ஒன்பதாம் வகுப்பு - சமூக அறிவியல் - பொருளியல் ஒப்படைப்பு 2 - அலகு 2 , இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு - வினா & விடை / 9th SOCIAL SCIENCE - UNIT 2 - ASSIGNMENT - QUESTION & ANSWER

 


                          ஒப்படைப்பு - 2 

                               வகுப்பு:9

              பாடம்: சமூக அறிவியல்

                        (பொருளியல்)

அலகு-2 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

                               பகுதி-அ

1.ஒரு மதிப்பெண்வினா

1 முதன்மைத்துறை இவ்வாறு அழைக்கப்படுகிறது

அ)விவசாயத்துறை

ஆ) தொழிற்துறை

இ) பணிகள் துறை

ஈ) வருவாய்த்துறை

விடை : அ ) விவசாயத்துறை

2 ) பணியிடத்தைக் கணக்கிடுவதற்கு. வயது வரையிலான வயதைக் கணக்கிடலாம்.

அ) 12 - 60    ஆ) 15 - 60     இ )  21- 65     ஈ ) 5- 14

விடை : ஆ ) 15 - 60

3.குடிசைத் தொழில்கள் -----துறையைச் சார்ந்தது.

அ) ஒழுங்கமைக்கப்பட்டதுறைகள் 

ஆ) தனியார்துறைகள்

இ) ஒழுங்கமைக்கப்படாததுறை

ஈ) பொதுத்துறை

விடை : இ ) ஒழுங்கமைக்கப்படாததுறை

4.மூன்றாம் துறையில் அடங்குவது

அ) போக்குவரத்து    ஆ)காப்பீடு 

இ) வங்கியியல்   ஈ) அனைத்தும்

விடை : ஈ  ) அனைத்தும்

5. எந்தத்  துறையில் தொழிலமைப்புமுறை சேர்க்கப்படவில்லை

அ) முதன்மைத்துறை ஆ) இரண்டாம்துறை

இ) சார்புத்துறை     ஈ) தனியார்துறை

விடை : ஈ ) தனியார்துறை 

பொருத்துக

1 பொதுத்துறை - சேவை நோக்கம்

2 தனியார்துறை - இலாப நோக்கம்

3. முதன்மைத்துறை - கோழி வளர்ப்பு 

4. பணியமர்த்துவோர் - ஊதியம் தருவோர்

5. சார்புத்துறை  - வங்கியல்

                            பகுதி-ஆ

11. சிறுவினா

1 ) பொருளாதாரத்தில் தொழிலாளர் சக்தி என்றால் என்ன?

     உழைப்பாளர் குழு என்பது நாட்டு மக்களில் வேலையில் இருப்போரும்  , கூடவே வேலை செய்யும் திறன் பெற்ற நபர்களும் ஆவர்.

2 ) பொதுத்துறைமற்றும் தனியார் துறையை வேறுபடுத்துக.

*பொதுத்துறை 

* சேவை நோக்கம் கொண்டது.

* ஊதியம் அரசாங்கம் வழங்குகிறது.

* சொத்து அரசாங்கத்துக்குச் சொந்தம்.

தனியார்துறை 

* இலாப நோக்கம் கொண்டது.

* ஊதியம் உரிமையாளரால் வழங்கப்படுகிறது.

* தனி நபர்க்குச் சொந்தம்.

3 உழைப்பாளர் குழுக்களின் முக்கியத்துவத்தைக் கூறுக.

     உற்பத்தி சார்ந்த வேலையை மேற்கொள்வதற்கு உடல் ரீதியாக தகுதியானவர்கள் தேவை. மக்கள் தொகையில் குழந்தைகளும் வயது முதிர்ந்தவர்களும் பெரும்பகுதி இருந்தால் நாட்டு முன்னேற்றம் குறைவாக இருக்கும்.

4. பொருளாதாரத்திலுள்ள மூன்று துறைகள் யாவை?

* முதன்மைத்துறை

* இரண்டாம் துறை

* சார்புத்துறை

5 . ஒழுங்கமைக்கப்படாத துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் யாவை?

* குறைந்த கூலி கொடுக்கப்படுகிறது.

* தொடர்ச்சியாக வேலை கிடைக்காது.

* பெரும்பாலும் ஊதியத்துடன் விடுப்பு இருக்காது.

                             பகுதி இ

III. பெருவினா

விவரிக்க (அ) முதன்மைத்துறை

(ஆ) இரண்டாம்துறை

(இ) சார்புத்துறை

அ ) முதன்மைத்துறை

             விவசாயம் , காடுகள் , கால்நடை வளர்ப்பு , கோழி வளர்ப்பு , பால்பண்ணை , மீன் வளர்ப்பு போன்றவை.

ஆ ) இரண்டாம் துறை :

                   உற்பத்தி , சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகள் , கட்டுமானம் போன்றவை.

இ ) சார்புத்துறை :

             போக்குவரத்து , காப்பீடு , வங்கி , வணிகம் , தொலைத்தொடர்பு , வீட்டுமனை விற்பனை , அரசு மற்றும் அரசு சாரா சேவைகள்.

2 ஒழுங்கமைக்கப்பட்டமற்றும் ஒழுங்கமைக்கப்படாததுறைகளில் நிலவுகின்ற வேலை வாய்ப்பை ஒப்பிடுக.

ஒழுங்கமைக்கப்பட்ட துறை 

*  ஊழியர்களுக்குப் பணிப்பாதுகாப்பு உண்டு.

* நல்ல ஊதியம் 

* பதிவு செய்யப்பட்டது. அரசாங்க விதிகளையும் , ஒழுங்கு முறைகளையும் கொண்டுள்ள துறை 

* மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களைக் கொண்டு செயல்படும் துறை.

* ஊதியத்துடன் கூடிய விடுமுறை உண்டு.

ஒழுங்கமைக்கப்படாத துறைகள்.

* வேலை நிரந்தரம் கிடையாது.

* குறைந்த ஊதியம்

* பதிவு பெற்றவை அல்ல. விதிகளும் , ஒழுங்கு முறைகளும் இருந்தாலும் பின்பற்றப் படுவதில்லை. 

* வீட்டு உபயோகப் பொருட்கள் , சிறு மற்றும் குடிசைத்தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏராளமான எண்ணிக்கையிலான மக்களை உள்ளடக்கிய துறைகள்.

* ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப் படுவது இல்லை.

**************      *************   ************

விடைத்தயாரிப்பு 

திருமதி.ச.இராணி , பட்டதாரி ஆசிரியை , 

அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி , 

இளமனூர் , மதுரை.

******************     ********    ***************

Post a Comment

0 Comments