

அ) 2

ஆ) 6

இ) 7

ஈ) 4

விடை : ஈ) 4

4) ஆசிரியப்பாவின் ஓசை

அ ) அகவல்

ஆ) செப்பல்

இ) துள்ளல்

ஈ) தூங்கல்

விடை : அ ) அகவல்

5) 5 அடி முதல் 12 அடி வரை பாடப்படும்
வெண்பா

அ) கலி

ஆ) பஃறொடை

இ) சிந்தியல்

ஈ) குறள்

விடை : ஆ) பஃறொடை

6 ) ஏகாரத்தில் (இறுதி அடியின் இறுதி
எழுத்து) முடியும் பா

அ) வெண்பா

ஆ) கலிப்பா

இ) ஆசிரியப்பா

ஈ) வஞ்சிப்பா

விடை : இ) ஆசிரியப்பா

7) புறப்பொருள் வெண்பா மாலை கூறும்
புறத்திணை எண்ணிக்கை

அ) 5

ஆ) 7

இ) 12

ஈ ) 2

விடை : இ) 12

8) ஒருவருடைய புகழ், வலிமை , கொடை,
அருள் போன்ற நல்லியல்புகளைச்
சிறப்பித்துக் கூறும் திணை

அ) பொதுவியல்

ஆ) பாடாண்

இ) குறிஞ்சி

ஈ) நொச்சி

விடை : ஆ) பாடாண்

9) முதற் பொருள் என்பது

அ ) நிலமும் பொழுதும்

ஆ) தெய்வமும் தொழிலும்

இ) உணவும் இருப்பிடமும்

ஈ) பறவையும் விலங்கும்

விடை : அ ) நிலமும் பொழுதும்

10) "அம்ம வாழி தோழி நம்மூர்ப் பிரிந்தோர் புணர்ப்போர் இருந்தனர்" - இப்பாடல் இடம்பெறும் திணை

அ) முல்லை

ஆ) குறிஞ்சி

இ) மருதம்

ஈ) பாலை

விடை : ஆ) குறிஞ்சி

11) அறம் , பொருள் , இன்பம் என்னும்
முப்பொருளினது உறுதி தரும்
தன்மைகளைக் கூறும் துறை

அ) பரிசில்

ஆ) செவியறிவுறூஉ

இ ) செந்துறை பாடாண்பாட்டு

ஈ) முதுமொழிக்காஞ்சி

விடை : ஈ) முதுமொழிக்காஞ்சி

12 ) அலங்காரம் எனும் சொல்

அ) தமிழ் மொழி

ஆ) வடமொழி

இ) தென்மொழி

ஈ ) உடல்மொழி

விடை : ஆ) வடமொழி

13) அணி இலக்கணம் பற்றிச் சிறப்பாகக்
கூறும் நூல்

அ) தண்டியலங்காரம்

ஆ) மாறனலங்காரம்

இ) குவலயானந்தம்

ஈ) தொன்னூல் விளக்கம்

விடை : அ) தண்டியலங்காரம்

14) தண்டியலங்காரம் கூறும்
பொருளணிகளின் எண்ணிக்கை

அ) 45

ஆ) 25

இ )  35

ஈ ) 25

விடை : இ )  35

15 ) " பீலிபெய் சாகாடும் அச்சிறும்
அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் " -
இக்குறட்பாவில் பயின்று வந்துள்ளஅணி

அ) நிரல்நிரையணி

ஆ) வேற்றுமையணி

இ ) உவமையணி

ஈ) பிறிதுமொழிதல் அணி

விடை : ஈ) பிறிதுமொழிதல் அணி

16) வேற்றுமை அணியின் வகைகள்

அ) 2

ஆ) 3

இ)4

ஈ) 6

விடை : அ) 2

17) கடலும் கடல் சார்ந்த இடமும்
குறிக்கும் திணை 

அ) குறிஞ்சி

ஆ) நெய்தல்

இ) முல்லை

ஈ) பாலை

விடை : ஆ) நெய்தல்

18) முன்பனிக் காலத்தைக் குறிக்கும்
மாதங்கள்

அ) மாசி, பங்குனி

ஆ) சித்திரை, வைகாசி

இ) ஆனி , ஆடி

ஈ) மார்கழி , தை

விடை : ஈ) மார்கழி , தை

19) மக்களின் அகவாழ்க்கைக்கு உரிய
உணர்ச்சிகள் அல்லது மன உணர்வுகளைப் பற்றிப் பேசுவது

அ) கருப்பொருள்

ஆ) உரிப்பொருள்

இ) புறப்பொருள்

ஈ) புறத்திணை

விடை : ஆ) உரிப்பொருள்

20) பழமொழியை முதுசொல்'
எனக்குறிப்பிடும் நூல்

அ) தொல்காப்பியம்

ஆ) நன்னூல்

இ) யாப்பருங்கலக்காரிகை

ஈ) சதுரகராதி

விடை : அ) தொல்காப்பியம்



***************    ***************   **********

வினா உருவாக்கம் 

திருமதி.இரா.மனோன்மணி , 

முதுகலைத் தமிழாசிரியை ,

அ.மே.நி.பள்ளி , செக்காபட்டி ,

திண்டுக்கல் 

***************    ***************   *********

Post a Comment

0 Comments