11 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - இயங்கலைத் தேர்வு - பகுதி - 2 , வினா & விடை / 11th TAMIL - PUTHFHAAKKAP PAYIRCHIK KATTAKAM - ONLINE TEST - PART - 2

 

11 ஆம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

இயங்கலைத் தேர்வு - பகுதி - 2

வினாக்களும் விடைகளும்

1) அரசனில்லை - இது எவ்வகைப் புணர்ச்சி

அ) ஈறுபோதல்

ஆ) இனமிகல்

இ) ஆதிநீடல்

ஈ) உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே

விடை : ஈ) உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே

2) ஈறுபோதல் விதிக்குச் சான்று

அ) இயல்பில்லை

ஆ) செம்மொழி

இ) பூங்கொடி

ஈ) கைம்மாறு

விடை : ஆ) செம்மொழி


3) பூஞ்சோலை - புணர்ச்சி விதி தருக.

அ) பூப்பெயர் முன் இனமென்மையுந் தோன்றும்
ஆ) ஈறுபோதல்
இ) இனமிகல்
 ஈ) ஆதிநீடல்

விடை :  

அ) பூப்பெயர் முன் இனமென்மையுந் தோன்றும்

4) எழுத்துகள் யாப்பிலக்கண அடிப்படையில்
வகைப்படும்

அ) 8
ஆ) 4
இ) 3
ஈ) 2

விடை : இ) 3

5) நிரையசைக்குச் சான்று

அ) கலாம்
ஆ) கல்
இ ) கால்
ஈ) க

விடை : அ) கலாம்

6 ) சீர் ----- வகைப்படும்

அ) 2
ஆ) 3
இ) 4
ஈ) 5

விடை :இ) 4

7) உறுப்பியல் , செய்யுளியல் என்பன -----
இலக்கணப் பிரிவுகளாகும்

அ) எழுத்து
ஆ) சொல்
இ) பொருள்
ஈ) யாப்பு

விடை : ஈ) யாப்பு

8) பொருளல்ல - வாய்பாடு

அ) புளிமாங்காய்
ஆ) தேமா
இ) புளிமா
ஈ) கருவிளங்காய்

விடை : அ) புளிமாங்காய்

9 ) தேமா , புளிமா ஆகியன

அ) விளச்சீர்
ஆ) மாச்சீர்
இ) கனிச்சீர்
ஈ) காய்ச்சீர்

விடை : ஆ) மாச்சீர்

10) நூலை + படி - சேர்த்து எழுதுக

அ) நூலைப்படி
ஆ) நூல்படி
இ) நூலைப்படி
ஈ) நூலினைப்படி

விடை : அ) நூலைப்படி

11) ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சத்திற்குப்பின் வல்லினம் -----

அ) மிகாது
ஆ) மிகும்
இ) வேறுபடும்
ஈ) இவற்றில் ஏதுமில்லை

விடை : ஆ) மிகும்

12) அ.இ, உ என்பன ------ எழுத்துகள்

அ) சுட்டு
ஆ) இன
இ) ஒற்றெழுத்து
 ஈ) நெடில் எழுத்து

விடை : அ) சுட்டு

13 ) ' கான்' என்பதன் பொருள் ----

அ) பார்
ஆ) கண்
இ) காடு
ஈ) பூ

விடை : இ) காடு

14) ' கொடு' என்பது ----- பொருளில் வரும்

அ) வாழ்த்துதல்
ஆ) வேண்டல்
இ ) வைதல்
ஈ) இருத்தல்

விடை : ஆ) வேண்டல்

15 ) பேசுபவர்களுக்குப் பொருள் புரியாத
வண்ணம் மயக்கம் தரும் சொற்கள்

அ) கேட்பொலிச்சொற்கள்
ஆ) உரிச்சொற்கள்
இ) இடைச்சொற்கள்
ஈ) மயங்கொலிச்சொற்கள்

விடை :ஈ) மயங்கொலிச்சொற்கள்

16) 'ண ' உச்சரிக்கும் முறை

அ) டண்ணகரம்
ஆ) றன்னகரம்
இ) தந்நகரம்
ஈ) னகரம்

விடை : அ) டண்ணகரம்

17) பணிதல் என்ற பொருளில் வருவது

அ) தால்
ஆ) தாள்
இ) தாழ்
ஈ) தான்

விடை : இ) தாழ்

18 ) யானையைக் குறிக்கும் சொல் -----

அ) பரி
ஆ) கரி
இ) கறி
ஈ) பறி

விடை :ஆ) கரி

19) அரன்' என்ற சொல் ------- ஐக் குறிக்கும்

அ) சரசுவதி
ஆ) பெருமாள்
இ) பிரம்மன்
ஈ) சிவன்

விடை : ஈ) சிவன்


20) வெண்சீர்கள்' ------ அழைக்கப்படுகின்றன

அ) காய்ச்சீர்கள்
ஆ) கனிச்சீர்கள்
இ) மாச்சீர்கள்
ஈ) விளச்சீர்கள்

விடை : அ) காய்ச்சீர்கள்


***************    ***************   **********

வினா உருவாக்கம் 

திருமதி.இரா.மனோன்மணி , 

முதுகலைத் தமிழாசிரியை ,

அ.மே.நி.பள்ளி , செக்காபட்டி ,

திண்டுக்கல் 

***************    ***************   *********

Post a Comment

0 Comments