11 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக்கட்டகம் - இயங்கலைத்தேர்வு - பகுதி 1 , வினா & விடை / 11th TAMIL - PUTHTHAAKKAP PAYIRCHI - PART 1 - ONLINE CERTIFICATE TEST - QUESTION & ANSWER

 


11 ஆம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

இயங்கலைத் தேர்வு - பகுதி - 1

வினாக்களும் விடைகளும்

1) " கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே

வாளொடு முன்தோன்றி மூத்தகுடி

தமிழ்க்குடி " எனக் குறிப்பிடும் நூல்

அ) நன்னூல்

ஆ) தொல்காப்பியம்

இ) புறப்பொருள் வெண்பா மாலை

ஈ) சதுரகராதி

விடை : இ) புறப்பொருள் வெண்பா மாலை


2) ' உலக இலக்கியம்' என்ற நூலில் கிரேக்க
இலக்கியத்திற்கும் , தமிழ்
இலக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு
காணப்படுகிறது என்று கூறியவர்

அ ) கா . அப்பாத்துரையார்
ஆ) அண்ணாமலையார்
இ) ஹீராஸ்
ஈ) பேரா.சுந்தரம்பிள்ளை

விடை : அ ) கா . அப்பாத்துரையார்

3 ) தமிழ் மொழி ----- பகுப்புகளை உடையது

அ ) 5
ஆ) 3
இ) 4
ஈ ) 2

விடைஆ) 3

4) " நாடக நன்னூல் நன்கு கடைபிடித்து"
என்ற அடிகள் இடம்பெற்ற நூல்

அ) பெரும்பாணாற்றுப்படை
ஆ) சிலப்பதிகாரம்
இ) மனோன்மணியம்
ஈ) நன்னூல்

விடை : ஆ) சிலப்பதிகாரம்

5 ) பண்ணோடு கலந்தும் தாளத்தோடு
கூடியும் இசைக்கப்படுவது

அ) இசைத்தமிழ்
ஆ) நாடகத்தமிழ்
இ) இயற்றமிழ்
ஈ) செந்தமிழ

விடை : அ) இசைத்தமிழ்

6) சங்க இலக்கியங்களை  ------- நூல்கள் 
என்று அழைப்பர்

அ ) கீழ்க்கணக்கு நூல்கள்
ஆ) மேற்கணக்கு நூல்கள்
இ) தற்கால நூல்கள்
ஈ) பிற்கால நூல்கள்

விடை : ஆ) மேற்கணக்கு நூல்கள்

7) வாழ்வை நெறிப்படுத்தும் அற
இலக்கியங்களைக் கொண்டவை
நூல்கள்

அ) பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
ஆ) பதினெண் மேற்கணக்கு நூல்கள்
இ) அகநூல்கள்
ஈ) புறநூல்கள்

விடை : அ) பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

8 ) உயிர் 12 ம் மெய் 18 ம் ஆகிய 30 எழுத்துக்கள் -------- ஆகும்.

அ) சார்பெழுத்து
ஆ) முதலெழுத்து
இ) ஒற்றெழுத்து
ஈ) வட்டெழுத்து

விடை : ஆ) முதலெழுத்து

9) சார்பெழுத்துகள் ----- வகைப்படும்.

அ) 8
ஆ) 3
இ) 10
ஈ ) 6

விடை : இ) 10

10) உயிரளபெடை ------- வகைப்படும்.

அ) 3
ஆ) 2
இ )4
ஈ) 5

விடை : அ) 3

11) செய்யுளில் ஓசை குறையாத போதும்
ஒருபெயர்ச்சொல் எச்சச்சொல்லாகத் திரிந்து
அளபெடுப்பது ----- அளபெடை

அ) சொல்லிசை
ஆ )  செய்யுளிசை
இ ) இன்னிசை
ஈ) இசைநிறை

விடை : அ) சொல்லிசை

12) கண்ண் கருவிளை - இதில் பயின்று
வந்துள்ள அளபெடை

அ) செய்யுளிசை
ஆ) சொல்லிசை
இ) ஒற்றளபெடை
ஈ) இன்னிசை அளபெடை

விடை : இ) ஒற்றளபெடை

13 ) ஐம்புலனுக்கும் மனதிற்கும் புலப்படும்
பொருட்களைக் குறிக்கும் சொல்

அ) பெயர்
ஆ) வினை
1 ) இடை
ஈ ) உரி

விடை : அ) பெயர்

14) கடிநகர் - இலக்கணக்குறிப்புத் தருக

அ) வினைத்தொகை
ஆ) இடைக்குறை
இ) உவமைத்தொகை
ஈ) உரிச்சொற்றொடர்

விடை :  ஈ) உரிச்சொற்றொடர்

15 ) திணை என்பதன் பொருள்

அ) ஒழுக்கம்
ஆ) வழி
இ) நெறி
ஈ) எதுவுமில்லை

விடை : அ) ஒழுக்கம்

16 ) " உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே "
எனச்சுட்டும் நூல்

அ) நன்னூல்
ஆ) தொல்காப்பியம்
இ) தொன்னூல் விளக்கம்
 ஈ) சதுரகராதி

விடை : ஆ) தொல்காப்பியம்

17) இடம் -----வகைப்படும்

அ) 3
ஆ ) 2
இ) 5
ஈ) 4

விடை : அ) 3

18) பகுதிக்கும் விகுதிக்கும் இடையில்
வருவது

அ) சந்தி
ஆ) விகுதி
 இ) இடைநிலை
ஈ ) விகாரம்

விடை : இ ) இடைநிலை

19 ) சந்தியின் மற்றொரு பெயர் -----

அ) புணர்ச்சி
ஆ) முதனிலை
இ )  வேர்ச்சொல்
ஈ ) விகாரம்

விடை : இ ) புணர்ச்சி 

20) காலம் கரந்த பெயரெச்சம் ------

அ) பண்புத்தொகை
ஆ) உருவகம்
இ) போலி
ஈ) வினைத்தொகை

விடை :  ஈ ) வினைத்தொகை 


***************    ***************   **********

வினா உருவாக்கம் 

திருமதி.இரா.மனோன்மணி , 

முதுகலைத் தமிழாசிரியை ,

அ.மே.நி.பள்ளி , செக்காபட்டி ,

திண்டுக்கல் 

***************    ***************   *********

Post a Comment

0 Comments