பத்தாம் வகுப்பு - தமிழ் - சமூக அறிவியல் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - வினா & விடை / 10th SOCIAL SCIENCE - REFRESHER COURSE MODULE -13 , QUESTION & ANSWER

 


பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல்

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 13

மதிப்பீடு

சரியான விடையை எடுத்து எழுதுக

1. கீழ்க்கண்டவற்றில் யார் மனிதநேயத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்

அ) லியனார்டோ டாவின்சி

ஆ) பிரான்சிஸ்கோ பெட்ராக்

இ) எராஸ்மஸ்

ஈ ) தாமஸ் மூர்

விடை : ஆ ) பிரான்சிஸ்கோ பெட்ராக்

2. வில்லியம் ஹார்வியின் கண்டுபிடிப்பு

அ) சூரியனே பிரபஞ்சத்தின் மையம்

ஆ) பூமியே பிரபஞ்சத்தின்மையம்

இ) புவியீர்ப்பு விசை

ஈ) ரத்தத்தின் சுழற்சி

விடை : ஈ ) ரத்தத்தின் சுழற்சி

3. பூமத்திய ரேகையை கடந்த முதல்மாலுமி

அ) மாலுமி ஹென்றி

ஆ) லோபோகோன்சல்வ்ஸ்

இ) பார்த்தலோமியோ டயஸ்

ஈ) கொலம்பஸ்

விடை : ஆ ) லோபோகோன்சல்வ்ஸ்

4.பசிபிக் பெருங்கடல் எனபெயரிட்டவர்

அ) கொலம்பஸ்

ஆ) அமெரிகோவெஸ்புகி

இ) பெர்டினாண்ட் மெக்கலன்

ஈ) வாஸ்கோடகாமா

விடை : இ ) பெர்டினாண்ட் மெக்கலன்

5. அமெரிக்க கண்டம் யாரின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது ?

அ) ஹெர்னான்டோகார்ட்ஸ்

ஆ) வாஸ்கோடகாமா

இ) கொலம்பஸ்

ஈ) அமெரிகோவெஸ்புகி

விடை : ஈ ) ஆமெரிகோ வெஸ்புகி

விடையளி

1. அச்சு இயந்திரங்களின் கண்டுபிடிப்பு ஐரோப்பாவில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன?

* மறுமலர்ச்சிக்கு தூண்டுகோலாய் அமைந்தன.

* நவீனமயமாதலை வேகப்படுத்தியது.

* தாலமியின் ' ஜியாகரபி ' என்ற நூல்  பல பிரதிகள் அச்சிடப்பட்டு சுற்றுக்கு விடப்பட்டன.

* புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கான அறிவு மிகப்பெரிய அளவில் அதிகரித்தது.

2. கொடுக்கப்பட்டுள்ள உலக வரைபடத்தில் கீழ்க்கண்ட வழித் தடங்களை குறிப்பிடுக.

(பார்த்தலோமியோ டயஸ், வாஸ்கோடகாமா,கொலம்பஸ் ,பெர்டினாண்ட் மெக்கலன்)

3. தொடக்ககால அச்சு இயந்திரத்திற்கும் நவீனகால அச்சு இயந்திரத்திற்கும் உள்ள வேறுபாடுகளை அறிக.

*தொடக்ககால அச்சு இயந்திரம்

* மரச்சட்டத்தில் எழுத்துருக்களைச் செதுக்கி அதை மையால் அமிழ்த்தி காகிதத்தில் அச்சு எடுத்தனர்.

* ஒரு புத்தகத்திற்குப் பயன்படுத்திய சட்டத்தை மற்ற புத்தகத்திற்குப் பயன்படுத்த முடியாது.

* மிகவும் அரிதாக இருந்தது.

* அதிக நேரம் எடுத்தது.

* தரம் நன்றாக இல்லை.

நவீனகால அச்சு இயந்திரம்

* இரும்பு சட்டம் பயன்படுத்தப்பட்டது.

* எழுத்துளை மற்ற புத்தகங்களுக்குப் பயன்படுத்த முடியும்.

* எளிதாகக் கிடைக்கப்பெற்றது

* ஒரு நிமிடத்திற்கு சுமார் 70 பக்கங்கள் வரை விரைவாக எடுக்கலாம்.

* புதிய மின்னணு கருவிகளை உபயோகிப்பதன் மூலம் வண்ணமயமாக விரும்பியபடி பிரதிகள் அச்சிடலாம்.


****************     ***********   ************

விடை உருவாக்கம் 

திருமதி.ச.இராணி , ப.ஆசிரியர் , 

அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி , 

இளமனூர் , மதுரை.

****************    *************   ************

வாழ்த்துகள் மாணவர்களே !

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

***************    ****************   ***********

Post a Comment

0 Comments