11 ஆம் வகுப்பு - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 10 , சொற்களைப் பிரித்தும் சேர்த்தும் எழுதுதல் - வினா & விடை / 11th TAMIL - REFRESHER COURSE MODULE - ACTIVITY - 10 - QUESTION & ANSWER

 

11 ஆம் வகுப்பு - தமிழ்

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 10

சொற்களைப் பிரித்தும்

சேர்த்தும் எழுதுதல்

கற்றல் விளைவுகள்

* சொற்களைப் பிரித்தும் சேர்த்தும் எழுத கற்றுக் கொள்ளுதல்.

ஆசிரியர் செயல்பாடு

ஆர்வமூட்டல் :

         கால்நடை என்னும் சொல்லை சேர்த்தும் பிரித்தும் எழுதுவதால் இருவேறு பொருள் தரும் சொல்லாக அமைந்திருப்பதைக் காண முடிகிறதா? என வினா எழுப்பி ஆர்வமூட்டல்.

கற்பித்தல் செயல்பாடுகள்

செயல்பாடு : 1

       தமிழ்ச்சொற்கள் சிலவற்றைச் சேர்த்தும் பிரித்தும் எழுதும்போது இருவேறு பொருள் தரும் தொடர்களாக உள்ளன . அவ்வகைச் சொற்களைத் தெரிந்து கொள்வதன் மூலம் நம் மொழி வளம் பெருகும்.

சான்று:

கானடை :

* கான் + அடை என்று பிரித்தால் காட்டைச் சேர்தல் என்னும் பொருள் தருகிறது.

* கான் + நடை என்னும்போது காட்டுக்கு நடத்தல் என்னும் பொருள் கிடைக்கிறது.

* கால் + நடை என்றானால் காலால் நடத்தல் என்று பொருள் தருகிறது.

செயல்பாடு : 2

பிண்ணாக்கு :

கடலை, எள் போன்றவற்றை அரைத்து எண்ணெய் எடுத்தபின் கிடைக்கும்.

பாம்பு தன் பின் நாக்கை நீட்டியது.

பலகையொலி :

பல கைகள் சேர்ந்து தட்டுவதால் பிறக்கும் ஒலி.

பலகை ஒலி - மரப்பலகையின் சத்தம்.

மாணவர் செயல்பாடு

* அறிவில்லாதவன் பிரித்தும் சேர்த்தும் எழுதுதல்.

* வைகை இரண்டு தொடராக எழுதிப் பழகுதல்.

* நஞ்சிருக்கும் - பிரித்தும் சேர்த்தும் எழுதி பயிற்சி பெற செய்தல்.

***************    ************   **************

                                   மதிப்பீடு

1. தங்கை- பிரித்தும் சேர்த்தும் எழுதுக.

தன் + கை = தனது கை

தங்கை -  உடன் பிறந்த தங்கை

2. எட்டுவரை, எள்துவரை- விளக்குக.

எட்டுவரை - எட்டு என்ற  எண் ( 8 ) வரை

எள்துவரை - எள் மற்றும் துவரை ஆகிய தானியங்கள்.

*************    ************   **************


Post a Comment

1 Comments